நகர் நீங்கு படலம் - 1775

1775.
‘ “வீட்டுண்டு அலறும் குரலால்,
வேழக் குரல் அன்று எனவே
ஓட்டந்து எதிரா, ‘ நீ யார்?’
என, உற்ற எலாம் உரையா,
வாட்டம் தரும் நெஞ்சினன் ஆய்,
நின்றான் வணங்கா, வானோர்
ஈட்டம் எதிர் வந்திடவே,
இறந்து ஏகினன் விண்ணிடையே.
‘வீட்டுஉண்டு - அம்பு விடுதலால் அடிபட்டு; அலறும்குரலால் -
கதறுகின்றசப்தத்தால்; வேழக் குரல் அன்று எனவே- யானையின் குரல்
அன்று என்று கருதி; ஓட்டந்து - ஓடி; எதிரா- (உங்கள் மகனைச்)
சந்தித்து; ‘நீ யார்’ என -நீ யார் என்று(நான் கேட்க குமரன்); உற்ற
எலாம் உரையா - நடந்தவை அனைத்தையும்சொல்லி; வாட்டம்தரு
நெஞ்சினனாய் - வாடிப் போன மனம் உடையவனாகி; வணங்கா
நின்றான்- உங்களிருவருக்கும் வணக்கம் தெரிவித்து, பேச்சு அடங்கினான்;
வானோர் ஈட்டம் எதிர் வந்திட -தேவர்கள்கூட்டம் எதிர்வந்து
வரவேற்க; இறந்துவிண்ணிடை - இறந்து மேல்உலகத்தின்கண்;
ஏகினன் - சென்றான்:
வாட்டம் தரும் நெஞ்சு - தன்னைப் பிரிந்தமையால் கண் இழந்த
பெற்றோர் முதுமையில்உதவுவாரின்றி வாடுவர் என்பது பற்றிய வாட்டம்
என்க. இறுதி ‘ஏ’ காரம் ஈற்றசை. 81