மிதிலைக் காட்சிப் படலம் - 598

bookmark

இராமபிரானும் சீதாதேவியும் ஒருவரையொருவர்
கண்டுகொள்ளல்

598.

எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி.
கண்ணொடு கண் இணை கவ்வி. ஒன்றை ஒன்று
உண்ணவும். நிலைபெறாது உணர்வும் ஒன்றிட.
அண்ணலும் நோக்கினான்: அவளும் நோன்கினாள்.
 
எண்ண   அரு நலத்தினாள்- அழகின் எல்லை இதுதான்   என
மனத்தால்  நினைப்பதற்கும்  அரிய  அழகுடைய   சீதை; இனையள்
நின்றுழி -  இத் தன்மையுடையவளாய்  நின்றபொழுது்;  கண்ணொடு
ஒருவர்  கண்களோடு்; கண்இணை  - மற்றொருவர் கண்கள்;  கல்வி
- கவர்ந்து பற்றிக்கொண்டு்; ஒன்றை ஒன்று உண்ணவும் -   ஒன்றை
ஒன்று கவர்ந்து சுவைக்கவும்; உணர்வும் - இருவரது அறிவும்;  நிலை
பெறாது -    (தம்தம்   இடங்களில்)   நிலைபெற்று    இருக்காமல்;
ஒன்றிட  (ஒன்றையொன்று   கூடி)    ஒன்றுபடவும்;   அண்ணலும்
நோக்கினான் - இராமனும்   (சீதையைப்)   பார்த்தான்;   அவளும்
நோக்கினாள்  - சீதையும் (இராமனைப்) பார்த்தாள்.

இராமனும் சீதையும். இராமனது பார்வை சீதைமேல் செல்ல. அவள்
கண்  இராமன்  மேல்  பாய்.  அப்போது இருவரது  மனவுணர்ச்சியும்
ஒன்றுபட்டு ஒரு தன்மைத்தான காதலைக் கொண்டது புலனாகும்.   35