திருக்கழுக்குன்றம் – திருத்தாண்டகம்

bookmark

திருச்சிற்றம்பலம்

908

மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை

முதுபிணக்கா டுடையானை முதலா னானை
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோனை

ஆலால முண்டுகந்த ஐயன் றன்னைப்
பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்

புணர்வரிய பெருமானைப் புனிதன் றன்னைக்
காவலனைக் கழுக்குன்ற மமர்ந்தான் றன்னைக்

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

6.92.1

909

பல்லாடு தலைசடைமே லுடையான் றன்னைப்

பாய்புலித்தோ லுடையானைப் பகவன் றன்னைச்
சொல்லோடு பொருளனைத்து மானான் றன்னைச்

சுடருருவில் என்பறாக் கோலத் தானை
அல்லாத காலனைமுன் னடர்த்தான் றன்னை

ஆலின்கீழ் இருந்தானை அமுதா னானைக்
கல்லாடை புனைந்தருளுங் காபா லியைக்

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

6.92.2

இப்பதிகத்தில் முதலிரண்டு செய்யுட்கள் தவிர
ஏனைய செய்யுட்கள் மறைந்து போயின.

6.92.3-10

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதகிரீசுவரர்,
தேவியார் - பெண்ணினல்லாளம்மை.

திருச்சிற்றம்பலம்