திருநீடூர்

bookmark

பண் - தக்கேசி

திருச்சிற்றம்பலம்

570

ஊர்வ தோர்விடை ஒன்றுடை யானை

ஒண்ணு தல்தனிக் கண்ணுத லானைக்
கார தார்கறை மாமிடற் றானைக்

கருத லார்புரம் மூன்றெரித் தானை
நீரில் வாளை வரால்குதி கொள்ளும்

நிறைபு னற்கழ னிச்செல்வ நீடூர்ப்
பாரு ளார்பர வித்தொழ நின்ற

பரம னைப்பணி யாவிட லாமே.

7.56.1

571

துன்னு வார்சடைத் தூமதி யானைத்

துயக்கு றாவகை தோன்றுவிப் பானைப்
பன்னு நான்மறை பாடவல் லானைப்

பார்த்த னுக்கருள் செய்தபி ரானை
என்னை இன்னருள் எய்துவிப் பானை

ஏதி லார்தமக் கேதிலன் றன்னைப்
புன்னை மாதவி போதலர் நீடூர்ப்

புனித னைப்பணி யாவிட லாமே.

7.56.2

572

கொல்லும் மூவிலை வேலுடை யானைக்

கொடிய காலனை யுங்குமைத் தானை
நல்ல வாநெறி காட்டுவிப் பானை

நாளும் நாம்உகக் கின்ற பிரானை
அல்ல லில்லரு ளேபுரி வானை

ஆடு நீர்வயல் சூழ்புனல் நீடூர்க்
கொல்லை வெள்ளெரு தேறவல் லானைக்

கூறி நாம்பணி யாவிட லாமே.

7.56.3

573

தோடு காதிடு தூநெறி யானைத்

தோற்ற முந்துறப் பாயவன் றன்னைப்
பாடு மாமறை பாடவல் லானைப்

பைம்பொ ழிற்குயில் கூவிட மாடே
ஆடு மாமயில் அன்னமோ டாட

அலைபு னற்கழ னித்திரு நீடூர்
வேட னாயபி ரானவன் றன்னை

விரும்பி நாம்பணி யாவிட லாமே.

7.56.4

574

குற்ற மொன்றடி யாரிலர் ஆனாற்

கூடு மாறத னைக்கொடுப் பானைக்
கற்ற கல்வியி லும்மினி யானைக்

காணப் பேணும வர்க்கெளி யானை
முற்ற அஞ்சுந் துறந்திருப் பானை

மூவ ரின்முத லாயவன் றன்னைச்
சுற்று நீள்வயல் சூழ்திரு நீடூர்த்

தோன்ற லைப்பணி யாவிட லாமே.

7.56.5

575

காடில் ஆடிய கண்ணுத லானைக்

கால னைக்கடிந் திட்டபி ரானைப்
பாடி ஆடும்பரி சேபுரிந் தானைப்

பற்றி னோடுசுற் றம்மொழிப் பானைத்
தேடி மாலயன் காண்பரி யானைச்

சித்த முந்தெளி வார்க்கெளி யானைக்
கோடி தேவர்கள் கும்பிடு நீடூர்க்

கூத்த னைப்பணி யாவிட லாமே.

7.56.6

576

விட்டி லங்கெரி யார்கையி னானை

வீடி லாதவி யன்புக ழானைக்
கட்டு வாங்கந் தரித்தபி ரானைக்

காதி லார்கன கக்குழை யானை
விட்டி லங்குபுரி நூலுடை யானை

வீந்த வர்தலை யோடுகை யானைக்
கட்டி யின்கரும் போங்கிய நீடூர்க்

கண்டு நாம்பணி யாவிட லாமே.

7.56.7

577

மாய மாய மனங்கெடுப் பானை

மனத்து ளேமதி யாய்இருப் பானைக்
காய மாயமும் ஆக்குவிப் பானைக்

காற்று மாய்க்கன லாய்க்கழிப் பானை
ஓயு மாறுரு நோய்புணர்ப் பானை

ஒல்லை வல்வினை கள்கெடுப் பானை
வேய்கொள் தோள்உமைப் பாகனை நீடூர்

வேந்த னைப்பணி யாவிட லாமே.

7.56.8

578

கண்ட முங்கறுத் திட்டபி ரானைக்

காணப் பேணும வர்க்கெளி யானைத்
தொண்ட ரைப்பெரி தும்முகப் பானைத்

துன்ப முந்துறந் தின்பினி யானைப்
பண்டை வல்வினை கள்கெடுப் பானைப்

பாக மாமதி யாயவன் றன்னைக்
கெண்டை வாளை கிளர்புனல் நீடூர்க்

கேண்மை யாற்பணி யாவிட லாமே.

7.56.9

579

அல்லல் உள்ளன தீர்த்திடு வானை

அடைந்த வர்க்கமு தாயிடு வானைக்
கொல்லை வல்லர வம்மசைத் தானைக்

கோல மார்கரி யின்னுரி யானை
நல்ல வர்க்கணி யானவன் றன்னை

நானுங் காதல்செய் கின்றபி ரானை
எல்லி மல்லிகை யேகமழ் நீடூர்

ஏத்தி நாம்பணி யாவிட லாமே.

7.56.10

580

பேரோர் ஆயிர மும்முடை யானைப்

பேரி னாற்பெரி தும்மினி யானை
நீரூர் வார்சடை நின்மலன் றன்னை

நீடூர் நின்றுகந் திட்டபி ரானை
ஆரூ ரன்னடி காண்பதற் கன்பாய்

ஆத ரித்தழைத் திட்டவிம் மாலை
பாரூ ரும்பர வித்தொழ வல்லார்

பத்த ராய்முத்தி தாம்பெறு வாரே.

7.56.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சோமநாதேசுவரர், தேவியார் - வேயுறுதோளியம்மை.

திருச்சிற்றம்பலம்