நகர் நீங்கு படலம் - 1726

1726.
‘திரை ஆர் கடல் சூழ் உலகின்
தவமே! திருவின் திருவே!
நிரை ஆர் கலையின் கடவே!
நெறி ஆர் மறையின் நிலையே!
கரையா அயர்வேன்; எனை, நீ,
கருணாலயனே! “ என்?” என்று
உரையா இதுதான் அழகோ?
உலகு ஏழ் உடையாய்!’ என்னும்.
‘திரைஆர் கடல்சூழ் உலகின் தவமே! - அலை பொருந்திய
கடலாற் சூழப்பெற்றஉலகம் செய்த தவத்தின் பயனே; திருவின்
திருவே!-செல்வங்களுக்கெல்லாம்மேலான செல்வமே; நிரை ஆர்
கலையின் கடவே! - ஒழுங்குபொருந்திய கல்விக்கலையில் கடல்
ஆனவனே; நெறி ஆர் மறையின் நிலையே! -நீதிபொருந்திய
வேதத்தின் உன்மைப் பொருளே; கருணாலயனே! -அருட்கோயிலாக
உள்ளவனே; உலகு ஏழ் உடையாய்! - ஏழ் உலகங்களையும்உடையவனே;
கரையா அயர்வேன் எனை -மனம் உருகிச் சோர்வடைகின்ற என்னை;
நீ என் என்று உரையா இதுதான் அழகோ’ - நீஏன்வருந்துகிறாய்
என்று ஆறுதல் கூறாது இப்படிக் கிடப்பதுதான் அழகாகுமோ; என்னும்-
தன் மனைவிபடும் துயரத்தைக் கண்டுவைத்தும் எழுந்து அவளுக்கு
ஆறுதல் சொல்லாது கணவன்கிடக்கின்ற நிலை கண்டு மனம் வருந்திப்
புலம்பினாள். 32