பதவியேற்றல்
1924ல் இலெனின் இறந்ததால் அந்த பதவிக்கான போட்டியில் ஸ்டாலினும் இடிராட்சுகியும் இறங்கினர். ஸ்டாலினும் காமனேவும் சினோவ்யேவும் தொழிற்துறை மேம்பாடடைய வேளாண்மையும் அதை சார்ந்த விவாசாயிகள் மற்றும் இதர சமூகத்தைனரின் வளர்ச்சியும் முக்கியம் எனக் கூறி வந்தனர். அதை ஸ்டாலின் எதிர்த்துடன் ஒரே நாட்டில் சமவுடைமை என்னும் தத்துவத்தை முன்மொழிந்தார்.[2] ஆனால் அதை எதிர்த்த இடிராட்சுகி தொழிற்துறை வளர்ச்சி முதன்மை பெற வேண்டும் என்றும் அதில் உலகப்புரட்சி தேவை எனவும் கூறினார். ஆனால் ஸ்டாலினின் அரசியல் வளர்ச்சியே சிறந்திருந்தது. இதனால் அவரின் சகாக்களான காமனேவும் சினோவ்யேவும் ஸ்டாலினுக்கு எதிராக செயல்பட்டனர். ஆனால் அனைத்தையும் தாண்டி ஸ்டாலினே ஆட்சியை பிடித்தார்.
