தகர வருக்கம்
தக்கோன் எனத் திரி
- பெரியோர்கள் உன்னைத் தக்கவன்(யோக்கியன்,நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்
தானமது விரும்பு
- யாசிப்பவர்களுக்குத் தானம் செய்.
திருமாலுக்கு அடிமை செய்
- நாராயணமூர்த்திக்குத் தொண்டு செய்
தீவினை அகற்று
- பாவச் செயல்களைச் செய்யாமல் இரு.
துன்பத்திற்கு இடங் கொடேல்
- முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே.
தூக்கி வினை செய்
- ஒரு வேளையை முடிப்பதற்கான வழிமுறைகளை நன்கு ஆராய்ந்து அறிந்த பின்பு அச்செயலைச் செய்யத் தொடங்கவும்
தெய்வம் இகழேல்
- கடவுளைப் பழிக்காதே.
தேசத்தோடு, ஒத்து வாழ்
- உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் வாழ்
தையல் சொல், கேளேல்
- மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.
தொன்மை மறவேல்
- பழைமையை மறவாதிருக்க வேண்டும் (பழங்கால மற்றும் பண்டைய முறையிலான நம் தமிழ் கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்காமல் இயற்கையோடு ஒத்து வாழ வேண்டும்)
தோற்பன தொடரேல்
- ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதைத் தொடங்காதே.
