கவிஞன்

bookmark

தெள்ளமிர்த தாரையென மதுரம் கதித்தபைந் 
      தேன்மடை திறந்த தெனவே 
செப்புமுத் தமிழினொடு நாற்கவிதை நாற்பொருள் 
      தெரிந்துரைசெய் திறமை யுடனே 
விள்ளரிய காவியத் துட்பொருள் அலங்காரம் 
      விரிவிலக் கணவி கற்பம் 
வேறுமுள தொன்னூல் வழக்கும்உல கத்தியல்பும் 
      மிக்கப்ர பந்த வண்மை
உள்ளவெல் லாமறிந் தலையடங் குங்கடலை 
      யொத்ததிக சபைகண் டபோ 
தோங்கலை யொலிக்கின்ற கடல்போற்ப்ர சங்கம 
      துரைப்பவன் கவிஞ னாகும்! 
அள்ளிவிடம் உண்டகனி வாயனே! நேயனே! 
      அமலனே! அருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!