பிறவிக்குணம் மாறாது

bookmark

கலங்காத, சித்தமும், செல்வமும், ஞாலமும், 
      கல்வியும், கருணை விளைவும், 
கருதரிய வடிவமும் போகமும், தியாகமும், 
      கனரூபம் உளமங் கையும், 
அலங்காத வீரமும், பொறுமையும், தந்திரமும், 
      ஆண்மையும், அமுத மொழியும், 
ஆனஇச் செயலெலாம் சனனவா சனையினால் 
      ஆகிவரும் அன்றி, நிலமேல் 
நலம்சேரும் ஒருவரைப் பார்த்தது பெறக்கருதின் 
      நண்ணுமோ? ரஸ்தா ளிதன் 
நற்சுவை தனக்குவர வேம்புதவ மேநெடிது 
      நாள்செயினும் வாரா துகாண்! 
அலங்காரம் ஆகமலர் கொன்றைமா லிகைசூடும் 
      அண்ணலே! அருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே.