வறுமையின் கொடுமை

bookmark

மேலான சாதியில் உதித்தாலும் அதிலென்ன?
      வெகுவித்தை கற்றும் என்ன? 
மிக்கஅதி ரூபமொடு சற்குணம் இருந்தென்ன? 
      மிகுமானி ஆகில் என்ன? 
பாலான மொழியுடையன் ஆய்என்ன? ஆசார 
      பரனாய் இருந்தும் என்ன? 
பார்மீது வீரமொடு ஞானவான் ஆய்என்ன? 
      பாக்கியம் இலாத போது; 
வாலாய மாய்ப்பெற்ற தாயும் சலித்திடுவள்! 
      வந்தசுற் றமும்இ கழுமே! 
மரியாதை இல்லாமல் அனைவரும் பேசுவார்! 
      மனைவியும் தூறு சொல்வாள்! 
ஆலாலம் உண்டகனி வாயனே! நேயனே! 
      அனகனே! அருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நி னை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!
----------