நெப்போலியன் - 5
சிக்கனம் நெப்போலியன் தன் சொந்த வாழ்வில் சிக்கனவாதியாக வாழ்ந்துள்ளார். எப்போதும் தேவைக்கேற்ப வாழுங்கள், வீட்டில் சிக்கனமாக இருங்கள், பொது இடத்தில் சிறப்பாக இருங்கள் என்பதுதான் நெப்போலியனின் அறிவுரையாகும்.
இருவேளை உணவு மட்டுமே உண்பார் நெப்போலியன். இவரது வருமானத்தில் சேமிப்புதான் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கும். அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள் பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று இல்லாமல், நாம் வாழ்ந்ததற்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும். வெறும் வார்த்தையாலோ, பேச்சாலோ அல்லாமல் வாழ்ந்து காட்டி வரலாற்றில் இடம்பிடித்துள்ளார் நெப்போலியன். இவர் வடிவமைத்த சட்டம் தற்போதும் பல நாடுகளாலும், சட்டக் கல்லூரி, சட்டப் பள்ளிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. நெப்போலியன் தனது படைகளால்தான் புகழ்பெற்றார். ஆனால், அந்த படைகளை நடத்திச் செல்ல அவரது ஒருங்கிணைப்பு, நிர்வாகத்திறன், தலைமைப் பண்பு போன்றவைதான் உதவின. இந்த திறன்களை மாணவர்களாகிய நாமும் கையாண்டு நமது லட்சியத்தின் பாதையில் செல்வோம்.
