
விளாம் மர இலை கருகருவென வளர

முடி கொட்டும் பிரச்சனையைப் போக்க 50 கிராம் விளாம் மர இலை, 100 கிராம் சுருள் பட்டை, 2 டீஸ்பூன் வெந்தயம், 10 கிராம் வெட்டிவேர் ஆகியவற்றை கால் லிட்டர் தேங்காய் எண்ணெயில் போட்டு ஒரு வாரம் தொடர்ந்து வெயிலில் வைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
பின்னர் இந்த தைலத்துடன் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து தினந்தோறும் தலைமுடியின் வேர்க்கால்கள் முதல் அடி முடி வரை படும்படி தடவி வந்தால் முடி கொட்டுவது நிற்பதுடன், கருகருவென வளர தொடங்கும்.