வறுமையின் கொடுமை

மேலான சாதியில் உதித்தாலும் அதிலென்ன?
வெகுவித்தை கற்றும் என்ன?
மிக்கஅதி ரூபமொடு சற்குணம் இருந்தென்ன?
மிகுமானி ஆகில் என்ன?
பாலான மொழியுடையன் ஆய்என்ன? ஆசார
பரனாய் இருந்தும் என்ன?
பார்மீது வீரமொடு ஞானவான் ஆய்என்ன?
பாக்கியம் இலாத போது;
வாலாய மாய்ப்பெற்ற தாயும் சலித்திடுவள்!
வந்தசுற் றமும்இ கழுமே!
மரியாதை இல்லாமல் அனைவரும் பேசுவார்!
மனைவியும் தூறு சொல்வாள்!
ஆலாலம் உண்டகனி வாயனே! நேயனே!
அனகனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நி னை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
----------