நெப்போலியன் - 4
ஃபிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் நிகழ்ந்த மாற்றங்களை உறுதிப்படுத்தி ஃபிரெஞ்சு நடுத்தர வகுப்பினர் பெற்ற நலன்களை நிலைப்படுத்துவதற்கு நெப்போலியனின் காலம் தக்க காலமாக இருந்ததெனக் கருதப்படுகின்றன. 1815இல் ஃபிரெஞ்சு குடியரசு இறுதியாகத் திரும்பவும் நிலை நிறுத்தப்பட்டபோது, இம்மாற்றங்கள் எவ்வளவு நிலை பெற்றுவிட்டனவென்றால், பழைய ஆட்சியின் சமூக நிலைக்குத் திரும்பிச் செல்வது நிலைக்குத் திரும்பிச் செல்வது நினைத்துக்கூடப் பார்க்க முடியாதிருந்தது. மிக முக்கியமான மாற்றங்கள் நெப்போலியன் ஆட்சி ஏற்பட்டபோது, புரட்சிக்கு முந்திய நிலைக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. ஆயினும் நெப்போலியன் முடியாட்சி ஆர்வமுள்ளவராக இருந்தபோதிலும், ஃபிரெஞ்சுப் புரட்சியின் குறிக்கோள்களை ஐரோப்பா முழுவதும் பரப்புவதில் முக்கிய பங்கேற்றார் என்பதில் ஐயமில்லை.
பிரெஞ்ச் தளபதி என்றதுமே நம் கண் முன் தோன்றுபவர் நெப்போலியன்தான். நெப்போலியன் போனபார்ட் சிறந்த ஒருங்கிணைப்பாளராகவும், நிர்வாகியாகவும், தலைமைப் பண்பு மிக்கவராகவும் திகழ்ந்தார். வரலாறுகள் சொல்லும் பல தகவல்கள் வெறும் வரலாறுகளாகவே இருக்கும். ஆனால், நெப்போலியனைப் பற்றிய வரலாறு, நம் கல்விக்கு வழிகாட்டியாகவும் உள்ளது. வாழ்வின் இத்தனை உயரத்திற்குச் சென்ற நெப்போலியனின் பல நல்ல குணநலன்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. அவற்றை மாணவர்களும் வளர்த்துக் கொண்டால், பல உயரிய பதவிகளை அடையலாம்.
சிறு வயதில் இருந்தே புத்தகங்களை காதலிக்கத் துவங்கிவிட்டார் நெப்போலியன். இவரது அறிவுத் தேடல் எப்போதுமே அடங்கவில்லை. பிரெஞ்ச் சக்ரவர்த்தியாக கன நேரமும் ஓய்வின்றி கடுமையாக உழைத்த நாட்களிலும் சரி, செயின்ட் ஹெலெனாவில் இருந்த சிறைச்சாலையில் தன் இறுதி நாட்களை கழித்த போதும் சரி. அவர் எப்போதும் புத்தகங்களை விட்டு விலகியதில்லை. நெப்போலியன், தான் பேரரசராக இருக்கும் போதும் புத்தகங்கள் படிப்பதை மறக்கவில்லை. அவரது அரண்மனையில் அதிக எண்ணிக்கையிலான புத்தகங்கள் அடங்கிய நூலகத்தை பராமரித்து வந்தார்.
1808ஆம் ஆண்டுகளில் மிக இக்கட்டான போர் தருணத்தில் படைகளை நடத்திச் சென்றிருந்த நெப்போலியன் தன் நூலக பொறுப்பாளருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், நடமாடும் நூலகம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். 1000 புத்தகங்களை மார்ஜின்கள் எதுவும் இன்றி மிகவும் சிறிய எழுத்துருக்களால் பிரின்ட் செய்து அனுப்பவும் என்று இருந்தது. அதன்படி, அவர் எங்கு படைகளுடன் சென்றாலும், அங்கு இந்த நூலகமும் இருக்கும்.
வாழ்ந்து மிக உயரிய இடத்தை அடைந்து, இறுதி காலத்தை அடையும் வரை தனது அறிவுப் பசியை வளர்த்துக் கொண்டு இருந்த நெப்போலியனை போன்று நாமும் புத்தகங்கள் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். தேர்ந்தெடுத்து படித்தல் புத்தகம் படிப்பது என்றால் எதையாவது ஒன்றை படித்துக் கொண்டே இருப்பது அல்ல. தேர்ந்தெடுத்து படிப்பது தான் முக்கியம். தேவையில்லாத புத்தகங்களை எல்லாம் படித்து நேரத்தை வீணடிப்பதை விட, நமது நேரத்தை பொன்னானதாக மாற்றும் புத்தகங்களை தேர்ந்தெடுத்து படிக்கும் அறிவு நமக்கு வளர வேண்டும். அறிவையும், திறனையும் வளர்க்கும் வகையிலான புத்தகங்களையே நெப்போலியன் வாசித்தார். அதேப்போல, உங்கள் ஆர்வத்திற்கும், திறமைக்கும் ஏற்ற புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும்.
நேர மேலாண்மை மாறி வரும் நாகரீக உலகில், பாடப்பிரிவுகளில் நேர மேலாண்மை என்பது ஒரு கடினமானப் பாடமாக உள்ளது. ஆனால், நெப்போலியன் தன் வாழ் நாள் முழுவதும் நேர மேலாண்மையின் தளபதியாக இருந்தார். அவர் ஒரு சிறந்த வழிகாட்டியாக வாழ்ந்துள்ளார். இந்த நிமிடத்தில் வாழுங்கள் நெப்போலியனின் மிக முக்கியமான வாழ்க்கை தத்துவம் அது. எப்பொழுது ஏதாவது ஒரு பிரச்சினை கண் முன் வருகிறதோ, அப்பொழுது மற்ற எல்லாவற்றையும் அவர் மறந்து விடுவார், அந்த பிரச்சினை பற்றிய எல்லா மூலை முடுக்கு விஷயங்களையும் ஆராய்ந்து அதற்கான வழியைத் தேடுவார்.
