மிதிலைக் காட்சிப் படலம் - 599
இருவரும் மிக்க காதல் கொள்ளல் (599-602)
599.
நோக்கிய நோக்கு எனும் நுதி கொள் வேல் இணை
ஆக்கிய மதுகையான் தோளின் ஆழ்ந்தன;
வீக்கிய கனை கழல் வீரன் செங்கணும்
தாக்கு அணங்கு அனையவள் தனத்தில் தைத்தவே.
நோக்கிய- (அவ்வாறு சீதை) பார்த்த; நோக்கு எனும் -
பார்வையாகிய; நுதிகொள் வேல் இணை - கூரிய இரண்டு வேல்கள்;
ஆக்கிய மதுகையான் - ஆக்கம் பெற்ற வன்மையுடைய இராமனின்;
தோளின் ஆழ்ந்தன - தோள்களிலே அழுந்தின; வீக்கிய
கணைகழல் - ஒலிக்கும் வீரக்கழல் கட்டிய; வீரன் செங்கணும்
- வீரனான இராமனுடைய சிவந்த கண்களும்; தாக்கு அணங்கு
- பிறரை வேட்கையால் தாக்குகின்ற மோகினியாகிய பெண்
தெய்வத்தை; அனையவள் - போன்ற சீதையின்; தனத்தில்
தைத்த - கொங்கைகளில் தாக்கின.
இராமன். சீதை ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் கண்களால்
பருகினர். ஓர் ஆவிற்கு இரு கோடுபோல ஒத்த காதல்
கொண்டவராயினர். ‘கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின்
வாய்ச்சொற்கள். என்ன பயனும் இல’ - குறள்:1100
தாக்கணங்கு: பார்க்கின்ற ஆடவர்க்கு வேட்கையை விளைவித்து
அதனால் அவர்களைத் தாங்கும் தேவதை. 36
