பூக் கொய் படலம் - 1009
ஒரு பெண்ணின் புருவக்கடை முனிவரையும்
வெல்லும்
கலிவிருத்தம்
1009.
‘ஊக்கம் உள்ளத்து உடைய முனிவரால்
காக்கல் ஆவது. காமன் கை வில்’ எனும்
வாக்கு மாத்திரம்; அல்லது. வல்லியில்
பூக் கொய்வாள் புருவக் கடை போதுமே!
‘உள்ளத்து ஊக்கம் உடைய - (தவம் புரிவதில்) மனத்தில் ஊக்கம்
(மிகக்) கொண்ட; முனிவரால் - முனிவர்களிடத்தில்; காமன் கை வில்
காக்கல் ஆவது எனும் - காமன் வில்லின் ஆற்றலைக் காக்கத் தக்க
ஆற்றல் உண்டு என்று (உலகில்) சொல்லப்படுகின்ற; வாக்குமாத்திரம்
அல்லது - வாய்ச் சொல்மட்டும் (பிரபலமே) யன்றி (உண்மையை
ஆராய்ந்தால் அம்முனிவர்களின் ஆற்றலைப் பொடியாக்குதற்கு);
வல்லியில் பூக்கொய்வாள் - பூங்கொடிகளிலிருந்து பூக்களைக்
கொய்யும் ஒருத்தியின்; புருவக் கடைபோதும் - புருவத்தின் நுனிப்
பகுதியின் கடைப் பார்வையே போது மானதாகும்.
முனிவரால் - உருபு மயக்கம். “கண்களவு கொள்ளும் சிறு நோக்கம்
காமத்தின் செம்பாகம் அன்று பெரிது” (திருக். 1092) ஆதலின்.
முனிவர்களின் தவமுயற்சியை யழிக்கப் புருவ வில்லை மகளிர்
முழுதும் வளைக்கத் தேவையின்றிக் கடைப்பகுதியின் வளைப்பே
போதுமென்பார். “புருவக்கடை போதுமே” என்றார் - ஏ- அசை.
“கறையடிக் களி யானையின் வரவினைக் கண்டு. மறுகின் உற்றவர்
இரிதர மணி மருங்கிடல் போல். உறு தவத்தினர் அறிந்தனர் ஓட
ஒண்ணுதற்கு. நறு மலர்ப் பதத்து அணிந்தனள் சிலம்பு ஒரு நங்கை”
(பிரபு. லீலை) எனும் பாடல் ஒப்பு நோக்கற்பாலது. 35
