நகர் நீங்கு படலம் - 1787

வசிட்டன்சொல் கேட்ட மக்கள் நிலை (1787-1805)
இராமன் காடு செல்வது கேட்ட மக்கள் துயர்நிலை
1787.
வார் ஆர் முலையாரும்,
மற்று உள்ள மாந்தர்களும்,
ஆராத காதல்
அரசர்களும், அந்தணரும்,
பேராத வாய்மைப்
பெரியோன் உரை செவியில்
சாராத முன்னம்,
தயரதனைப்போல் வீழ்ந்தார்.
பேராதவாய்மைப் பெரியோன் உரை - பிறழ்ந்து போகாத
உண்மைக்கு உறைவிடமானவசிட்ட முனிவனது வார்த்தை; செவியில்
சாராத முன்னம் -(தங்கள்) காதுகளில் சேர்வதற்கு முன்னமே; ஆராத
காதல் அரசர்களும்- (இராமனதுமுடிசூட்டு விழாவில்) அடங்காத அன்பை
உடைய அரசர்களும்; அந்தணரும் - வேதியரும்; மற்று உள்ள
மாந்தர்களும் - வேறு உள்ள மனிதர்களும்; வார்ஆர் முலையாரும் -
கச்சணிந்த தனத்தையுடைய மகளிரும்; தயரதனைப் போல்வீழ்ந்தார்-
மற்றுள்ள மாந்தர்கள் - அமைச்சர், சேனைத் தலைவர், தூதுவர்
முதலியவர். பெண்டிர்துன்பம் பெரிதாய்த் தோன்றுமாதலின் செய்யுளில்
முதற்கண் உரைக்கப்பட்டது. தயரதன்தன்மகன் காரணமாகத் துன்பத்தில்
ஆழ்ந்தது போலவே அத்தகைய அன்புடையவர்கள் இவர்களும்ஆதலின்
‘தயரதனைப் போல் ’ துன்புற்றார் என்றார். அதனையே ‘ஆராத காதல்’
எனவும் கூறினார். 92