நகர் நீங்கு படலம் - 1835

இராமன் ஆற்றுதல் (1835-1836)
1835.
சோர்வாளை, ஓடித் தொழுது
ஏந்தினன்; துன்பம் என்னும்
ஈர் வாளை வாங்கி, மனம்
தேறுதற்கு ஏற்ற செய்வான்;
‘போர் வாள் அரசர்க்கு இறை
பொய்த்தனன் ஆக்ககில்லேன்;
கார்வான்நெடுங் கான் இறை
கண்டு, இஙன் மீள்வென்’ என்றான்.
சோர்வாளை - தளர்கின்ற சுமித்திரையை; தொழுது - (இராமன்) மத
வணங்கி ஓடி ஏந்தினன் - விரைந்து சென்று தாங்கிக்கொண்டான்; துன்பம்
என்னும் ஈர்வாளை வாங்கி - (அவளது) துயர் என்கிற மனத்தை
அறுக்கும் வாளை வெளியே எடுத்து; மனம்தேறுதற்கு - மனம்
தெளிவடைவதற்கு; ஏற்ற செய்வான் - தக்க செயல்களைச்செய்பவனாய்;
‘போர் வாள் அரசர்க்கு இறை - போர் செய்வதில் வல்லவாளை
உடையசக்கரவர்த்தியை; பொய்த்தனன் ஆக்ககில்லேன் - சத்தியம்
தவறியவனாகச் செய்யமுடியாதவனாய் உள்ளேன்; கார்வான் நெடுங்கானம்-
கரிய மேகம் சூழ்ந்த பெரியகாட்டை; இறைகண்டு - சிறிது பார்த்துவிட்டு;
இஙன் மீள்வென்’ -இவ்விடத்தே திரும்புவேன்; என்றான் -.
‘இறை’ என்பது சிறிது நேரம் என்பதாம். அவள் மனம் தேறச்
சொல்கின்றான் ஆதலின் 14 ஆண்டுகளை ‘இறை’ எனக் கூறினான். இஙன்-
இங்ஙன் என்பதன்விகாரம். 140