வேப்பிலை எண்ணெய் பசை நீங்க
வேப்பிலை சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.
எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்ற மருந்துப் பொருளாகும்.
இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கும்.
வேப்பிலையை பறித்து வெதுவெதுப்பான நீரில் இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
காலையில் அந்த இலையை மைய அரைத்துக்கொண்டு அதனுடன் சில துளிகள் பால் விட்டு பேஸ்ட் போல செய்யவும்.
இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் ஊறவைக்கவும்.
பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ முகம் பொலிவு பெறும்.
