சிதம்பரம்

bookmark

பாடல் 449

ராகம் - கரஹரப்ரியா ; தாளம் - ஆதி (எடுப்பு - 1/2 இடம்) 

தனதனன தான தனதனன தான 
தனதனன தானத் ...... தனதானா 


கனகசபை மேவு மெனதுகுரு நாத 
கருணைமுரு கேசப் ...... பெருமாள்காண் 

கனகநிற வேத னபயமிட மோது 
கரகமல சோதிப் ...... பெருமாள்காண் 

வினவுமடி யாரை மருவிவிளை யாடு 
விரகுரச மோகப் ...... பெருமாள்காண் 

விதிமுநிவர் தேவ ரருணகிரி நாதர் 
விமலசர சோதிப் ...... பெருமாள்காண் 

சனகிமண வாளன் மருகனென வேத 
சதமகிழ்கு மாரப் ...... பெருமாள்காண் 

சரணசிவ காமி யிரணகுல காரி 
தருமுருக நாமப் ...... பெருமாள்காண் 

இனிதுவன மேவு மமிர்தகுற மாதொ 
டியல்பரவு காதற் ...... பெருமாள்காண் 

இணையிலிப தோகை மதியின்மக ளோடு 
மியல்புலியுர் வாழ்பொற் ...... பெருமாளே. 
பாடல் 450 
ராகம் - ஜோன்புரி; தாளம் - ஆதி 

தத்ததன தான தத்ததன தான 
தத்ததன தான ...... தனதான 


கைத்தருண சோதி யத்திமுக வேத 
கற்பகச கோத்ரப் ...... பெருமாள்காண் 

கற்புசிவ காமி நித்யகலி யாணி 
கத்தர்குரு நாதப் ...... பெருமாள்காண் 

வித்துருப ராம ருக்குமரு கான 
வெற்றி யயில் பாணிப் ...... பெருமாள்காண் 

வெற்புளக டாக முட்குதிர வீசு 
வெற்றிமயில் வாகப் ...... பெருமாள்காண் 

சித்ரமுக மாறு முத்துமணி மார்பு 
திக்கினினி லாதப் ...... பெருமாள்காண் 

தித்திமிதி தீதே னொத்திவிளை யாடு 
சித்திரகு மாரப் ...... பெருமாள்காண் 

சுத்தவிர சூரர் பட்டுவிழ வேலை 
தொட்டகவி ராஜப் ...... பெருமாள்காண் 

துப்புவளி யோடு மப்புலியுர் மேவு 
சுத்தசிவ ஞானப் ...... பெருமாளே. 
பாடல் 451 
ராகம் - ஆரபி ; தாளம் - அங்கதாளம் (9) 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2 
தகதிமி-2, தகதிமிதக-3 

தனதனன தனன தந்தத் ...... தனதானா 


இருவினையின் மதிம யங்கித் ...... திரியாதே 
எழுநரகி லுழலு நெஞ்சுற் ...... றலையாதே 

பரமகுரு அருள்நி னைந்திட் ...... டுணர்வாலே 
பரவுதரி சனையை யென்றெற் ...... கருள்வாயே 

தெரிதமிழை யுதவு சங்கப் ...... புலவோனே 
சிவனருளு முருக செம்பொற் ...... கழலோனே 

கருணைநெறி புரியு மன்பர்க் ...... கெளியோனே 
கனகசபை மருவு கந்தப் பெருமாளே. 
பாடல் 452
ராகம் - வஸந்தா ; தாளம் - அங்கதாளம் (7 1/2) 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2 

தனன தனதன தானன தந்தத் 
தனன தனதன தானன தந்தத் 
தனன தனதன தானன தந்தத் ...... தனதான 


குகனெ குருபர னேயென நெஞ்சிற் 
புகழ அருள்கொடு நாவினி லின்பக் 
குமுளி சிவவமு தூறுக வுந்திப் ...... பசியாறிக் 

கொடிய இருவினை மூலமும் வஞ்சக் 
கலிகள் பிணியிவை வேரொடு சிந்திக் 
குலைய நமசிவ யோமென கொஞ்சிக் ...... களிகூரப் 

பகலு மிரவுமி லாவெளி யின்புக் 
குறுகி யிணையிலி நாடக செம்பொற் 
பரம கதியிது வாமென சிந்தித் ...... தழகாகப் 

பவள மனதிரு மேனியு டன்பொற் 
சரண அடியவ ரார்மன வம்பொற் 
றருண சரண்மயி லேறியு னம்பொற் ...... கழல்தாராய் 

தகுட தகுதகு தாதக தந்தத் 
திகுட திகுதிகு தீதக தொந்தத் 
தடுடு டுடுடுடு டாடக டிங்குட் ...... டியல்தாளம் 

தபலை திமிலைகள் பூரிகை பம்பைக் 
கரடி தமருகம் வீணைகள் பொங்கத் 
தடிய ழனவுக மாருத சண்டச் ...... சமரேறிக் 

ககன மறைபட ஆடிய செம்புட் 
பசிகள் தணிவுற சூரர்கள் மங்கக் 
கடல்க ளெறிபட நாகமு மஞ்சத் ...... தொடும்வேலா 

கயிலை மலைதனி லாடிய தந்தைக் 
குருக மனமுன நாடியெ கொஞ்சிக் 
கனக சபைதனில் மேவிய கந்தப் ...... பெருமாளே. 
பாடல் 453 
தந்தனத் தத்தன தந்தனத் தத்தன 
தந்தனத் தத்தன தந்தனத் தத்தன 
தந்தனத் தத்தன தந்தனத் தத்தன ...... தந்ததான 


வண்டையொத் துக்கயல் கண்சுழற் றுப்புரு 
வஞ்சிலைக் குத்தொடு அம்பையொத் துத்தொடை 
வண்டுசுற் றுக்குழல் கொண்டலொத் துக்கமு ...... கென்பக்ரீவம்

மந்தரத் தைக்கட பொங்கிபத் துப்பணை 
கொம்பையொத் துத்தன முந்துகுப் பத்தெரு 
வந்துஎத் திப்பொரு மங்கையர்க் கைப்பொரு ...... ளன்பினாலே 

கொண்டழைத் துத்தழு வுங்கைதட் டிற்பொருள் 
கொண்டுதெட் டிச்சர சம்புகழ்க் குக்குன 
குங்குழற் கிப்படி நொந்துகெட் டுக்குடில் ...... மங்குறாமல் 

கொண்டுசத் திக்கட லுண்டுகுப் பத்துனி 
னன்பருக் குச்செயல் தொண்டுபட் டுக்கமழ் 
குங்குமத் திற்சர ணம்பிடித் துக்கரை ...... யென்றுசேர்வேன் 

அண்டமிட் டிக்குட டிண்டிமிட் டிக்குகு 
டந்தகொட் டத்தகு டிங்குதொக் கத்தம 
டஞ்சகட் டைக்குண கொம்புடக் கைக்கிட ...... லென்பதாளம் 

அண்டமெட் டுத்திசை யும்பல்சர்ப் பத்திரள் 
கொண்டல்பட் டுக்கிரி யும்பொடித் துப்புல 
னஞ்சவித் துத்திர ளண்டமுட் டத்துகள் ...... வந்தசூரர் 

கண்டமற் றுக்குட லென்புநெக் குத்தச 
னங்கடித் துக்குடி லஞ்சிவப் பச்செநிர் 
கண்தெறிக் கத்தலை பந்தடித் துக்கையி ...... லங்குவேலால் 

கண்களிக் கக்கக னந்துளுக் கப்புக 
ழிந்திரற் குப்பதம் வந்தளித் துக்கன 
கம்பலத் திற்குற மங்கைபக் கத்துறை ...... தம்பிரானே. 
பாடல் 454 
தந்த தந்தனத் தான தந்தன 
தந்த தந்தனத் தான தந்தன 
தந்த தந்தனத் தான தந்தன ...... தந்ததான 


கங்கு லின்குழற் கார்மு கஞ்சசி 
மஞ்ச ளின்புயத் தார்ச ரம்பெறு 
கண்கள் கொந்தளக் காது கொஞ்சுக ...... செம்பொனாரம் 

கந்த ரந்தரித் தாடு கொங்கைக 
ளும்ப லின்குவட் டாமெ னுங்கிரி 
கந்த முஞ்சிறுத் தேம லும்பட ...... சம்பைபோல 

அங்க மைந்திடைப் பாளி தங்கொடு 
குந்தி யின்குறைக் கால்ம றைந்திட 
அண்சி லம்பொலிப் பாட கஞ்சரி ...... கொஞ்சமேவும் 

அஞ்சு கங்குயிற் பூவை யின்குரல் 
அங்கை பொன்பறிக் கார பெண்களோ 
டண்டி மண்டையர்க் கூழி யஞ்செய்வ ...... தென்றுபோமோ 

சங்கு பொன்தவிற் காள முந்துரி 
யங்கள் துந்துமிக் காட திர்ந்திட 
சந்த செந்தமிழ்ப் பாணர் கொஞ்சிட ...... அண்டகோசம் 

சந்தி ரன்பதத் தோர்வ ணங்கிட 
இந்தி ரன்குலத் தார்பொ ழிந்திட 
தந்தி ரம்புயத் தார்பு கழ்ந்திட ...... வந்தசூரைச் 

செங்கை யுஞ்சிரத் தோடு பங்கெழ 
அந்த கன்புரத் தேற வஞ்சகர் 
செஞ்ச ரந்தொடுத் தேந டம்புரி ...... கந்தவேளே 

திங்க ளொண்முகக் காமர் கொண்டவன் 
கொங்கை மென்குறப் பாவை யுங்கொடு 
செம்பொ னம்பலத் தேசி றந்தருள் ...... தம்பிரானே. 
பாடல் 455 
தந்த தந்தன தந்த தந்தன 
தந்த தந்தன தந்த தந்தன 
தந்த தந்தன தந்த தந்தன ...... தனதான 


கொந்த ளம்புழு கெந்த வண்பனி 
ரம்ப சம்ப்ரம ணிந்த மந்தர 
கொங்கை வெண்கரி கொம்பி ணங்கிய ...... மடமாதர் 

கொந்த ணங்குழ லின்ப மஞ்சள 
ணிந்து சண்பக வஞ்சி ளங்கொடி 
கொஞ்சு பைங்கிளி யன்பெ னுங்குயில் ...... மயில்போலே 

வந்து பஞ்சணை யின்ப முங்கொடு 
கொங்கை யும்புய முந்த ழும்புற 
மஞ்சு வொண்கலை யுங்கு லைந்தவ ...... மயல்மேலாய் 

வஞ்சி னங்கள்தி ரண்டு கண்செவி 
யுஞ்சு கங்கள்தி ரும்பி முன்செய்த 
வஞ்சி னங்களு டன்கி டந்துட ...... லழிவேனோ 

தந்த னந்தன தந்த னந்தன 
திந்தி மிந்திமி திந்தி மிந்திமி 
சங்கு வெண்கல கொம்பு துந்துமி ...... பலபேரி 

சஞ்ச லஞ்சல கொஞ்சு கிண்கிணி 
தங்கு டுண்டுடு டுண்டு டன்பல 
சந்தி ரம்பறை பொங்கு வஞ்சகர் ...... களமீதே 

சிந்த வெண்கழு கொங்கு பொங்கெழு 
செம்பு ளங்கரு டன்ப ருந்துகள் 
செங்க ளந்திகை யெங்கு மண்டிட ...... விடும்வேலா 

திங்க ளிந்திர னும்ப ரந்தர 
ரும்பு கழ்ந்துரு கும்ப ரன்சபை 
செம்பொ னம்பல மங்கொ ளன்பர்கள் ...... பெருமாளே. 
பாடல் 456
தந்தன தந்தன தான தந்தன 
தான தனந்தன தான தந்தன 
------------ 3 தரம் ----- ...... தந்ததான 


மந்தர மென்குவ டார்த னங்களி 
லார மழுந்திட வேம ணம்பெறு 
சந்தன குங்கும சேறு டன்பனி 
நீர்கள் கலந்திடு வார்மு கஞ்சசி 
மஞ்சுறை யுங்குழ லார்ச ரங்கயல் 
வாள்விழி செங்கழு நீர்த தும்பிய ...... கொந்தளோலை 

வண்சுழ லுஞ்செவி யார்நு டங்கிடை 
வாடந டம்புரி வார்ம ருந்திடு 
விஞ்சையர் கொஞ்சிடு வாரி ளங்குயில் 
மோகன வஞ்சியர் போல கம்பெற 
வந்தவ ரெந்தவுர் நீர றிந்தவர் 
போல இருந்ததெ னாம யங்கிட ...... இன்சொல்கூறிச் 

சுந்தர வங்கண மாய்நெ ருங்கிநிர் 
வாருமெ னும்படி யால கங்கொடு 
பண்சர சங்கொள வேணு மென்றவர் 
சேம வளந்துறு தேன ருந்திட 
துன்றுபொ னங்கையின் மீது கண்டவ 
ரோடு விழைந்துமெ கூடி யின்புறு ...... மங்கையோரால் 

துன்பமு டங்கழி நோய்சி ரங்கொடு 
சீபுழு வுஞ்சல மோடி றங்கிய 
புண்குட வன்கடி யோடி ளஞ்சனி 
சூலைமி குந்திட வேப றந்துடல் 
துஞ்சிய மன்பதி யேபு குந்துய 
ராழி விடும்படி சீர்ப தம்பெறு ...... விஞ்சைதாராய் 

அந்தர துந்துமி யோடு டன்கண 
நாதர் புகழ்ந்திட வேத விஞ்சைய 
ரிந்திர சந்திரர் சூரி யன்கவி 
வாணர்த வம்புலி யோர்ப தஞ்சலி 
அம்புய னந்திரு மாலொ டிந்திரை 
வாணிய ணங்கவ ளோட ருந்தவர் ...... தங்கள்மாதர் 

அம்பர ரம்பைய ரோடு டன்திகழ் 
மாவுர கன்புவி யோர்கள் மங்கையர் 
அம்புவி மங்கைய ரோட ருந்ததி 
மாதர் புகழ்ந்திட வேந டம்புரி 
அம்புய செம்பதர் மாட கஞ்சிவ 
காம சவுந்தரி யாள்ப யந்தருள் ...... கந்தவேளே 

திந்திமி திந்திமி தோதி மிந்திமி 
தீததி திந்தித தீதி திந்திமி 
தந்தன தந்தன னாத னந்தன 
தான தனந்தன னாவெ னும்பறை 
செந்தவில் சங்குட னேம ழங்கசு 
ரார்கள் சிரம்பொடி யாய்வி டுஞ்செயல் ...... கண்டவேலா 

செந்தினை யின்புன மேர்கு றிஞ்சியில் 
வாழுமி ளங்கொடி யாள்ப தங்களில் 
வந்துவ ணங்கிநி ணேமு கம்பெறு 
தாளழ கங்கையின் வேலு டன்புவி 
செம்பொனி னம்பல மேல கம்பிர 
காரச மந்திர மீத மர்ந்தருள் ...... தம்பிரானே. 
பாடல் 457 
ராகம் - தர்பார்; தாளம் - ஆதி - 4 களை (32) 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1 

தந்த தந்தனத் தான தந்ததன 
தந்த தந்தனத் தான தந்ததன 
தந்த தந்தனத் தான தந்ததன் ...... தந்ததான 


வந்து வந்துவித் தூறி யென்றனுடல் 
வெந்து வெந்துவிட் டோ ட நொந்துயிரும் 
வஞ்சி னங்களிற் காடு கொண்டவடி ...... வங்களாலே 

மங்கி மங்கிவிட் டேனை யுன்றனது 
சிந்தை சந்தோஷித் தாளு கொண்டருள 
வந்து சிந்துரத் தேறி யண்டரொடு ...... தொண்டர்சூழ 

எந்தன் வஞ்சனைக் காடு சிந்திவிழ 
சந்த ரண்டிசைத் தேவ ரம்பையர்க 
னிந்து பந்தடித் தாடல் கொண்டுவர ...... மந்திமேவும் 

எண்க டம்பணித் தோளு மம்பொன்முடி 
சுந்த ரந்திருப் பாத பங்கயமும் 
என்றன் முந்துறத் தோணி யுன்றனது ...... சிந்தைதாராய் 

அந்த ரந்திகைத் தோட விஞ்சையர்கள் 
சிந்தை மந்திரத் தோட கெந்தருவ 
ரம்பு யன்சலித் தோட எண்டிசையை ...... யுண்டமாயோன் 

அஞ்சி யுன்பதச் சேவை தந்திடென 
வந்த வெஞ்சினர்க் காடெ ரிந்துவிழ 
அங்கி யின்குணக் கோலை யுந்திவிடு ...... செங்கைவேலா 

சிந்து ரம்பணைக் கோடு கொங்கைகுற 
மங்கை யின்புறத் தோள ணைந்துருக 
சிந்து ரந்தனைச் சீர்ம ணம்புணர்நல் ...... கந்தவேளே 

சிந்தி முன்புரக் காடு மங்கநகை 
கொண்ட செந்தழற் கோல ரண்டர்புகழ் 
செம்பொ னம்பலத் தாடு மம்பலவர் ...... தம்பிரானே. 
பாடல் 458 
தனத்தத்தம் தனத்தத்தத் 
தனத்தத்தம் தனத்தத்தத் 
தனத்தத்தம் தனத்தத்தத் ...... தனதான 


கதித்துப்பொங் கலுக்கொத்துப் 
பணைத்துக்கொம் பெனத்தெற்றிக் 
கவித்துச்செம் பொனைத்துற்றுக் ...... குழலார்பின் 

கழுத்தைப்பண் புறக்கட்டிச் 
சிரித்துத்தொங் கலைப்பற்றிக் 
கலைத்துச்செங் குணத்திற்பித் ...... திடுமாதர் 

பதித்துத்தந் தனத்தொக்கப் 
பிணித்துப்பண் புறக்கட்டிப் 
பசப்பிப்பொன் தரப்பற்றிப் ...... பொருள்மாளப் 

பறித்துப்பின் துரத்துச்சொற் 
கபட்டுப்பெண் களுக்கிச்சைப் 
பலித்துப்பின் கசுத்திப்பட் ...... டுழல்வேனோ 

கதித்துக்கொண் டெதிர்த்துப்பிற் 
கொதித்துச்சங் கரித்துப்பற் 
கடித்துச்சென் றுழக்கித்துக் ...... கசுரோரைக் 

கழித்துப்பண் டமர்க்குச்செப் 
பதத்தைத்தந் தளித்துக்கைக் 
கணிக்குச்சந் தரத்தைச்சுத் ...... தொளிர்வேலா 

சிதைத்திட்டம் புரத்தைச்சொற் 
கயத்தைச்சென் றுரித்துத்தற் 
சினத்தக்கன் சிரத்தைத்தட் ...... சிவனார்தஞ் 

செவிக்குச்செம் பொருட்கற்கப் 
புகட்டிச்செம் பரத்திற்செய்த் 
திருச்சிற்றம் பலச்சொக்கப் ...... பெருமாளே. 
பாடல் 459 
தனத்தத் தந்தன தானன தானன 
தனத்தத் தந்தன தானன தானன 
தனத்தத் தந்தன தானன தானன ...... தனதான 


சிரித்துச் சங்கொளி யாமின லாமென 
வுருக்கிக் கொங்கையி னாலுற மேல்விழு 
செணத்திற் சம்பள மேபறி காரிகள் ...... சிலபேரைச் 

சிமிட்டிக் கண்களி னாலுற வேமயல் 
புகட்டிச் செந்துகி லால்வெளி யாயிடை 
திருத்திப் பண்குழ லேய்முகி லோவிய ...... மயில்போலே 

அருக்கிப் பண்புற வேகலை யால்முலை 
மறைத்துச் செந்துவர் வாயமு தூறல்க 
ளளித்துப் பொன்குயி லாமென வேகுரல் ...... மிடறோதை 

அசைத்துக் கொந்தள வோலைக ளார்பணி 
மினுக்கிச் சந்தன வாசனை சேறுட 
னமைத்துப் பஞ்சணை மீதணை மாதர்க ...... ளுறவாமோ 

இரைத்துப் பண்டம ராவதி வானவ 
ரொளித்துக் கந்தசு வாமிப ராபர 
மெனப்பட் டெண்கிரி ஏழ்கடல் தூள்பட ...... அசுரார்கள் 

இறக்கச் சிங்கம தேர்பரி யானையொ 
டுறுப்பிற் செங்கழு கோரிகள் கூளியொ 
டிரத்தச் சங்கம தாடிட வேல்விடு ...... மயில்வீரா 

சிரித்திட் டம்புர மேமத னாருட 
லெரித்துக் கண்டக பாலியர் பாலுறை 
திகழ்ப்பொற் சுந்தரி யாள்சிவ காமிநல் ...... கியசேயே 

திருச்சித் தந்தனி லேகுற மானதை 
யிருத்திக் கண்களி கூர்திக ழாடக 
திருச்சிற் றம்பல மேவியு லாவிய ...... பெருமாளே. 
பாடல் 460 
தத்தனந் தத்தனந் தானனத் தந்ததன 
தத்தனந் தத்தனந் தானனத் தந்ததன 
தத்தனந் தத்தனந் தானனத் தந்ததன ...... தந்ததான 


தத்தையென் றொப்பிடுங் தோகைநட் டங்கொளுவர் 
பத்திரங் கட்கயங் காரியொப் புங்குழல்கள் 
சச்சையங் கெச்சையுந் தாளவொத் தும்பதுமை ...... யென்பநீலச் 

சக்கரம் பொற்குடம் பாலிருக் குந்தனமொ 
டொற்றிநன் சித்திரம் போலஎத் தும்பறியர் 
சக்களஞ் சக்கடஞ் சாதிதுக் கங்கொலையர் ...... சங்கமாதர் 

சுத்திடும் பித்திடும் சூதுகற் குஞ்சதியர் 
முற்பணங் கைக்கொடுந் தாருமிட் டங்கொளுவர் 
சொக்கிடும் புக்கடன் சேருமட் டுந்தனகும் ...... விஞ்சையோர்பால் 

தொக்கிடுங் கக்கலுஞ் சூலைபக் கம்பிளவை 
விக்கலுந் துக்கமுஞ் சீதபித் தங்கள்கொடு 
துப்படங் கிப்படுஞ் சோரனுக் கும்பதவி ...... யெந்தநாளோ 

குத்திரங் கற்றசண் டாளர்சத் தங்குவடு 
பொட்டெழுந் திட்டுநின் றாடஎட் டந்திகையர் 
கொற்றமுங் கட்டியம் பாடநிர்த் தம்பவுரி ...... கொண்டவேலா 

கொற்றர்பங் குற்றசிந் தாமணிச் செங்குமரி 
பத்தரன் புற்றஎந் தாயெழிற் கொஞ்சுகிளி 
கொட்புரந் தொக்கவெந் தாடவிட் டங்கிவிழி ...... மங்கைபாலா 

சித்திரம் பொற்குறம் பாவைபக் கம்புணர 
செட்டியென் றெத்திவந் தாடிநிர்த் தங்கள்புரி 
சிற்சிதம் பொற்புயஞ் சேரமுற் றும்புணரு ...... மெங்கள்கோவே 

சிற்பரன் தற்பரன் சீர்திகழ்த் தென்புலியுர் 
ருத்திரன் பத்திரஞ் சூலகர்த் தன்சபையில் 
தித்தியென் றொத்திநின் றாடுசிற் றம்பலவர் ...... தம்பிரானே. 
பாடல் 461 
தனத்தத்தந் தனத்தத்தந் 
தனத்தத்தந் தனத்தத்தந் 
தனத்தத்தந் தனத்தத்தந் 
----- 2 முறை -------- ...... தனதான 


தனத்திற்குங் குமத்தைச்சந் 
தனத்தைக்கொண் டணைத்துச்சங் 
கிலிக்கொத்தும் பிலுக்குப்பொன் 
தனிற்கொத்துந் தரித்துச்சுந் 
தரத்திற்பண் பழித்துக்கண் 
சுழற்றிச்சண் பகப்புட்பங் ...... குழல்மேவித் 

தரத்தைக்கொண் டசைத்துப்பொன் 
தகைப்பட்டுந் தரித்துப்பின் 
சிரித்துக்கொண் டழைத்துக்கொந் 
தளத்தைத்தண் குலுக்கிச்சங் 
கலப்புத்தன் கரத்துக்கொண் 
டணைத்துச்சம் ப்ரமித்துக்கொண் ...... டுறவாடிப் 

புனித்தப்பஞ் சணைக்கட்டிண் 
படுத்துச்சந் தனப்பொட்டுங் 
குலைத்துப்பின் புயத்தைக்கொண் 
டணைத்துப்பின் சுகித்திட்டின் 
புகட்டிப்பொன் சரக்கொத்துஞ் 
சிதைப்பப்பொன் தரப்பற்றும் ...... பொதுமாதர் 

புணர்ப்பித்தும் பிடித்துப்பொன் 
கொடுத்துப்பின் பிதிர்ச்சித்தன் 
திணிக்கட்டுஞ் சிதைத்துக்கண் 
சிறுப்பப்புண் பிடித்தப்புண் 
புடைத்துக்கண் பழுத்துக்கண் 
டவர்க்குக்கண் புதைப்பச்சென் ...... றுழல்வேனோ 

சினத்துக்கண் சிவப்பச்சங் 
கொலிப்பத்திண் கவட்டுச்செங் 
குவட்டைச்சென் றிடித்துச்செண் 
டரைத்துக்கம் பிடிக்கப்பண் 
சிரத்தைப்பந் தடித்துக்கொண் 
டிறைத்துத்தெண் கடற்றிட்டுங் ...... கொளைபோகச் 

செழித்துப்பொன் சுரர்ச்சுற்றங் 
களித்துக்கொண் டளிப்புட்பஞ் 
சிறக்கப்பண் சிரத்திற்கொண் 
டிறைத்துச்செம் பதத்திற்கண் 
திளைப்பத்தந் தலைத்தழ்த்தம் 
புகழ்ச்செப்புஞ் சயத்துத்திண் ...... புயவேளே 

பனித்துட்கங் கசற்குக்கண் 
பரப்பித்தன் சினத்திற்றிண் 
புரத்தைக்கண் டெரித்துப்பண் 
கயத்தைப்பண் டுரித்துப்பன் 
பகைத்தக்கன் தவத்தைச்சென் 
றழித்துக்கொன் றடற்பித்தன் ...... தருவாழ்வே 

படைத்துப்பொன் றுடைத்திட்பன் 
தனைக்குட்டும் படுத்திப்பண் 
கடிப்புட்பங் கலைச்சுற்றும் 
பதத்தப்பண் புறச்சிற்றம் 
பலத்திற்கண் களித்தப்பைம் 
புனத்திற்செங் குறத்திப்பெண் ...... பெருமாளே. 
பாடல் 462 
தனதன தனத்தத் தந்த தந்தன 
தனதன தனத்தத் தந்த தந்தன 
தனதன தனத்தத் தந்த தந்தன ...... தனதான 


திருடிக ளிணக்கிச் சம்ப ளம்பறி 
நடுவிகள் மயக்கிச் சங்க முண்கிகள் 
சிதடிகள் முலைக்கச் சும்பல் கண்டிகள் ...... சதிகாரர் 

செவிடிகள் மதப்பட் டுங்கு குண்டிகள் 
அசடிகள் பிணக்கிட் டும்பு றம்பிகள் 
செழுமிக ளழைத்திச் சங்கொ ளுஞ்செயர் ...... வெகுமோகக் 

குருடிகள் நகைத்திட் டம்பு லம்புக 
ளுதடிகள் கணக்கிட் டும்பி ணங்கிகள் 
குசலிகள் மருத்திட் டுங்கொ டுங்குணர் ...... விழியாலே 

கொளுவிகள் மினுக்குச் சங்கி ரங்கிகள் 
நடனமு நடித்திட் டொங்கு சண்டிகள் 
குணமதில் முழுச்சுத் தசங்க்ய சங்கிக ...... ளுறவாமோ 

இருடிய ரினத்துற் றும்ப தங்கொளு 
மறையவ னிலத்தொக் குஞ்சு கம்பெறு 
மிமையவ ரினக்கட் டுங்கு லைந்திட ...... வருசூரர் 

இபமொடு வெதித்தச் சிங்க மும்பல 
இரதமொ டெதத்திக் கும்பி ளந்திட 
இவுளியி ரதத்துற் றங்க மங்கிட ...... விடும்வேலா 

அரிகரி யுரித்திட் டங்க சன்புர 
மெரிதர நகைத்துப் பங்க யன்சிர 
மளவொடு மறுத்துப் பண்ட ணிந்தவ ...... ரருள்கோனே 

அமரர்த மகட்கிட் டம்பு ரிந்துநல் 
குறவர்த மகட்பக் கஞ்சி றந்துற 
அழகிய திருச்சிற் றம்ப லம்புகு ...... பெருமாளே. 
பாடல் 463 
தந்த தந்தன தந்த தந்தன 
தந்த தந்தன தந்த தந்தன 
தந்த தந்தன தந்த தந்தன ...... தந்ததான 


கொந்த ரங்குழ லிந்து வண்புரு 
வங்கள் கண்கய லுஞ்ச ரங்கணை 
கொண்ட ரம்பைய ரந்த முஞ்சசி ...... துண்டமாதர் 

கொந்த ளங்கதி ரின்கு லங்களி 
னுஞ்சு ழன்றிர சம்ப லங்கனி 
கொண்ட நண்பித ழின்சு கங்குயி ...... லின்சொல்மேவுந் 

தந்த வந்தர ளஞ்சி றந்தெழு 
கந்த ரங்கமு கென்ப பைங்கழை 
தண்பு யந்தளி ரின்கு டங்கைய ...... ரம்பொனாரந் 

தந்தி யின்குவ டின்த னங்களி 
ரண்டை யுங்குலை கொண்டு விண்டவர் 
தங்க டம்படி யுங்க வண்டிய ...... சிந்தையாமோ 

மந்த ரங்கட லுஞ்சு ழன்றமிர் 
தங்க டைந்தவ னஞ்சு மங்குலி 
மந்தி ரஞ்செல்வ முஞ்சு கம்பெற ...... எந்தவாழ்வும் 

வந்த ரம்பையெ ணும்ப கிர்ந்துந 
டங்கோ ளுந்திரு மங்கை பங்கினன் 
வண்டர் லங்கையு ளன்சி ரம்பொடி ...... கண்டமாயோன் 

உந்தி யின்புவ னங்க ளெங்கும 
டங்க வுண்டகு டங்கை யன்புக 
ழொண்பு ரம்பொடி கண்ட எந்தையர் ...... பங்கின்மேவும் 

உம்ப லின்கலை மங்கை சங்கரி 
மைந்த னென்றய னும்பு கழ்ந்திட 
வொண்ப ரந்திரு வம்ப லந்திகழ் ...... தம்பிரானே. 
பாடல் 464 
தனந்தந்தம் தனந்தந்தம் 
தனந்தந்தம் தனந்தந்தம் 
தனந்தந்தம் தனந்தந்தம் ...... தனதான 


தியங்குஞ்சஞ் சலந்துன்பங் 
கடந்தொந்தஞ் செறிந்தைந்திந் 
த்ரியம்பந்தந் தருந்துன்பம் ...... படுமேழை 

திதம்பண்பொன் றிலன்பண்டன் 
தலன்குண்டன் சலன்கண்டன் 
தெளிந்துன்றன் பழந்தொண்டென் ...... றுயர்வாகப் 

புயங்கந்திங் களின்துண்டங் 
குருந்தின்கொந் தயன்றன்கம் 
பொருந்துங்கங் கலந்தஞ்செஞ் ...... சடைசூடி 

புகழ்ந்துங்கண் டுகந்துங்கும் 
பிடுஞ்செம்பொன் சிலம்பென்றும் 
புலம்பும்பங் கயந்தந்தென் ...... குறைதீராய் 

இயம்புஞ்சம் புகந்துன்றுஞ் 
சுணங்கன்செம் பருந்தங்கங் 
கிணங்குஞ்செந் தடங்கண்டுங் ...... களிகூர 

இடும்பைங்கண் சிரங்கண்டம் 
பதந்தந்தங் கரஞ்சந்தொன் 
றெலும்புஞ்சிந் திடும்பங்கஞ் ...... செயும்வேலா 

தயங்கும்பைஞ் சுரும்பெங்குந் 
தனந்தந்தந் தனந்தந்தந் 
தடந்தண்பங் கயங்கொஞ்சுஞ் ...... சிறுகூரா 

தவங்கொண்டுஞ் செபங்கொண்டுஞ் 
சிவங்கொண்டும் ப்ரியங்கொண்டுந் 
தலந்துன்றம் பலந்தங்கும் ...... பெருமாளே. 
பாடல் 465
தனனந் தனத்த தந்த தனனந் தனத்த தந்த 
தனனந் தனத்த தந்த ...... தனதான 


பருவம் பணைத்தி ரண்டு கரிகொம் பெனத்தி ரண்டு 
பவளம் பதித்த செம்பொ ...... னிறமார்பிற் 

படருங் கனத்த கொங்கை மினல்கொந் தளித்து சிந்த 
பலவிஞ் சையைப்பு லம்பி ...... யழகான 

புருவஞ் சுழற்றி யிந்த்ர தநுவந் துதித்த தென்று 
புளகஞ் செலுத்தி ரண்டு ...... கயல்மேவும் 

பொறிகண் சுழற்றி ரம்ப பரிசம் பயிற்றி மந்த்ர 
பொடிகொண் டழிக்கும் வஞ்ச ...... ருறவாமோ 

உருவந் தரித்து கந்து கரமும் பிடித்து வந்து 
உறவும் பிடித்த ணங்கை ...... வனமீதே 

ஒளிர்கொம் பினைச்ச வுந்த ரியவும் பலைக்கொ ணர்ந்து 
ஒளிர்வஞ் சியைப்பு ணர்ந்த ...... மணிமார்பா 

செருவெங் களத்தில் வந்த அவுணன் தெறித்து மங்க 
சிவமஞ் செழுத்தை முந்த ...... விடுவோனே 

தினமுங் களித்து செம்பொ னுலகந் துதித்தி றைஞ்சு 
திருவம் பலத்த மர்ந்த ...... பெருமாளே. 
பாடல் 466 
தனனந் தனத்த தந்த தனனந் தனத்த தந்த 
தனனந் தனத்த தந்த ...... தனதான 


மதவெங் கரிக்கி ரண்டு வலுகொம் பெனத்தி ரண்டு 
வளரும் தனத்த ணிந்த ...... மணியாரம் 

வளைசெங் கையிற்சி றந்த வொளிகண் டுநித்தி லங்கு 
வரருந் திகைத்தி ரங்க ...... வருமானார் 

விதவிங் கிதப்ரி யங்கள் நகைகொஞ் சுதற்கு ணங்கள் 
மிகைகண் டுறக்க லங்கி ...... மருளாதே 

விடுசங் கையற்று ணர்ந்து வலம்வந் துனைப்பு கழ்ந்து 
மிகவிஞ் சுபொற்ப தங்கள் ...... தருவாயே 

நதியுந் திருக்க ரந்தை மதியுஞ் சடைக்க ணிந்த 
நடநம் பருற்றி ருந்த ...... கயிலாய 

நகமங் கையிற்பி டுங்கு மசுரன் சிரத்தொ டங்கம் 
நவதுங் கரத்ந முந்து ...... திரடோ ளுஞ் 

சிதையும் படிக்கொ ரம்பு தனைமுன் தொடுத்த கொண்டல் 
திறல்செங் கணச்சு தன்றன் ...... மருகோனே 

தினமுங் கருத்து ணர்ந்து சுரர்வந் துறப்ப ணிந்த 
திருவம் பலத்த மர்ந்த ...... பெருமாளே. 
பாடல் 467 
தனதந்தன தனதந்தன தனதந்தன தான 
தனதந்தன தனதந்தன தனதந்தன தான 
தனதந்தன தனதந்தன தனதந்தன தானத் ...... தனதான 


முகசந்திர புருவஞ்சிலை விழியுங்கயல் நீல 
முகிலங்குழ லொளிர்தொங்கலொ டிசைவண்டுகள் பாட 
மொழியுங்கிளி யிதழ்பங்கய நகைசங்கொளி காதிற் ...... குழையாட 

முழவங்கர கமுகம்பரி மளகுங்கும வாச 
முலையின்பர சகுடங்குவ டிணைகொண்டுநல் மார்பில் 
முரணுஞ்சிறு பவளந்தர ளவடந்தொடை யாடக் ...... கொடிபோலத் 

துகிரின்கொடி யொடியும்படி நடனந்தொடை வாழை 
மறையும்படி துயல்சுந்தர சுகமங்கைய ரோடு 
துதைபஞ்சணை மிசையங்கசன் ரதியின்பம தாகச் ...... செயல்மேவித் 

தொடைசிந்திட மொழிகொஞ்சிட அளகஞ்சுழ லாட 
விழிதுஞ்சிட இடைதொய்ஞ்சிட மயல்கொண் டணைகீனும் 
சுகசந்திர முகமும்பத அழகுந்தமி யேனுக் ...... கருள்வாயே 

அகரந்திரு உயிர்பண்புற அரியென்பது மாகி 
உறையுஞ்சுட ரொளியென்கணில் வளருஞ்சிவ காமி 
அமுதம்பொழி பரையந்தரி உமைபங்கர னாருக் ...... கொருசேயே 

அசுரன்சிர மிரதம்பரி சிலையுங்கெட கோடு 
சரமும்பல படையும்பொடி கடலுங்கிரி சாய 
அமர்கொண்டயில் விடுசெங்கர வொளிசெங்கதிர் போலத் ...... திகழ்வோனே 

மகரங்கொடி நிலவின்குடை மதனன்திரு தாதை 
மருகென்றணி விருதும்பல முரசங்கலை யோத 
மறையன்றலை யுடையும்படி நடனங்கொளு மாழைக் ...... கதிர்வேலா 

வடிவிந்திரன் மகள்சுந்தர மணமுங்கொடு மோக 
சரசங்குற மகள்பங்கொடு வளர்தென்புலி யூரில் 
மகிழும்புகழ் திருவம்பல மருவுங்கும ரேசப் ...... பெருமாளே. 
பாடல் 468 
தந்தன தானன தான தந்தன 
தந்தன தானன தான தந்தன 
தந்தன தானன தான தந்தன ...... தந்ததான 


சந்திர வோலைகு லாவ கொங்கைகள் 
மந்தர மாலந னீர்த தும்பநல் 
சண்பக மாலைகு லாவி ளங்குழல் ...... மஞ்சுபோலத் 

தண்கயல் வாளிக ணாரி ளம்பிறை 
விண்புரு வாரிதழ் கோவை யின்கனி 
தன்செய லார்நகை சோதி யின்கதிர் ...... சங்குமேவுங் 

கந்தரர் தேமலு மார்ப ரம்பநல் 
சந்தன சேறுட னார்க வின்பெறு 
கஞ்சுக மாமிட றோதை கொஞ்சிய ...... ரம்பையாரைக் 

கண்களி கூரவெ காசை கொண்டவர் 
பஞ்சணை மீதுகு லாவி னுந்திரு 
கண்களி ராறுமி ராறு திண்புய ...... முங்கொள்வேனே 

இந்திர லோகமு ளாரி தம்பெற 
சந்திர சூரியர் தேர்ந டந்திட 
எண்கிரி சூரர்கு ழாமி றந்திட ...... கண்டவேலா 

இந்திரை கேள்வர்பி தாம கன்கதி 
ரிந்துச டாதரன் வாச வன்தொழு 
தின்புற வேமனு நூல்வி ளம்பிய ...... கந்தவேளே 

சிந்துர மால்குவ டார்த னஞ்சிறு 
பெண்கள்சி காமணி மோக வஞ்சியர் 
செந்தினை வாழ்வளி நாய கொண்குக ...... அன்பரோது 

செந்தமிழ் ஞானத டாக மென்சிவ 
கங்கைய ளாவு மகாசி தம்பர 
திண்சபை மேவும னாச வுந்தர ...... தம்பிரானே. 
பாடல் 469 
ராகம் - ஹம்ஸாநந்தி ; தாளம் - அங்கதாளம் (19) 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2 

தான தான தான தானன தான தந்த 
தத்த தந்த தத்த தந்த ...... தந்ததான 


காய மாய வீடு மீறிய கூடு நந்து 
புற்பு தந்த னிற்கு ரம்பை ...... கொண்டுநாளுங் 

காசி லாசை தேடி வாழ்வினை நாடி யிந்த்ரி 
யப்ர மந்த டித்த லைந்து ...... சிந்தைவேறாய் 

வேயி லாய தோள மாமட வார்கள் பங்க 
யத்து கொங்கை யுற்றி ணங்கி ...... நொந்திடாதே 

வேத கீத போத மோனமெய் ஞான நந்த 
முற்றி டின்ப முத்தி யொன்று ...... தந்திடாயோ 

மாய வீர தீர சூரர்கள் பாற நின்ற 
விக்ர மங்கொள் வெற்பி டந்த ...... செங்கைவேலா 

வாகை வேடர் பேதை காதல வேழ மங்கை 
யைப்பு ணர்ந்த வெற்ப கந்த ...... செந்தில்வேளே 

ஆயும் வேத கீத மேழிசை பாட வஞ்சே 
ழுத்த ழங்க முட்ட நின்று ...... துன்றுசோதீ 

ஆதி நாத ராடு நாடக சாலை யம்ப 
லச்சி தம்ப ரத்த மர்ந்த ...... தம்பிரானே. 
பாடல் 470 
ராகம் - மோஹனம்; தாளம் - அங்கதாளம் (8 1/2) 

தகதிமி-2, தகதிமி-2, தகதகிட-2 1/2, தகதிமி-2 
(எடுப்பு - 1/2 இடம்) 

தனதன தனதன தானான தானன 
தனதன தனதன தானான தானன 
தனதன தனதன தானான தானன ...... தந்ததான 


அவகுண விரகனை வேதாள ரூபனை 
அசடனை மசடனை ஆசார ஈனனை 
அகதியை மறவனை ஆதாளி வாயனை ...... அஞ்சுபூதம் 

அடைசிய சவடனை மோடாதி மோடனை 
அழிகரு வழிவரு வீணாதி வீணனை 
அழுகலை யவிசலை ஆறான வூணனை ...... அன்பிலாத 

கவடனை விகடனை நானாவி காரனை 
வெகுளியை வெகுவித மூதேவி மூடிய 
கலியனை அலியனை ஆதேச வாழ்வனை ...... வெம்பிவீழுங் 

களியனை யறிவுரை பேணாத மாநுட 
கசனியை யசனியை மாபாத னாகிய 
கதியிலி தனையடி நாயேனை யாளுவ ...... தெந்தநாளோ 

மவுலியி லழகிய பாதாள லோகனு 
மரகத முழுகிய காகோத ராஜனு 
மநுநெறி யுடன்வளர் சோணாடர் கோனுட ...... னும்பர்சேரும் 

மகபதி புகழ்புலி யூர்வாழு நாயகர் 
மடமயில் மகிழ்வுற வானாடர் கோவென 
மலைமக ளுமைதரு வாழ்வேம னோகர ...... மன்றுளாடும் 

சிவசிவ ஹரஹர தேவா நமோநம 
தெரிசன பரகதி யானாய் நமோநம 
திசையினு மிசையினும் வாழ்வே நமோநம ...... செஞ்சொல்சேருந் 

திருதரு கலவி மணாளா நமோநம 
திரிபுர மெரிசெய்த கோவே நமோநம 
ஜெயஜெய ஹரஹர தேவா சுராதிபர் ...... தம்பிரானே. 
பாடல் 471 
ராகம் - முகாரி; தாளம் - ஆதி 4 களை (32) 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1 

தத்த தந்ததன தான தந்ததன 
தத்த தந்ததன தான தந்ததன 
தத்த தந்ததன தான தந்ததன ...... தனதான 


கட்டி முண்டகர பாலி யங்கிதனை 
முட்டி யண்டமொடு தாவி விந்துவொலி 
கத்த மந்திரவ தான வெண்புரவி ...... மிசையேறிக் 

கற்ப கந்தெருவில் வீதி கொண்டுசுடர் 
பட்டி மண்டபமு டாடி யிந்துவொடு 
கட்டி விந்துபிச காமல் வெண்பொடிகொ ...... டசையாமற் 

கட்டு வெம்புரநி றாக விஞ்சைகொடு 
தத்து வங்கள்விழ சாடி யெண்குணவர் 
சொர்க்கம் வந்துகையு ளாக எந்தைபத ...... முறமேவித் 

துக்கம் வெந்துவிழ ஞான முண்டுகுடில் 
வச்சி ரங்களென மேனி தங்கமுற 
சுத்த கம்புகுத வேத விந்தையொடு ...... புகழ்வேனோ 

எட்டி ரண்டுமறி யாத என்செவியி 
லெட்டி ரண்டுமிது வாமி லிங்கமென 
எட்டி ரண்டும்வெளி யாமொ ழிந்தகுரு ...... முருகோனே 

எட்டி ரண்டுதிசை யோட செங்குருதி 
யெட்டி ரண்டுமுரு வாகி வஞ்சகர்மெ 
லெட்டி ரண்டுதிசை யோர்கள் பொன்றஅயில் ...... விடுவோனே 

செட்டி யென்றுசிவ காமி தன்பதியில் 
கட்டு செங்கைவளை கூறு மெந்தையிட 
சித்த முங்குளிர நாதி வண்பொருளை ...... நவில்வோனே 

செட்டி யென்றுவன மேவி யின்பரச 
சத்தி யின்செயலி னாளை யன்புருக 
தெட்டி வந்துபுலி யூரின் மன்றுள்வளர் ...... பெருமாளே. 
பாடல் 472 
ராகம் - ஆபோகி; தாளம் - கண்டசாபு (2 1/2) 

தந்தனத் தானதன தந்தனத் தானதன 
தந்தனத் தானதன ...... தந்ததான 


நஞ்சினைப் போலுமன வஞ்சகக் கோளர்களை 
நம்புதற் றீதெனநி ...... னைந்துநாயேன் 

நண்புகப் பாதமதி லன்புறத் தேடியுனை 
நங்களப் பாசரண ...... மென்றுகூறல் 

உன்செவிக் கேறலைகொல் பெண்கள்மெற் பார்வையைகொல் 
உன்சொலைத் தாழ்வுசெய்து ...... மிஞ்சுவாரார் 

உன்றனக் கேபரமும் என்றனக் கார்துணைவர் 
உம்பருக் காவதினின் ...... வந்துதோணாய் 

கஞ்சனைத் தாவிமுடி முன்புகுட் டேயமிகு 
கண்களிப் பாகவிடு ...... செங்கையோனே 

கண்கயற் பாவைகுற மங்கைபொற் றோடழுவு 
கஞ்சுகப் பான்மைபுனை ...... பொன்செய்தோளாய் 

அஞ்சவெற் பேழுகடல் மங்கநிட் டூரர்குலம் 
அந்தரத் தேறவிடு ...... கந்தவேளே 

அண்டமுற் பார்புகழு மெந்தைபொற் பூர்புலிசை 
அம்பலத் தாடுமவர் ...... தம்பிரானே. 
பாடல் 473 
தந்ததன ...... தனதான 


செங்கலச ...... முலையார்பால் 
சிந்தைபல ...... தடுமாறி 

அங்கமிக ...... மெலியாதே 
அன்புருக ...... அருள்வாயே 

செங்கைபிடி ...... கொடியோனே 
செஞ்சொல்தெரி ...... புலவோனே 

மங்கையுமை ...... தருசேயே 
மன்றுள்வளர் ...... பெருமாளே. 
பாடல் 474 
தனன தான தனந்தன தானன 
தனன தான தனந்தன தானன 
தனன தான தனந்தன தானன ...... தந்ததான 


கரிய மேக மெனுங்குழ லார்பிறை 
சிலைகொள் வாகு வெனும்புரு வார்விழி 
கயல்கள் வாளி யெனுஞ்செய லார்மதி ...... துண்டமாதர் 

கமுக க்ரீவர் புயங்கழை யார்தன 
மலைக ளாஇணை யுங்குவ டார்கர 
கமல வாழை மனுந்தொடை யார்சர ...... சுங்கமாடை 

வரிய பாளித முந்துடை யாரிடை 
துடிகள் நூலிய லுங்கவி னாரல்குல் 
மணமு லாவிய ரம்பையி னார்பொருள் ...... சங்கமாதர் 

மயில்கள் போல நடம்புரி வாரியல் 
குணமி லாத வியன்செய லார்வலை 
மசகி நாயெ னழிந்திட வோவுன ...... தன்புதாராய் 

சரியி லாத சயம்பவி யார்முகி 
லளக பார பொனின்சடை யாள்சிவை 
சருவ லோக சவுந்தரி யாளருள் ...... கந்தவேளே 

சதப ணாம குடம்பொடி யாய்விட 
அவுணர் சேனை மடிந்திட வேயொரு 
தழல்கொள் வேலை யெறிந்திடு சேவக ...... செம்பொன்வாகா 

அரிய மேனி யிலங்கை யிராவணன் 
முடிகள் வீழ சரந்தொடு மாயவன் 
அகில மீரெழு முண்டவன் மாமரு ...... கண்டரோதும் 

அழகு சோபித அங்கொளு மானன 
விபுதை மோகி குறிஞ்சியின் வாழ்வளி 
அருள்கொ டாடி சிதம்பர மேவிய ...... தம்பிரானே. 
பாடல் 475 
தாந்த தானன தந்த தனந்தன 
தாந்த தானன தந்த தனந்தன 
தாந்த தானன தந்த தனந்தன ...... தந்ததான 


கூந்த லாழவி ரிந்து சரிந்திட 
காந்து மாலைகு லைந்து பளிங்கிட 
கூர்ந்த வாள்விழி கெண்டை கலங்கிட ...... கொங்கைதானுங் 

கூண்க ளாமென பொங்கந லம்பெறு 
காந்தள் மேனிம ருங்குது வண்டிட 
கூர்ந்த ஆடைகு லைந்துபு ரண்டிர ...... சங்கள்பாயச் 

சாந்து வேர்வின ழிந்து மணந்தப 
வோங்க வாகில்க லந்து முகங்கொடு 
தான்ப லாசுளை யின்சுவை கண்டித ...... ழுண்டுமோகந் 

தாம்பு றாமயி லின்குரல் கொஞ்சிட 
வாஞ்சை மாதரு டன்புள கங்கொடு 
சார்ந்து நாயென ழிந்துவி ழுந்துடல் ...... மங்குவேனோ 

தீந்த தோதக தந்தன திந்திமி 
ஆண்ட பேரிகை துந்துமி சங்கொடு 
சேர்ந்த பூரிகை பம்பை தவண்டைகள் ...... பொங்குசூரைச் 

சேண்சு லாமகு டம்பொடி தம்பட 
வோங்க வேழ்கட லுஞ்சுவ றங்கையில் 
சேந்த வேலது கொண்டு நடம்பயில் ...... கந்தவேளே 

மாந்த ணாருவ னங்குயில் கொஞ்சிட 
தேங்கு வாழைக ரும்புகள் விஞ்சிடு 
வான்கு லாவுசி தம்பரம் வந்தமர் ...... செங்கைவேலா 

மாண்ப்ர காசத னங்கிரி சுந்தர 
மேய்ந்த நாயகி சம்பைம ருங்குபொன் 
வார்ந்த ரூபிகு றம்பெண் வணங்கிய ...... தம்பிரானே. 
பாடல் 476 
தத்த தன்ன தய்ய தத்த தன்ன தய்ய 
தத்த தன்ன தய்ய ...... தனதான 


அத்த னன்னை யில்லம் வைத்த சொன்னம் வெள்ளி 
அத்தை நண்ணு செல்வ ...... ருடனாகி 

அத்து பண்ணு கல்வி சுற்ற மென்னு மல்ல 
லற்று நின்னை வல்ல ...... படிபாடி 

முத்த னென்ன வல்லை யத்த னென்ன வள்ளி 
முத்த னென்ன வுள்ள ...... முணராதே 

முட்ட வெண்மை யுள்ள பட்ட னெண்மை கொள்ளு 
முட்ட னிங்ங னைவ ...... தொழியாதோ 

தித்தி மன்னு தில்லை நிர்த்தர் கண்ணி னுள்ளு 
தித்து மன்னு பிள்ளை ...... முருகோனே 

சித்தி மன்னு செய்ய சத்தி துன்னு கைய 
சித்ர வண்ண வல்லி ...... யலர்சூடும் 

பத்த ருண்மை சொல்லு ளுற்ற செம்மல் வெள்ளி 
பத்தர் கன்னி புல்லு ...... மணிமார்பா 

பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ள 
பச்சை மஞ்ஞை வல்ல ...... பெருமாளே. 
பாடல் 477
தனதாத்த தய்ய தனதாத்த தய்ய 
தனதாத்த தய்ய ...... தனதான 


இருள்காட்டு செவ்வி ததிகாட்டி வில்லி 
னுதல்காட்டி வெல்லு ...... மிருபாண 

இயல்காட்டு கொல்கு வளைகாட்டி முல்லை 
நகைகாட்டு வல்லி ...... யிடைமாதர் 

மருள்காட்டி நல்கு ரவுகாட்டு மில்ல 
இடுகாட்டி னெல்லை ...... நடவாத 

வழிகாட்டி நல்ல றிவுகாட்டி மெல்ல 
வினை வாட்டி யல்லல் ...... செயலாமோ 

தெருள்காட்டு தொல்லை மறைகாட்டு மல்லல் 
மொழிகாட்டு தில்லை ...... யிளையோனே 

தினைகாட்டு கொல்லை வழிகாட்ட வல்ல 
குறவாட்டி புல்லு ...... மணிமார்பா 

அருள்காட்டு கல்வி நெறிகாட்டு செல்வ 
அடல்காட்டு வல்ல ...... சுரர்கோபா 

அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல 
அடியார்க்கு நல்ல ...... பெருமாளே. 
பாடல் 478
தய்யதன தானனத் தானனந் தானதன 
தய்யதன தானனத் தானனந் தானதன 
தய்யதன தானனத் தானனந் தானதன ...... தனதான 


முல்லைமலர் போலுமுத் தாயுதிர்ந் தானநகை 
வள்ளைகொடி போலுநற் காதிலங் காடுகுழை 
முல்லைமலர் மாலைசுற் றாடுகொந் தாருகுழ ...... லலைபோதம் 

மொள்குசிலை வாணுதற் பார்வையம் பானகயல் 
கிள்ளைகுர லாரிதழ்ப் பூவெனும் போதுமுக 
முன்னல்கமு கார்களத் தோய்சுணங் காயமுலை ...... மலையானை 

வல்லகுவ டாலிலைப் போலுசந் தானவயி 
றுள் ளதுகில் நூலிடைக் காமபண் டார அல் குல் 
வழ்ழைதொடை யார்மலர்க் காலணிந் தாடுபரி ...... புரவோசை 

மல்லிசலி யாடபட் டாடைகொண் டாடமயல் 
தள்ளுநடை யோடுசற் றேமொழிந் தாசைகொடு 
வல்லவர்கள் போலபொற் சூறைகொண் டார்கள்மய ...... லுறவாமோ 

அல்லல்வினை போகசத் தாதிவிண் டோ டநய 
வுள்ளமுற வாகவைத் தாளுமெந் தாதைமகி 
ழள்ளமைய ஞானவித் தோதுகந் தாகுமர ...... முருகோனே 

அன்னநடை யாள்குறப் பாவைபந் தாடுவிரல் 
என்னுடைய தாய்வெண்முத் தார்கடம் பாடுகுழல் 
அன்னைவலி சேர்தனக் கோடிரண் டானவளி ...... மணவாளா 

செல்லுமுக ஏழ்கடற் பாழிவிண் டோ டதிர 
வல்லசுரர் சேனைபட் டேமடிந் தேகுருதி 
செல்லதிசை யோடுவிட் டாடுசிங் காரமுக ...... வடிவேலா 

தெள்ளுதமிழ் பாடியிட் டாசைகொண் டாடசசி 
வல்லியொடு கூடிதிக் கோர்கள்கொண் டாடஇயல் 
தில்லைநகர் கோபுரத் தேமகிழ்ந் தேகுலவு ...... பெருமாளே. 
பாடல் 479 
தனத்தத் தந்தனத்தத் தானன தானன 
தனத்தத் தந்தனத்தத் தானன தானன 
தனத்தத் தந்தனத்தத் தானன தானன ...... தனதான 


அடப்பக் கம்பிடித்துத் தோளொடு தோள்பொர 
வளைத்துச் செங்கரத்திற் சீரொடு பாவொடு 
அணுக்கிச் செந்துணுக்கிற் கோவித ழுறல்க ...... ளதுகோதி 

அணிப்பொற் பங்கயத்துப் பூண்முலை மேகலை 
நெகிழ்த்துப் பஞ்சரித்துத் தாபண மேயென 
அருட்டிக் கண்சிமிட்டிப் பேசிய மாதர்க ...... ளுறவோடே 

படிச்சித் தங்களித்துத் தான்மிக மாயைகள் 
படித்துப் பண்பயிற்றிக் காதல்கள் மேல்கொள 
பசப்பிப் பின்பிணக்கைக் கூறிய வீணிக ...... ளவமாயப் 

பரத்தைக் குண்டுணர்த்துத் தோதக பேதைகள் 
பழிக்குட் சஞ்சரித்துப் போடிடு மூடனை 
பரத்துற் றண்பதத்துப் போதக் மீதென ...... அருள்தாராய் 

தடக்கைத் தண்டெடுத்துச் சூரரை வீரரை 
நொறுக்கிப் பொன்றவிட்டுத் தூளெழ நீறெழ 
தகர்த்துப் பந்தடித்துச் சூடிய தோரண ...... கலைவீரா 

தகட்டுப் பொன்சுவட்டுப் பூவணை மேடையில் 
சமைப்பித் தங்கொருத்திக் கோதில மாமயில் 
தனிப்பொற் பைம்புனத்திற் கோகில மாவளி ...... மணவாளா 

திடத்திற் றிண்பொருப்பைத் தோள்கொடு சாடிய 
அரக்கத் திண்குலத்தைச் சூறைகொள் வீரிய 
திருப்பொற் பங்கயத்துக் கேசவர் மாயவர் ...... அறியாமல் 

திமித்தத் திந்திமித்தத் தோவென ஆடிய 
சமர்த்தர்ப் பொன்புவிக்குட் டேவர்க ணாயக 
திருச்சிற் றம்பலத்துட் கோபுர மேவிய ...... பெருமாளே. 
பாடல் 480 
தத்தத் தானன தானன தானன 
தத்தத் தானன தானன தானன 
தத்தத் தானன தானன தானன ...... தனதான 


அக்குப் பீளைமு ளாவிளை மூளையொ 
டுப்புக் காய்பனி நிர்மயிர் தோல்குடி 
லப்புச் சீபுழு வோடடை யார்தசை ...... யுறமேவி 

அத்திப் பால்பல நாடிகு ழாயள்வ 
ழுப்புச் சார்வல மேவிளை யூளைகொ 
ளச்சுத் தோல்குடி லாமதி லேபொறி ...... விரகாளர் 

சுக்கத் தாழ்கட லேசுக மாமென 
புக்கிட் டாசைபெ ணாசைம ணாசைகள் 
தொக்குத் தீவினை யூழ்வினை காலமொ ...... டதனாலே 

துக்கத் தேபர வாமல்ச தாசிவ 
முத்திக் கேசுக மாகப ராபர 
சொர்க்கப் பூமியி லேறிட வேபத ...... மருள்வாயே 

தக்கத் தோகிட தாகிட தீகிட 
செக்கச் சேகண தாகண தோகண 
தத்தத் தானன டீகுட டாடுடு ...... வெனதாளந் 

தத்திச் சூரர்கு ழாமொடு தேர்பரி 
கெட்டுக் கேவல மாய்கடல் மூழ்கிட 
சத்திக் கேயிரை யாமென வேவிடு ...... கதிர்வேலா 

திக்கத் தோகண தாவென வேபொரு 
சொச்சத் தாதையர் தாமென வேதிரு 
செக்கர்ப் பாதம தேபதி யாசுதி ...... யவைபாடச் 

செப்பொற் பீலியு லாமயில் மாமிசை 
பக்கத் தேகுற மாதொடு சீர்பெறு 
தெற்குக் கோபுர வாசலில் மேவிய ...... பெருமாளே. 
பாடல் 481 
தானத் தானன தானன தானன 
தானத் தானன தானன தானன 
தானத் தானன தானன தானன ...... தனதான 


ஆரத் தோடணி மார்பிணை யானைகள் 
போருக் காமென மாமுலை யேகொடு 
ஆயத் தூசினை மேவிய நூலிடை ...... மடமாதர் 

ஆலைக் கோதினி லீரமி லாமன 
நேசத் தோடுற வானவர் போலுவர் 
ஆருக் கேபொரு ளாமென வேநினை ...... வதனாலே 

காருக் கேநிக ராகிய வோதிய 
மாழைத் தோடணி காதொடு மோதிய 
காலத் தூதர்கை வேலெனு நீள்விழி ...... வலையாலே 

காதற் சாகர மூழ்கிய காமுகர் 
மேலிட் டேயெறி கீலிகள் நீலிகள் 
காமத் தோடுற வாகையி லாவருள் ...... புரிவாயே 

சூரர்க் கேயொரு கோளரி யாமென 
நீலத் தோகைம யூரம தேறிய 
தூளிக் கேகடல் தூரநி சாசரர் ...... களமீதே 

சோரிக் கேவெகு ரூபம தாவடு 
தானத் தானன தானன தானன 
சூழிட் டேபல சோகுக ளாடவெ ...... பொரும்வேலா 

வீரத் தால்வல ராவண னார்முடி 
போகத் தானொரு வாளியை யேவிய 
மேகத் தேநிக ராகிய மேனியன் ...... மருகோனே 

வேதத் தோன்முத லாகிய தேவர்கள் 
பூசித் தேதொழ வாழ்புலி யூரினில் 
மேலைக் கோபுர வாசலில் மேவிய ...... பெருமாளே. 
பாடல் 482 
தானத் தான தத்த தானத் தான தத்த 
தானத் தான தத்த ...... தனதான 


காதைக் காதி மெத்த மோதிக் கேள்வி யற்ற 
காமப் பூச லிட்டு ...... மதியாதே 

காரொத் தேய்நி றத்த வோதிக் காவனத்தி 
னீழற் கேத ருக்கி ...... விளையாடிச் 

சேதித் தேக ருத்தை நேருற்றேபெ ருத்த 
சேலொத் தேவ ருத்தும் ...... விழிமானார் 

தேமற் பார வெற்பில் மூழ்கித் தாப மிக்க 
தீமைக் காவி தப்ப ...... நெறிதாராய் 

மாதைக் காத லித்து வேடக் கான கத்து 
வாசத் தாள்சி வப்ப ...... வருவோனே 

வாரிக் கேயொ ளித்த மாயச் சூரை வெட்டி 
மாளப் போர்தொ லைத்த ...... வடிவேலா 

வீதித் தேர்ந டத்து தூளத் தால ருக்கன் 
வீரத் தேர்ம றைத்த ...... புலியூர்வாழ் 

மேலைக் கோபு ரத்து மேவிக் கேள்வி மிக்க 
வேதத் தோர்து தித்த ...... பெருமாளே. 
பாடல் 483 
தய்ய தானத் தானன தானன 
தய்ய தானத் தானன தானன 
தய்ய தானத் தானன தானன ...... தனதான 


கொள்ளை யாசைக் காரிகள் பாதக 
வல்ல மாயக் காரிகள் சூறைகள் 
கொள்ளும் ஆயக் காரிகள் வீணிகள் ...... விழியாலே 

கொல்லும் லீலைக் காரிகள் யாரையும் 
வெல்லு மோகக் காரிகள் சூதுசொல் 
கொவ்வை வாய்நிட் டூரிகள் மேல்விழு ...... மவர்போலே 

உள்ள நோவைத் தேயுற வாடியர் 
அல்லை நேரோப் பாமன தோஷிகள் 
உள்வி ரோதக் காரிகள் மாயையி ...... லுழல்நாயேன் 

உய்ய வேபொற் றோள்களும் ஆறிரு 
கையு நீபத் தார்முக மாறுமுன் 
உள்ள ஞானப் போதமு நீதர ...... வருவாயே 

கள்ள மாயத் தாருகன் மாமுடி 
துள்ள நீலத் தோகையின் மீதொரு 
கையின் வேல்தொட் டேவிய சேவக ...... முருகோனே 

கல்லி லேபொற் றாள்பட வேயது 
நல்ல ரூபத் தேவர கானிடை 
கெளவை தீரப் போகுமி ராகவன் ...... மருகோனே 

தெள்ளி யேமுற் றீரமு னோதிய 
சொல்வ ழாமற் றானொரு வானுறு 
செல்வி மார்பிற் பூஷண மாயணை ...... மணவாளா 

தெள்ளு மேனற் சூழ்புன மேவிய 
வள்ளி வேளைக் காரம னோகர 
தில்லை மேலைக் கோபுர மேவிய ...... பெருமாளே. 
பாடல் 484 
தான தானன தனனா தானன 
தான தானன தனனா தானன 
தான தானன தனனா தானன ...... தனதான 


தாது மாமலர் முடியா லேபத 
றாத நூபுர அடியா லேகர 
தாள மாகிய நொடியா லேமடி ...... பிடியாலே 

சாடை பேசிய வகையா லேமிகு 
வாடை பூசிய நகையா லேபல 
தாறு மாறுசொல் மிகையா லேயன ...... நடையாலே 

மோதி மீறிய முலையா லேமுலை 
மீதி லேறிய கலையா லேவெகு 
மோடி நாணய விலையா லேமயல் ...... தருமானார் 

மோக வாரிதி தனிலே நாடொறு 
மூழ்கு வேனுன தடியா ராகிய 
மோன ஞானிக ளுடனே சேரவு ...... மருள்வாயே 

காத லாயருள் புரிவாய் நான்மறை 
மூல மேயென வுடனே மாகரி 
காண நேர்வரு திருமால் நாரணன் ...... மருகோனே 

காதல் மாதவர் வலமே சூழ்சபை 
நாத னார்தம திடமே வாழ்சிவ 
காம நாயகி தருபா லாபுலி ...... சையில்வாழ்வே 

வேத நூன்முறை வழுவா மேதினம் 
வேள்வி யாலெழில் புநன்மு வாயிர 
மேன்மை வேதியர் மிகவே பூசனை ...... புரிகோவே 

வீறு சேர்வரை யரசாய் மேவிய 
மேரு மால்வரை யெனநீள் கோபுர 
மேலை வாயிலின் மயில்மீ தேறிய ...... பெருமாளே. 
பாடல் 485 
ராகம் - சிந்து பைரவி ; தாளம் - ஆதி (எடுப்பு - 1/2 இடம்) 

தனத்தத் தானன தானன தானன 
தனத்தத் தானன தானன தானன 
தனத்தத் தானன தானன தானன ...... தந்ததான 


எலுப்புத் தோல்மயிர் நாடிகு ழாமிடை 
இறுக்குச் சீபுழு வோடடை மூளைகள் 
இரத்தச் சாகர நீர்மல மேவிய ...... கும்பியோடை 

இளைப்புச் சோகைகள் வாதம் விலாவலி 
உளைப்புச் சூலையொ டேவலு வாகிய 
இரைப்புக் கேவல மூலவி யாதியொ ...... டண்டவாதங் 

குலைப்புக் காய்கனல் நீரிழி வீளையொ 
டளைப்புக் காதடை கூனல்வி சூசிகை 
குருட்டுக் கால்முட மூமையு ளூடறு ...... கண்டமாலை 

குடிப்புக் கூனமி தேசத மாமென 
எடுத்துப் பாழ்வினை யாலுழல் நாயெனு 
னிடத்துத் தாள்பெற ஞானச தாசிவ ...... அன்புதாராய் 

கெலிக்கப் போர்பொரு சூரர்கு ழாமுமி 
ழிரத்தச் சேறெழ தேர்பரி யாளிகள் 
கெடுத்திட் டேகடல் சூர்கிரி தூள்பட ...... கண்டவேலா 

கிளர்ப்பொற் றோளிச ராசர மேவியெ 
யசைத்துப் பூசைகொள் ஆயிப ராபரி 
கிழப்பொற் காளைமெ லேறுமெ நாயகி ...... பங்கின்மேவும் 

வலித்துத் தோள்மலை ராவண னானவன் 
எடுத்தப் போதுடல் கீழ்விழ வேசெய்து 
மகிழ்ப்பொற் பாதசி வாயந மோஅர ...... சம்புபாலா 

மலைக்கொப் பாமுலை யாள்குற மாதினை 
அணைத்துச் சீர்புலி யூர்பர மாகிய 
வடக்குக் கோபுர வாசலில் மேவிய ...... தம்பிரானே. 
பாடல் 486 
தான தானன தான தானன 
தான தானன தான தானன 
தான தானன தான தானன ...... தனதான 


நீல மாமுகில் போலும் வார்குழ 
லார்கள் மாலைகு லாவ வேல்கணை 
நீள வாள்விழி பார்வை காதிரு ...... குழையாட 

நீடு மார்பணி யாட வோடிய 
கோடு போலிணை யாட நூலிடை 
நேச பாளித சோலை மாமயி ...... லெனவேகிக் 

காலி னூபுர வோசை கோவென 
ஆடி மால்கொடு நாணி யேவியர் 
காய மோடணு பாகு பால்மொழி ...... விலைமாதர் 

காத லாயவ ரோடு பாழ்வினை 
மூழ்கி யேழ்நர காழு மூடனை 
காரிர் பாருமை யாசி வாபத ...... மருள்வாயே 

கோல மாமயி லேறி வார்குழை 
யாட வேல்கொடு வீர வார் கழல் 
கோடி கோடிடி யோசை போல்மிக ...... மெருதூளாய்க் 

கோடு கோவென ஆழி பாடுகள் 
தீவு தாடசு ரார்கு ழாமொடு 
கூள மாகவி ணோர்கள் வாழ்வுற ...... விடும்வேலா 

நாலு வேதமு டாடு வேதனை 
யீண கேசவ னார்ச கோதரி 
நாதர் பாகம்வி டாள்சி காமணி ...... உமைபாலா 

ஞான பூமிய தான பேர்புலி 
யூரில் வாழ்தெய்வ யானை மானொடு 
நாலு கோபுர வாசல் மேவிய ...... பெருமாளே. 
பாடல் 487 
ராகம் - கானடா; தாளம் - ஆதி 4 களை (32) 
அமைப்பு 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1 

தான தத்ததன தான தத்ததன 
தான தத்ததன தான தத்ததன 
தான தத்ததன தான தத்ததன ...... தந்ததான 


வாத பித்தமொடு சூலை விப்புருதி 
யேறு கற்படுவ னீளை பொக்கிருமல் 
மாலை புற்றெழுத லூசல் பற்சனியொ ...... டந்திமாலை 

மாச டைக்குருடு காத டைப்பு செவி 
டூமை கெட்டவலி மூல முற்றுதரு 
மாலை யுற்றதொணு றாறு தத்துவர்க ...... ளுண்டகாயம் 

வேத வித்துபரி கோல முற்றுவிளை 
யாடு வித்தகட லோட மொய்த்தபல 
வேட மிட்டுபொரு ளாசை பற்றியுழல் ...... சிங்கியாலே 

வீடு கட்டிமய லாசை பட்டுவிழ 
வோசை கெட்டுமடி யாமல் முத்திபெற 
வீட ளித்துமயி லாடு சுத்தவெளி ...... சிந்தியாதோ 

ஓத அத்திமுகி லோடு சர்ப்பமுடி 
நீறு பட்டலற சூர வெற்பவுண 
ரோடு பட்டுவிழ வேலை விட்டபுக ...... ழங்கிவேலா 

ஓந மச்சிவய சாமி சுத்தஅடி 
யார்க ளுக்குமுப காரி பச்சையுமை 
ஓர்பு றத்தருள்சி காம ணிக்கடவுள் ...... தந்தசேயே 

ஆதி கற்பகவி நாய கர்க்குபிற 
கான பொற்சரவ ணாப ரப்பிரம 
னாதி யுற்றபொருள் ஓது வித்தமைய ...... றிந்தகோவே 

ஆசை பெற்றகுற மாதை நித்தவன 
மேவி சுத்தமண மாடி நற்புலியு 
ராட கப்படிக கோபு ரத்தின்மகிழ் ...... தம்பிரானே. 
பாடல் 488 
தனந்தத்த தனதான தனந்தத்த தனதான 
தனந்தத்த தனதான ...... தனதான 


சுரும்புற்ற பொழில்தோறும் விரும்புற்ற குயில்கூவ 
துரந்துற்ற குளிர்வாடை ...... யதனாலுந் 

துலங்குற்ற மருவாளி விரைந்துற்ற படியால 
தொடர்ந்துற்று வருமாதர் ...... வசையாலும் 

அரும்புற்ற மலர்மேவு செழுங்கொற்ற அணையாலு 
மடைந்திட்ட விடைமேவு ...... மணியாலும் 

அழிந்துற்ற மடமானை யறிந்தற்ற மதுபேணி 
அசைந்துற்ற மதுமாலை ...... தரவேணும் 

கருங்கொற்ற மதவேழ முனிந்துற்ற கலைமேவி 
கரந்துற்ற மடமானி ...... னுடனேசார் 

கரும்புற்ற வயல்சூழ பெரும்பற்ற புலியூரில் 
களம்பற்றி நடமாடு ...... மரன்வாழ்வே 

இருந்துற்று மலர்பேணி யிடும்பத்தர் துயர்தீர 
இதம்பெற்ற மயிலேறி ...... வருகொவே 

இனந்துற்ற வருசூர னுருண்டிட்டு விழவேல்கொ 
டெறிந்திட்டு விளையாடு ...... பெருமாளே. 
பாடல் 489
தனந்தத் தத்தன தானன தானன 
தனந்தத் தத்தன தானன தானன 
தனந்தத் தத்தன தானன தானன ...... தனதான 


இணங்கித் தட்பொடு பால்மொழி பேசிகள் 
மணந்திட் டுச்சுக மாய்விளை யாடிகள் 
இளஞ்சொற் செப்பிகள் சாதனை வீணிகள் ...... கடிதாகும் 

இடும்பைப் பற்றிய தாமென மேயினர் 
பெருஞ்சொற் பித்தளை தானும்வை யாதவர் 
இரும்பிற் பற்றிய கூர்விழி மாதர்கள் ...... எவரேனும் 

பணஞ்சுற் றிக்கொளு பாயவு தாரிகள் 
மணங்கட் டுக்குழல் வாசனை வீசிகள் 
பலஞ்செப் பித்தர மீளழை யாதவர் ...... அவரோடே 

பதந்துய்த் துக்கொடு தீமைய மாநர 
கடைந்திட் டுச்சவ மாகிவி டாதுன 
பதம்பற் றிப்புக ழானது கூறிட ...... அருள்வாயே 

வணங்கச் சித்தமி லாதஇ ராவணன் 
சிரம்பத் துக்கெட வாளிக டாவியெ 
மலங்கப் பொக்கரை யீடழி மாதவன் ...... மருகோனே 

மதம்பட் டுப்பொரு சூரபன் மாதியர் 
குலங்கொட் டத்திகல் கூறிய மோடரை 
வளைந்திட் டுக்கள மீதினி லேகொல ...... விடும்வேலா 

பிணம்பற் றிக்கழு கோடுபல் கூளிகள் 
பிடுங்கிக் கொத்திட வேயம ராடியெ 
பிளந்திட் டுப்பல மாமயி லேறிய ...... முருகோனே 

பிரிந்திட் டுப்பரி வாகிய ஞானிகள் 
சிலம்பத் தக்கழல் சேரவெ நாடிடு 
பெரும்பற் றப்புலி யூர்தனில் மேவிய ...... பெருமாளே. 
பாடல் 490 
ராகம் - சங்கராபரணம்; தாளம் - அங்கதாளம் (8 1/2) 
தகிட-1 1/2, தக-1, தகதிமி-2 
தகதிமி-2, தகதிமி-2 

தனந்தத் தத்தன தானன தானன 
தனந்தத் தத்தன தானன தானன 
தனந்தத் தத்தன தானன தானன ...... தனதான 


விடுங்கைக் கொத்தக டாவுடை யானிட 
மடங்கிக் கைச்சிறை யானஅ நேகமும் 
விழுங்கப் பட்டற வேயற லோதியர் ...... விழியாலே 

விரும்பத் தக்கன போகமு மோகமும் 
விளம்பத் தக்கன ஞானமு மானமும் 
வெறுஞ்சுத் தச்சல மாய்வெளி யாயுயிர் ...... விடுநாளில் 

இடுங்கட் டைக்கிரை யாயடி யேனுடல் 
கிடந்திட் டுத்தம ரானவர் கோவென 
இடங்கட் டிச்சுடு காடுபு காமுன ...... மனதாலே 

இறந்திட் டுப்பெற வேகதி யாயினும் 
இருந்திட் டுப்பெற வேமதி யாயினும் 
இரண்டிற் றக்கதொ ரூதியம் நீதர ...... இசைவாயே 

கொடுங்கைப் பட்டம ராமர மேழுடன் 
நடுங்கச் சுக்ரிவ னோடம ராடிய 
குரங்கைச் செற்றும கோததி தூளெழ ...... நிருதேசன் 

குலங்கட் பட்டநி சாசரர் கோவென 
இலங்கைக் குட்டழ லோனெழ நீடிய 
குமண்டைக் குத்திர ராவண னார்முடி ...... அடியோடே 

பிடுங்கத் தொட்டச ராதிப னாரதி 
ப்ரியங் கொட் டக்கநன் மாமரு காஇயல் 
ப்ரபஞ்சத் துக்கொரு பாவல னாரென ...... விருதூதும் 

ப்ரசண்டச் சொற்சிவ வேதசி காமணி 
ப்ரபந்தத் துக்கொரு நாதச தாசிவ 
பெரும்பற் றப்புலி யூர்தனில் மேவிய ...... பெருமாளே. 
பாடல் 491 
தந்தன தானன தானத்தம் 
தந்தன தானன தானத்தம் 
தந்தன தானன தானத்தம் ...... தனதான 


கொந்தள வோலைக ளாடப்பண் 
சங்கொளி போல்நகை வீசித்தண் 
கொங்கைகள் மார்பினி லாடக்கொண் ...... டையென்மேகம் 

கொங்கெழு தோள்வளை யாடக்கண் 
செங்கயல் வாளிகள் போலப்பண் 
கொஞ்சிய கோகில மாகப்பொன் ...... பறிகாரர் 

தந்திர மாமென வேகிப்பொன் 
தொங்கலொ டாரமு மாடச்செந் 
தம்பல வாயொடு பேசிக்கொண் ...... டுறவாடிச் 

சம்பள மீதென வோதிப்பின் 
பஞ்சணை மேல்மய லாடச்சஞ் 
சங்கையில் மூளியர் பால்வைக்குஞ் ...... செயல்தீராய் 

அந்தக னாருயிர் போகப்பொன் 
திண்புர மோடெரி பாயப்பண் 
டங்கச னாருடல் வேகக்கண் ...... டழல்மேவி 

அண்டர்க ளோடட லார்தக்கன் 
சந்திர சூரியர் வீழச்சென் 
றம்பல மீதினி லாடத்தன் ...... குருநாதா 

சிந்துர மோடரி தேர்வர்க்கம் 
பொங்கமொ டேழ்கடல் சூர்பத்மன் 
சிந்திட வேல்விடு வாகைத்திண் ...... புயவேளே 

செங்குற மாதுமி னாளைக்கண் 
டிங்கித மாயுற வாடிப்பண் 
செந்தமிழ் மால்புலி யூர்நத்தும் ...... பெருமாளே. 
பாடல் 492 
தனனா தத்தன தானத்தம் 
தனனா தத்தன தானத்தம் 
தனனா தத்தன தானத்தம் ...... தனதான 


நகையா லெத்திகள் வாயிற்றம் 
பலமோ டெத்திகள் நாணற்றின் 
நயனா லெத்திகள் நாறற்புண் ...... தொடைமாதர் 

நடையா லெத்திக ளாரக்கொங் 
கையினா லெத்திகள் மோகத்தின் 
நவிலா லெத்திகள் தோகைப்பைங் ...... குழல்மேகச் 

சிகையா லெத்திக ளாசைச்சங் 
கடியா லெத்திகள் பாடிப்பண் 
திறனா லெத்திகள் பாரத்திண் ...... தெருவூடே 

சிலர்கூ டிக்கொடு ஆடிக்கொண் 
டுழல்வா ருக்குழல் நாயெற்குன் 
செயலா லற்புத ஞானத்தின் ...... கழல்தாராய் 

பகையா ருட்கிட வேலைக்கொண் 
டுவரா ழிக்கிரி நாகத்தின் 
படமோ டிற்றிட சூரைச்சங் ...... கரிசூரா 

பணநா கத்திடை சேர்முத்தின் 
சிவகா மிககொரு பாகத்தன் 
பரிவால் சத்துப தேசிக்குங் ...... குரவோனே 

சுகஞா னக்கடல் மூழ்கத்தந் 
தடியே னுக்கருள் பாலிக்குஞ் 
சுடர்பா தக்குக னேமுத்தின் ...... கழல்வீரா 

சுகரே சத்தன பாரச்செங் 
குறமா தைக்கள வால்நித்தஞ் 
சுக்முழ் கிப்புலி யூர்நத்தும் ...... பெருமாளே. 
பாடல் 493 
ராகம் - அடாணா; தாளம் - மிஸ்ரசாபு (3 1/2) 
தகதிமி-2, தகிட-1 1/2 

தனதன தனன தனதன தனன 
தனதன தனன ...... தனதான 


எழுகடல் மணலை அளவிடி னதிக 
மெனதிடர் பிறவி ...... அவதாரம் 

இனியுன தபய மெனதுயி ருடலு 
மினியுடல் விடுக ...... முடியாது 

கழுகொடு நரியு மெரிபுவி மறலி 
கமலனு மிகவு ...... மயர்வானார் 

கடனுன தபய மடிமையு னடிமை 
கடுகியு னடிகள் ...... தருவாயே 

விழுதிக ழழகி மரகத வடிவி 
விமலிமு னருளு ...... முருகோனே 

விரிதல மெரிய குலகிரி நெரிய 
விசைபெறு மயிலில் ...... வருவோனே 

எழுகடல் குமுற அவுணர்க ளுயிரை 
யிரைகொளும் அயிலை ...... யுடையோனே 

இமையவர் முநிவர் பரவிய புலியு 
ரினில்நட மருவு ...... பெருமாளே. 
பாடல் 494 
ராகம் - வலஜி ; தாளம் - அங்கதாளம் (14) 
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2, தகிட-1 1/2 
தகதிமி-2, தகதிமி-2, தக-1, திமிதக-2 

தனதன தனன தனதன தனன 
தனதன தனனாத் ...... தனதான 


தறுகணன் மறலி முறுகிய கயிறு 
தலைகொடு விசிறீக் ...... கொடுபோகுஞ் 

சளமது தவிர அளவிடு சுருதி 
தலைகொடு பலசாத் ...... திரமோதி 

அறுவகை சமய முறைமுறை சருவி 
யலைபடு தநல்முச் ...... சினையாகும் 

அருவரு வொழிய வடிவுள பொருளை 
அலம்வர அடியேற் ...... கருள்வாயே 

நறுமல ரிறைவி யரிதிரு மருக 
நகமுத வியபார்ப் ...... பதிவாழ்வே 

நதிமதி யிதழி பணியணி கடவுள் 
நடமிடு புலியூர்க் ...... குமரேசா 

கறுவிய நிருதர் எறிதிரை பரவு 
கடலிடை பொடியாப் ...... பொருதோனே 

கழலிணை பணியு மவருடன் முனிவு 
கனவிலு மறியாப் ...... பெருமாளே. 
பாடல் 495 
தனதனா தத்ததன தனதனா தத்ததன 
தனதனா தத்ததன தானனந் தனன 
----- 3 முறை ----- ...... தந்ததான 


இரசபா கொத்தமொழி யமுர்தமா ணிக்கநகை 
யிணையிலா சத்திவிழி யார்பசும் பொனிரர் 
எழிலிநே ரொத்தஇரு ளளகபா ரச்செயல்க 
ளெழுதொணா தப்பிறையி னாரரும் புருவர் 
எழுதுதோ டிட்டசெவி பவளநீ லக்கொடிக 
ளிகலியா டப்படிக மோடடும் பொனுரு ...... திங்கள்மேவும் 

இலவுதா வித்தஇதழ் குமிழைநே ரொத்தஎழி 
லிலகுநா சிக்கமுகு மாலசங் கினொளி 
யிணைசொல்க்ரீ வத்தரள வினவொள்தா லப்பனையி 
னியல்கலா புத்தகமொ டேர்சிறந் தவடி 
யிணையிலா னைக்குவடெ னொளிநிலா துத்திபட 
ரிகலியா ரத்தொடையு மாருமின் பரச ...... தங்கமார்பின் 

வரிகள்தா பித்தமுலை யிசையஆ லிற்றளிரின் 
வயிறுநா பிக்கமல மாமெனுஞ் சுழிய 
மடுவுரோ மக்கொடியென் அளிகள்சூழ் வுற்றநிரை 
மருவுநூ லொத்தஇடை யாரசம் பையல்குல் 
மணமெலா முற்றநறை கமலபோ துத்தொடையென் 
வளமையார் புக்கதலி சேருசெம் பொனுடை ...... ரம்பைமாதர் 

மயலதா லிற்றடியெ னவர்கள்பா லுற்றுவெகு 
மதனபா ணத்தினுடன் மேவிமஞ் சமிசை 
வதனம்வேர் வுற்றவிர முலைகள்பூ ரிக்கமிடர் 
மயில்புறா தத்தைகுயில் போலிலங் கமளி 
வசனமாய் பொத்தியிடை துவளமோ கத்துளமிழ் 
வசமெலாம் விட்டுமற வேறுசிந் தனையை ...... தந்துஆள்வாய் 

முரசுபே ரித்திமிலை துடிகள்பூ ரித்தவில்கள் 
முருடுகா ளப்பறைகள் தாரைகொம் புவளை 
முகடுபேர் வுற்றவொலி யிடிகள்போ லொத்தமறை 
முதுவர்பா டிக்குமுற வேயிறந் தசுரர் 
முடிகளோ டெற்றியரி யிரதமா னைப்பிணமொ 
டிவுளிவே லைக்குருதி நீர்மிதந் துதிசை ...... யெங்குமோட 

முடுகிவேல் விட்டுவட குவடு வாய் விட்டமரர் 
முநிவரா டிப்புகழ வேதவிஞ் சையர்கள் 
முழவுவீ ணைக்கினரி யமுர்தகீ தத்தொனிகள் 
முறையதா கப்பறைய வோதிரம் பையர்கள் 
முலைகள்பா ரிக்கவுட னடனமா டிற்றுவர 
முடிபதா கைப்பொலிய வேந டங்குலவு ...... கந்தவேளே 

அரசுமா கற்பகமொ டகில்பலா இர்ப்பைமகி 
ழழகுவே யத்திகமு கோடரம் பையுடன் 
அளவிமே கத்திலொளிர் வனமொடா டக்குயில்க 
ளளிகள்தோ கைக்கிளிகள் கோவெனம் பெரிய 
அமுர்தவா விக்கழனி வயலில்வா ளைக்கயல்க 
ளடையுமே ரக்கனக நாடெனும் புலியுர் ...... சந்தவேலா 

அழகுமோ கக்குமரி விபுதையே னற்புனவி 
யளிகுலா வுற்றகுழல் சேர்கடம் புதொடை 
அரசிவே தச்சொருபி கமலபா தக்கரவி 
யரியவே டச்சிறுமி யாளணைந் தபுகழ் 
அருண்ரு பப்பதமொ டிவுளிதோ கைச்செயல்கொ 
டணைதெய்வா னைத்தனமு மேமகிழ்ந் துபுணர் ...... தம்பிரானே. 
பாடல் 496 
ராகம் - வாசஸ்பதி ; தாளம் - மிஸ்ரசாபு (3 1/2) 
தகிடதகதிமி-3 1/2 

தனன தானன தனன தானன 
தனன தானன ...... தனதான 


இருளு மோர்கதி ரணுகொ ணாதபொ 
னிடம தேறியெ ...... னிருநோயும் 

எரிய வேமல மொழிய வேசுட 
ரிலகு மூலக ...... வொளிமேவி 

அருவி பாயஇ னமுத மூறவுன் 
அருளெ லாமென ...... தளவாக 

அருளி யேசிவ மகிழ வேபெற 
அருளி யேயிணை ...... யடிதாராய் 

பரம தேசிகர் குருவி லாதவர் 
பரவை வான்மதி ...... தவழ்வேணிப் 

பவள மேனியர் எனது தாதையர் 
பரம ராசியர் ...... அருள்பாலா 

மருவி நாயெனை யடிமை யாமென 
மகிழ்மெய் ஞானமு ...... மருள்வோனே 

மறைகு லாவிய புலியுர் வாழ்குற 
மகள்மெ லாசைகொள் ...... பெருமாளே. 
பாடல் 497 
ராகம் - மத்யமாவதி; தாளம் - மிஸ்ரசாபு (3 1/2) 
தகதிமி-2, தகிட-1 1/2 

தான தனத்தம் தான தனத்தம் 
தான தனத்தம் ...... தனதான 


காவி யுடுத்துந் தாழ்சடை வைத்துங் 
காடுகள் புக்குந் ...... தடுமாறிக் 

காயகனி துய்த்துங் காயமொ றுத்துங் 
காசினி முற்றுந் ...... திரியாதே 

சீவ னொடுக்கம் பூத வொடுக்கம் 
தேற வுதிக்கும் ...... பரஞான 

தீப விளக்கங் காண எனக்குன் 
சீதள பத்மந் ...... தருவாயே 

பாவ நிறத்தின் தாருக வர்க்கம் 
பாழ்பட வுக்ரந் ...... தருவீரா 

பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும் 
பாடலை மெச்சுங் ...... கதிர்வேலா 

தூவிகள் நிற்குஞ் சாலி வளைக்குஞ் 
சோலை சிறக்கும் ...... புலியூரா 

சூரர் மிகக்கொண் டாட நடிக்குந் 
தோகை நடத்தும் ...... பெருமாளே. 
பாடல் 498 
தானத் தானத் தாந்தன தானன 
தானத் தானத் தாந்தன தானன 
தானத் தானத் தாந்தன தானன ...... தனதான 


கோதிக் கோதிக் கூந்தலி லேமலர் 
பாவித் தாகச் சாந்தணி வார்முலை 
கோடுத் தானைத் தேன்துவர் வாய்மொழி ...... குயில்போலக் 

கூவிக் கூவிக் காண்டிசை போலவெ 
நாணிக் கூனிப் பாய்ந்திடு வார்சிலர் 
கூடித் தேறிச் சூழ்ந்திடு வார்பொருள் ...... வருமோவென் 

றோதித் தோளிற் பூந்துகி லால்முலை 
மூடிச் சூதிற் றூங்கமி லார்தெரு
வோடித் தேடிச் சோம்பிடு வார்சில ...... விலைமாதர் 

ஓருச் சேரச் சேர்ந்திடு வார்கலி 
சூளைக் காரச் சாங்கமி லார்சில 
வோரைச் சாகத் தீம்பிடு வார்செய ...... லுறவாமோ 

வேதத் தோனைக் காந்தள்கை யால்தலை 
மேல்குட் டாடிப் பாந்தள் சதாமுடி 
வீரிட் டாடக் காய்ந்தசு ரார்கள்மெல் ...... விடும்வேலா 

வேளைச் சீறித் தூங்கலொ டேவய 
மாவைத் தோலைச் சேர்ந்தணி வாரிட 
மீதுற் றாள்பொற் சாம்பவி மாதுமை ...... தருசேயே 

நாதத் தோசைக் காண்டுணை யேசுடர் 
மூலத் தோனைத் தூண்டிட வேயுயிர் 
நாடிக் காலிற் சேர்ந்திட வேயருள் ...... சுரமானை 

ஞானப் பால்முத் தேன்சுரு பாள்வளி 
மாதைக் கானிற் சேர்ந்தணை வாய்சிவ 
ஞானப் பூமித் தேன்புலி யூர்மகிழ் ...... பெருமாளே. 
பாடல் 499 
தனதந்தத் தனனா தனதன 
தனதந்தத் தனனா தனதன 
தனதந்தத் தனனா தனதன ...... தனதான 


சகசம்பக் குடைசூழ் சிவிகைமெல் 
மதவின்பத் துடனே பலபணி 
தனிதம்பட் டுடையோ டிகல்முர ...... சொலிவீணை 

தவளந்தப் புடனே கிடுகிடு 
நடைதம்பட் டமிடோ ல் பலவொலி 
சதளம்பொற் றடிகா ரருமிவை ...... புடைசூழ 

வெகுகும்பத் துடனே பலபடை 
கரகஞ்சுற் றிடவே வரஇசை 
வெகுசம்பத் துடனே யழகுட ...... னிதமேவும் 

விருமஞ்சித் திரமமா மிதுநொடி 
மறையும் பொய்ப் பவுஷோ டுழல்வது 
விடவும்பர்க் கரிதா மிணையடி ...... தருவாயே 

திகுதந்தித் திகுதோ திகுதிகு 
திகுதந்தித் திகுதோ திகுதிகு 
திகுர் தஞ்செச் செகசே செககண ...... எனபேரிக் 

திமிர்தங்கற் குவடோ டெழுகட 
லொலிகொண்டற் றுருவோ டலறிட 
திரள்சண்டத் தவுணோர் பொடிபட ...... விடும்வேலா 

அகரம்பச் சுருவோ டொளியுறை 
படிகம்பொற் செயலா ளரனரி 
அயனண்டர்க் கரியா ளுமையருள் ...... முருகோனே 

அமுர்தம்பொற் குவடோ டிணைமுலை 
மதிதுண்டப் புகழ்மான் மகளொடும் 
அருள் செம்பொற் புலியூர் மருவிய ...... பெருமாளே. 
பாடல் 500 
தனனதந்தம் தனனதந்தம் 
தனனதந்தம் தானந்தம் 
------ 3 முறை ------ ...... தனதான 


சகுடமுந்துங் கடலடைந்துங் 
குளமகிழ்ந்துந் தோய்சங்கங் 
கமுகடைந்தண் டமுதகண்டந் 
தரளகந்தந் தேர்கஞ்சஞ் 
சரமெனுங்கண் குமிழதுண்டம் 
புருவெனுஞ்செஞ் சாபம்பொன் ...... திகழ்மாதர் 

சலசகெந்தம் புழுகுடன்சண் 
பகமணங்கொண் டேய்ரண்டந் 
தனகனம்பொன் கிரிவணங்கும் 
பொறிபடுஞ்செம் பேர்வந்தண் 
சலனசம்பொன் றிடைபணங்கின் 
கடிதடங்கொண் டாரம்பொன் ...... தொடர்பாவை 

புகலல்கண்டஞ் சரிகரம்பொன் 
சரணபந்தந் தோதிந்தம் 
புரமுடன்கிண் கிணிசிலம்பும் 
பொலியலம்புந் தாள்ரங்கம் 
புணர்வணைந்தண் டுவரொடுந்தொண் 
டிடர்கிடந்துண் டேர்கொஞ்சுங் ...... கடைநாயேன் 

புகழடைந்துன் கழல்பணிந்தொண் 
பொடியணிந் தங்காநந்தம் 
புனல்படிந்துண் டவசமிஞ்சுந் 
தவசர்சந்தம் போலுந்திண் 
புவனிகண்டின் றடிவணங்குஞ் 
செயல்கொளஞ்செஞ் சீர்செம்பொன் ...... கழல்தாராய் 

திகுடதிந்திந் தகுடதந்தந் 
திகுடதிந்திந் தோதிந்தம் 
டகுடடண்டண் டிகுடடிண்டிண் 
டகுடடண்டண் டோ டிண்டிண் 
டிமுடடிண்டிண் டுமுடடுண்டுண் 
டிமுடடிண்டென் றேசங்கம் ...... பலபேரி 

செககணஞ்சஞ் சலிகைபஞ்சம் 
பறைமுழங்கும் போரண்டஞ் 
சிலையிடிந்துங் கடல்வடிந்தும் 
பொடிபறந்துண் டோ ர்சங்கஞ் 
சிரமுடைந்தண் டவுணரங்கம் 
பிணமலைந்தன் றாடுஞ்செங் ...... கதிர்வேலா 

அகிலஅண்டஞ் சுழலஎங்கும் 
பவுரிகொண்டங் காடுங்கொன் 
புகழ்விளங்குங் கவுரிபங்கன் 
குருவெனுஞ்சிங் காரங்கொண் 
டறுமுகம்பொன் சதிதுலங்குந் 
திருபதங்கந் தாஎன்றென் ...... றமரோர்பால் 

அலர்பொழிந்தங் கரமுகிழ்ந்தொண் 
சரணமுங் கொண் டோ தந்தம் 
புனைகுறம்பெண் சிறுமியங்கம் 
புணர்செயங்கொண் டேயம்பொன் 
அமைவிளங்கும் புலிசரம்பொன் 
திருநடங்கொண் டார்கந்தம் ...... பெருமாளே. 
பாடல் 501 
தாந்தன தானதன தாந்தன தானதன 
தாந்தன தானதன ...... தனதான 


சாந்துட னேபுழுகு தோய்ந்தழ கார்குழலை 
மோந்துப யோதரம ...... தணையாகச் 

சாய்ந்துப்ர தாபமுடன் வாழ்ந்த நுராகசுக 
காந்தமொ டூசியென ...... மடவார்பால் 

கூர்ந்தக்ரு பாமனது போந்துன தாள்குறுகி 
ஓர்ந்துண ராவுணர்வி ...... லடிநாயேன் 

கூம்பவிழ் கோகநக பூம்பத கோதிலிணை 
பூண்டுற வாடுதின ...... முளதோதான் 

பாந்தளின் மீதினிதி னோங்குக ணேதுயில்கொள் 
நீண்டிடு மாலொடய ...... னறியாது 

பாம்புரு வானமுநி வாம்புலி யானபதன் 
ஏய்ந்தெதிர் காணநட ...... மிடுபாதர் 

பூந்துணர் பாதிமதி வேய்ந்தச டாமகுட 
மாங்கன காபுரியி ...... லமர்வாழ்வே 

பூங்கமு கார்வுசெறி யூங்கந காபுரிசை 
சூழ்ம்புலி யூரிலுறை ...... பெருமாளே. 
பாடல் 502 
ராகம் - கெளளை; தாளம் - கண்டசாபு (2 1/2) 

தனதனன தனதான தனதனன தனதான 
தனதனன தனதான ...... தனதான 


சுடரனைய திருமேனி யுடையழகு முதுஞான 
சொருபகிரி யிடமேவு ...... முகமாறும் 

சுரர்தெரிய லளிபாட மழலைகதி நறைபாய 
துகிரிதழின் மொழிவேத ...... மணம்வீச 

அடர்பவள வொளிபாய அரியபரி புரமாட 
அயில்தரமொ டெழில்தோகை ...... மயிலேறி 

அடியனிரு வினைநீறு படஅமர ரிதுபூரை 
அதிசயமெ னருள்பாட ...... வரவேணும் 

விடைபரவி அயன்மாலொ டமரர்முநி கணமோட 
மிடறடைய விடம்வாரி ...... யருள்நாதன் 

மினலனைய இடைமாது இடமருவு குருநாதன் 
மிகமகிழ அநுபூதி ...... யருள்வோனே 

இடர்கலிகள் பிணியோட எனையுமருள் குறமாதி 
னிணையிளநிர் முலைமார்பி ...... னணைமார்பா 

இனியமுது புலிபாத னுடனரவு சதகோடி 
யிருடியர்கள் புகழ்ஞான ...... பெருமாளே. 
பாடல் 503 
தத்ததன தானதன தானதன தானதன 
தத்ததன தானதன தானதன தானதன 
தத்ததன தானதன தானதன தானதன ...... தனதான 


தத்தைமயில் போலுமியல் பேசிபல மோகநகை 
யிட்டுமுட னாணிமுலை மீதுதுகில் மூடியவர் 
சற்றவிடம் வீடுமினி வாருமென வோடிமடி ...... பிடிபோல 

தைச்சரச மோடுறவெ யாடியக மேகொடுபொ 
யெத்தியணை மீதிலிது காலமெனிர் போவதென 
தட்டுபுழு கோடுபனி நீர்பலச வாதையவ ...... ருடல்பூசி 

வைத்துமுக மோடிரச வாயிதழி னூறல்பெரு
கக்குழல ளாவசுழல் வாள்விழிக ளேபதற 
வட்டமுலை மார்புதைய வேர்வைதர தோளிறுகி ...... யுடைசோர 

மச்சவிழி பூசலிட வாய்புலியு லாசமுட 
னொப்பியிரு வோருமயல் மூழ்கியபின் ஆபரணம் 
வைத்தடகு தேடுபொருள் சூறைகொளு வார்கலவி ...... செயலாமோ 

சத்திசர சோதிதிரு மாதுவெகு ரூபிசுக 
நித்தியகல் யாணியெனை யீணமலை மாதுசிவை 
தற்பரனொ டாடுமபி ராமிசிவ காமியுமை ...... யருள்பாலா 

சக்ரகிரி மூரிமக மேருகடல் தூளிபட 
ரத்நமயி லேறிவிளை யாடியசு ராரைவிழ 
சத்தியினை யேவிஅம ரோர்கள்சிறை மீளநட ...... மிடுவோனே 

துத்திதன பாரவெகு மோகசுக வாரிமிகு 
சித்ரமுக ரூபியென தாயிவளி நாயகியை 
சுத்தஅணை யூடுவட மாமுலைவி டாதகர ...... மணிமார்பா 

சுத்தவம காதவசி காமணியெ னோதுமவர் 
சித்தமதி லேகுடிய தாவுறையும் ஆறுமுக 
சுப்ரமணி யாபுலியுர் மேவியுறை தேவர்புகழ் ...... பெருமாளே. 
பாடல் 504 
தத்த தத்தன தான தானன 
தத்த தத்தன தான தானன 
தத்த தத்தன தான தானன ...... தனதான 


துத்தி பொற்றன மேரு வாமென 
வொத்தி பத்திரள் வாகு வாயவிர் 
துப்பு முத்தொடு மார்பினாடிட ...... மயில்போலே 

சுக்கை மைக்குழ லாட நூலிடை 
பட்டு விட்டவிர் காம னாரல்குல் 
சுற்று வித்துறு வாழை சேர்தொடை ...... விலைமாதர் 

தத்தை பட்குர லோசை நூபுர 
மொத்த நட்டமொ டாடி மார்முலை 
சற்ற சைத்துகு லாவும் வேசிய ...... ரவரோடே 

தர்க்க மிட்டுற வாடி யீளைநொய் 
கக்கல் விக்கல்கொ ளூளை நாயென 
சிச்சி சிச்சியெ னால்வர் கூறிட ...... வுழல்வேனோ 

தித்தி மித்திமி தீத தோதக 
தத்த னத்தன தான தீதிமி 
திக்கு முக்கிட மூரி பேரிகை ...... தவில்போடச் 

சித்ர வித்தைய ராட வானவர் 
பொற்பு விட்டிடு சேசெ சேயென 
செக்கு விட்டசு ரோர்கள் தூள்பட ...... விடும்வேலா 

செத்தி டச்சம னார்க டாபட 
அற்று தைத்தசு வாமி யாரிட 
சித்தி ரச்சிவ காமி யாரருள் ...... முருகோனே 

தெற்க ரக்கர்கள் தீவு நீறிட 
விட்ட அச்சுத ரீன மானொடு
சித்தி ரப்புலி யூரில் மேவிய ...... பெருமாளே. 
பாடல் 505 
ராகம் - ஷண்முகப்ரியா; தாளம் - ஸங்கீர்ண சாபு (4 1/2) 
தகதிமி-2, தகிட-1 1/2, தக-1 

தானா தனத்ததன தானா தனத்ததன 
தானா தனத்ததன ...... தனதான 


நாடா பிறப்புமுடி யாதோ வெனக்கருதி 
நாயே னரற்றுமொழி ...... வினையாயின் 

நாதா திருச்சபையி னேறாது சித்தமென 
நாலா வகைக்குமுன ...... தருள்பேசி 

வாடா மலர்ப்பதவி தாதா எனக்குழறி 
வாய்பாறி நிற்குமெனை ...... அருள்கூர 

வாராய் மனக்கவலை தீராய் நினைத்தொழுது 
வாரே னெனக்கெதிர் முன் ...... வரவேணும் 

சூடா மணிப்பிரபை ரூபா கனத்தவரி 
தோலா சனத்தியுமை ...... யருள்பாலா 

தூயா துதித்தவர்கள் நேயா வெமக்கமிர்த 
தோழா கடப்பமல ...... ரணிவோனே 

ஏடார் குழற்சுருபி ஞானா தனத்திமிகு 
மேராள் குறத்திதிரு ...... மணவாளா 

ஈசா தனிப்புலிசை வாழ்வே சுரர்த்திரளை 
ஈடேற வைத்தபுகழ் ...... பெருமாளே. 
பாடல் 506 
தானதன தத்த தந்தன தானதன தத்த தந்தன 
தானதன தத்த தந்தன ...... தந்ததான 


நாலுசது ரத்த பஞ்சறை மூலகம லத்தி லங்கியை 
நாடியின டத்தி மந்திர ...... பந்தியாலே 

நாரண புரத்தி லிந்துவி னூடுற இணக்கி நன்சுடர்
நாறிசை நடத்தி மண்டல ...... சந்தியாறிற் 

கோலமு முதிப்ப கண்டுள நாலினை மறித்தி தம்பெறு 
கோவென முழக்கு சங்கொலி ...... விந்துநாதங் 

கூடிய முகப்பி லிந்திர வானவமு தத்தை யுண்டொரு 
கோடிநட னப்ப தஞ்சபை ...... யென்றுசேர்வேன் 

ஆலமல ருற்ற சம்பவி வேரிலி குலக்கொ ழுந்திலி 
ஆரணர் தலைக்க லங்கொளி ...... செம்பொன்வாசி 

ஆணவ மயக்க முங்கலி காமிய மகற்றி யென்றனை 
ஆளுமை பரத்தி சுந்தரி ...... தந்தசேயே 

வேலதை யெடுத்து மிந்திரர் மால்விதி பிழைக்க வஞ்சகர் 
வீடெரி கொளுத்தி யெண்கட ...... லுண்டவேலா 

வேசது ரத்தர் தென்புலி யூருறை யொருத்தி பங்கினர் 
வீறுநட னர்க்கி சைந்தருள் ...... தம்பிரானே. 
பாடல் 507 
தானத்தன தானத்தன தானத்தன தானத்தன 
தானத்தன தானத்தன ...... தனதான 


நீலக்குழ லார்முத்தணி வாய்சர்க்கரை யார்தைப்பிறை 
நீளச்சசி யார்பொட்டணி ...... நுதல்மாதர் 

நீலக்கய லார்பத்திர வேலொப்பிடு வார்நற்கணி 
நேமித்தெழு தாசித்திர ...... வடிவார்தோள் 

ஆலைக்கழை யார்துத்திகொ ளாரக்குவ டார்கட்டளை 
யாகத்தமி யேனித்தமு ...... முழல்வேனோ 

ஆசைப்பத மேல்புத்திமெய் ஞானத்துட னேபத்திர 
மாகக்கொள வேமுத்தியை ...... யருள்வாயே 

மாலைக்குழ லாளற்புத வேதச்சொரு பாளக்கினி 
மார்பிற்பிர காசக்கிரி ...... தனபார 

வாசக்குயி லாள்நற்சிவ காமச்செய லாள்பத்தினி 
மாணிக்கமி னாள்நிஷ்கள ...... உமைபாகர் 

சூலக்கையி னாரக்கினி மேனிப்பர னாருக்கொரு 
சோதிப்பொருள் கேள்விக்கிடு ...... முருகோனே 

சோதிப்பிர காசச்செய லாள்முத்தமிழ் மானைப்புணர் 
சோதிப்புலி யூர்நத்திய ...... பெருமாளே. 
பாடல் 508
தனனா தத்தன தனனா தத்தன 
தனனா தத்தன ...... தனதான 


பனிபோ லத்துளி சலவா யுட்கரு 
பதின்மா தத்திடை ...... தலைகீழாய்ப் 

படிமே விட்டுடல் தவழ்வார் தத்தடி 
பயில்வா ருத்தியில் ...... சிலநாள்போய்த் 

தனமா தர்க்குழி விழுவார் தத்துவர் 
சதிகா ரச்சமன் ...... வருநாளிற் 

றறியா ரிற்சடம் விடுவா ரிப்படி 
தளர்மா யத்துய ...... ரொழியாதோ 

வினைமா யக்கிரி பொடியா கக்கடல் 
விகடா ருக்கிட ...... விடும்வேலா 

விதியோ னைச்சது முடிநால் பொட்டெழ 
மிகவே குட்டிய ...... குருநாதா 

நினைவோர் சித்தமொ டகலா மற்புகு 
நிழலாள் பத்தினி ...... மணவாளா 

நிதியா மிப்புவி புலியூ ருக்கொரு 
நிறைவே பத்தர்கள் ...... பெருமாளே. 
பாடல் 509
தனதன தனதன தான தாத்தன 
தனதன தனதன தான தாத்தன 
தனதன தனதன தான தாத்தன ...... தனதான 


மகரமொ டுறுகுழை யோலை காட்டியு 
மழைதவழ் வனைகுழல் மாலை காட்டியும் 
வரவர வரஇத ழூற லூட்டியும் ...... வலைவீசும் 

மகரவி ழிமகளிர் பாடல் வார்த்தையில் 
வழிவழி யொழுகுமு பாய வாழ்க்கையில் 
வளமையி லிளமையில் மாடை வேட்கையில் ...... மறுகாதே 

இகலிய பிரமக பால பாத்திர 
மெழில்பட இடுதிரு நீறு சேர்த்திற 
மிதழியை யழகிய வேணி யார்த்ததும் ...... விருதாக 

எழில்பட மழுவுடன் மானு மேற்றது 
மிசைபட இசைதரு ஆதி தோற்றமு 
மிவையிவை யெனவுப தேச மேற்றுவ ...... தொருநாளே 

ஜகதல மதிலருள் ஞான வாட்கொடு 
தலைபறி யமணர்ச மூக மாற்றிய 
தவமுனி சகமுளர் பாடு பாட்டென ...... மறைபாடி 

தரிகிட தரிகிட தாகு டாத்திரி 
கிடதரி கிடதரி தாவெ னாச்சில 
சபதமொ டெழுவன தாள வாச்சிய ...... முடனேநீள் 

அகுகுகு குகுவென ஆளி வாய்ப்பல 
அலகைக ளடைவுட னாடு மாட்டமு 
மரனவ னுடனெழு காளி கூட்டமு ...... மகலாதே 

அரிதுயில் சயனவி யாள மூர்த்தனு 
மணிதிகழ் மிகுபுலி யூர்வி யாக்ரனு 
மரிதென முறைமுறை யாடல் காட்டிய ...... பெருமாளே. 
பாடல் 510 
தத்த தத்த தாத்த தத்த தத்த தாத்த 
தத்த தத்த தாத்த ...... தனதான 


மச்ச மெச்சு சூத்ரம் ரத்த பித்த மூத்ரம் 
வைச்சி றைச்ச பாத்ர ...... மநுபோகம் 

மட்க விட்ட சேக்கை உட்பு ழுத்த வாழ்க்கை 
மட்டு லப்ப தார்த்த ...... மிடிபாறை 

எய்ச்சி ளைச்ச பேய்க்கு மெய்ச்சி ளைச்ச நாய்க்கு 
மெய்ச்சி ளைச்ச ஈக்கு ...... மிரையாகும் 

இக்க டத்தை நீக்கி அக்க டத்து ளாக்கி 
இப்படிக்கு மோக்ஷ ...... மருள்வாயே 

பொய்ச்சி னத்தை மாற்றி மெய்ச்சி னத்தை யேற்றி 
பொற்ப தத்து ளாக்கு ...... புலியூரா 

பொக்க ணத்து நீற்றை யிட்டொ ருத்த னார்க்கு 
புத்தி மெத்த காட்டு ...... புனவேடன் 

பச்சி லைக்கும் வாய்க்கு ளெச்சி லுக்கும் வீக்கு 
பைச்சி லைக்கு மாட்கொ ...... ளரன்வாழ்வே 

பத்தி சித்தி காட்டி அத்தர் சித்த மீட்ட 
பத்த ருக்கு வாய்த்த ...... பெருமாளே. 
பாடல் 511 
தனன தந்தன தந்த தானன 
தனன தந்தன தந்த தானன 
தனன தந்தன தந்த தானன ...... தந்ததான 


மதிய மண்குண மஞ்சு நால்முக 
நகர முன்கலை கங்கை நால்குண 
மகர முன்சிக ரங்கி மூணிடை ...... தங்குகோண 

மதன முன்தரி சண்ட மாருத 
மிருகு ணம்பெறி லஞ்செ லோர்தெரு 
வகர மிஞ்சிய கன்ப டாகமொ ...... ரென்றுசேறுங் 

கதிர டங்கிய அண்ட கோளகை 
யகர நின்றிடும் ரண்டு கால்மிசை 
ககன மின்சுழி ரண்டு கால்பரி ...... கந்துபாயுங் 

கருணை யிந்திரி யங்கள் சோதிய 
அருண சந்திர மண்ட லீகரர் 
கதிகொள் யந்திர விந்து நாதமொ ...... டென்றுசேர்வேன் 

அதிர பம்பைகள் டங்கு டாடிக 
முதிர அண்டமொ டைந்து பேரிகை 
டகுட டண்டட தொந்த தோதக ...... என்றுதாளம் 

அதிக விஞ்சையர் தும்ப்ரு நார்தரோ 
டிதவி தம்பெறு சிந்து பாடிட 
அமரர் துந்துமி சங்கு தாரைகள் ...... பொங்கவூடு 

உதிர மண்டல மெங்கு மாயொளி 
யெழகு மண்டியெ ழுந்து சூரரை 
உயர்ந ரம்பொடெ லும்பு மாமுடி ...... சிந்திவீழ 

உறுசி னங்கொடெ திர்ந்த சேவக 
மழைபு குந்துய ரண்டம் வாழ்வுற 
வுரகு னும்புலி கண்ட வூர்மகிழ் ...... தம்பிரானே. 
பாடல் 512 
தனன தனதன தனன தனதன 
தனன தனதன தனன தனதன 
தத்தத் தத்தன தத்தத் தத்தன 
தத்தத் தத்தன தத்தத் தத்தன 
--------- 3 முறை --------- ...... தனதான 


மருவு கடல்முகி லனைய குழல்மதி 
வதன நுதல்சிலை பிறைய தெணும்விழி 
மச்சப் பொற்கணை முக்குப் பொற்குமி 
ழொப்பக் கத்தரி யொத்திட் டச்செவி 

குமுத மலரித ழமுத மொழிநிரை 
தரள மெனுநகை மிடறு கமுகென 
வைத்துப் பொற்புய பச்சைத் தட்டையொ 
டொப்பிட் டுக்கம லக்கைப் பொற்றுகிர் 

வகைய விரலொடு கிளிகள் முகநக 
மெனவு மிகலிய குவடு மிணையென 
வட்டத் துத்திமு கிழ்ப்பச் சக்கிரம் 
வைத்தப் பொற்குட மொத்திட் டுத்திகழ் ...... முலைமேவும் 

வடமு நிரைநிரை தரள பவளமொ 
டசைய பழுமர இலைவ யிறுமயி 
ரற்பத் திக்கிணை பொற்புத் தொப்புளும் 
அப்புக் குட்சுழி யொத்துப் பொற்கொடி 

மதன னுருதுடி யிடையு மினலென 
அரிய கடிதட மமிர்த கழைரச 
மட்டுப் பொற்கம லத்திற் சக்கிரி 
துத்திப் பைக்கொரு மித்துப் பட்டுடை 

மருவு தொடையிணை கதலி பரடுகொள் 
கணையு முழவென கமட மெழுதிய 
வட்டப் புத்தக மொத்துப் பொற்சர 
ணத்திற் பிற்புற மெத்துத் தத்தைகள் ...... மயில்போலே 

தெருவில் முலைவிலை யுரைசெய் தவரவர் 
மயல்கொ டணைவர மருள்செய் தொழில்கொடு 
தெட்டிப் பற்பல சொக்கிட் டுப்பொருள் 
பற்றிக் கட்டில ணைக்கொப் பிப்புணர் 

திலத மழிபட விழிகள் சுழலிட 
மலர்க ளணைகுழ லிடைகொள் துகில்பட 
தித்தித் துப்பிதழ் வைத்துக் கைக்கொடு 
கட்டிக் குத்துமு லைக்குட் கைப்பட 

திரையி லமுதென கழையில் ரசமென 
பலவில் சுளையென வுருக வுயர்மயல் 
சிக்குப் பட்டுடல் கெட்டுச் சித்தமும் 
வெட்கித் துக்கமு முற்றுக் கொக்கென ...... நரைமேவிச் 

செவியொ டொளிர்விழி மறைய மலசல 
மொழுக பலவுரை குழற தடிகொடு 
தெத்திப் பித்தமு முற்றித் தற்செய 
லற்றுச் சிச்சியெ னத்துக் கப்பட 

சிலர்கள் முதுவுடல் வினவு பொழுதினி 
லுவரி நிறமுடை நமனு முயிர்கொள 
செப்பற் றுப்பிண மொப்பித் துப்பெய 
ரிட்டுப் பொற்பறை கொட்டச் செப்பிடு 

செனன மிதுவென அழுது முகமிசை 
அறைய அணைபவ ரெடென சுடலையில் 
சிற்றிக் குக்கிரை யிட்டிட் டிப்படி 
நித்தத் துக்கமெ டுத்திட் டுச்சட ...... முழல்வேனோ 

குருவி னுருவென அருள்செய் துறையினில் 
குதிரை கொளவரு நிறைத வசிதலை 
கொற்றப் பொற்பதம் வைத்திட் டற்புத 
மெற்றிப் பொற்பொரு ளிட்டுக் கைக்கொளு 

முதல்வ ரிளகலை மதிய மடைசடை 
அருண வுழைமழு மருவு திருபுயர் 
கொட்டத் துப்புரர் கெட்டுப் பொட்டெழ 
விட்டத் திக்கணை நக்கர்க் கற்புத 

குமர னெனவிரு தொலியு முரசொடு 
வளையு மெழுகட லதிர முழவொடு 
கொட்டத் துட்டரை வெட்டித் தட்கட 
லொப்பத் திக்கும டுத்துத் தத்திட ...... அமர்மேவிக் 

குருகு கொடிசிலை குடைகள் மிடைபட 
மலைகள் பொடிபட வுடுக ளுதிரிட 
கொத்திச் சக்கிரி பற்றப் பொற்பரி 
எட்டுத் திக்குமெ டுத்திட் டுக்குரல் 

குமர குருபர குமர குருபர 
குமர குருபர எனவோ தமரர்கள் 
கொட்பப் புட்பமி றைத்துப் பொற்சர 
ணத்திற் கைச்சிரம் வைத்துக் குப்பிட 

குலவு நரிசிறை கழுகு கொடிபல 
கருட னடமிட குருதி பருகிட 
கொற்றப் பத்திர மிட்டுப் பொற்கக 
னத்தைச் சித்தமி ரக்ஷித் துக்கொளு ...... மயில்வீரா 

சிரமொ டிரணிய னுடல்கி ழியவொரு 
பொழுதி னுகிர்கொடு அரியெ னடமிடு 
சிற்பர்த் திட்பதம் வைத்துச் சக்கிர 
வர்த்திக் குச்சிறை யிட்டுச் சுக்கிரன் 

அரிய விழிகெட இருப தமுமுல 
கடைய நெடியவர் திருவு மழகியர் 
தெற்குத் திக்கில ரக்கர்க் குச்சின 
முற்றுப் பொற்றசர் தற்குப் புத்திர 

செயமு மனவலி சிலைகை கொடுகர 
மிருப துடைகிரி சிரமொர் பதும்விழ 
திக்கெட் டைக்கக னத்தர்க் குக்கொடு 
பச்சைப் பொற்புய லுக்குச் சித்திர ...... மருகோனே 

திலத மதிமுக அழகி மரகத 
வடிவி பரிபுர நடனி மலர்பத 
சித்தர்க் குக்குறி வைத்திட் டத்தன் 
முத்தப் பொற்கிரி யொத்தச் சித்திர 

சிவைகொள் திருசர சுவதி வெகுவித 
சொருபி முதுவிய கிழவி யியல்கொடு 
செட்டிக் குச்சுக முற்றத் தத்துவ 
சித்திற் சிற்பதம் வைத்தக் கற்புறு 

திரையி லமுதென மொழிசெய் கவுரியி 
னரிய மகனென புகழ்பு லிநகரில் 
செப்புப் பொற்றன முற்றப் பொற்குற 
தத்தைக் குப்புள கித்திட் டொப்பிய ...... பெருமாளே. 
பாடல் 513 
ராகம் - கல்யாணி; தாளம் - ஆதி 

தனனா தனத்ததன தனனா தனத்ததன 
தனனா தனத்ததன ...... தனதானா 


மனமே உனக்குறுதி புகல்வே னெனக்கருகில் 
வருவா யுரைத்தமொழி ...... தவறாதே 

மயில்வாக னக்கடவுள் அடியார் தமக்கரசு 
மனமாயை யற்றசுக ...... மதிபாலன் 

நினைவே துனக்கமரர் சிவலோக மிட்டுமல 
நிலைவே ரறுக்கவல ...... பிரகாசன் 

நிதிகா நமக்குறுதி அவரே பரப்பிரம 
நிழலாளி யைத்தொழுது ...... வருவாயே 

இனமோ தொருத்திருபி நலமேர் மறைக்கரிய 
இளையோ ளொரொப்புமிலி ...... நிருவாணி 

எனையீ ணெடுத்தபுகழ் கலியாணி பக்கமுறை 
யிதழ்வேணி யப்பனுடை ...... குருநாதா 

முனவோர் துதித்து மலர் மழைபோ லிறைத்துவர 
முதுசூ ரரைத்தலை கொள் ...... முருகோனே 

மொழிபாகு முத்துநகை மயிலாள் தனக்குருகு 
முருகா தமிழ்ப்புலியுர் ...... பெருமாளே. 
பாடல் 514 
தத்த தானன தத்தன தானன 
தத்த தானன தத்தன தானன 
தத்த தானன தத்தன தானன ...... தனதான 


முத்த மோகன தத்தையி னார்குர 
லொத்த வாயித சர்க்கரை யார்நகை 
முத்து வாரணி பொற்குவ டார்முலை ...... விலைமாதர் 

மொக்கை போகசெ குத்திடு வார்பொருள் 
பற்றி வேறும ழைத்திடு வார்சிலர் 
முச்ச லீலிகை சொக்கிடு வாரிடர் ...... கலிசூழச் 

சித்தி லாடஅ ழைத்திடு வார்கவ 
டுற்ற மாதர்வ லைப்புகு நாயெனை 
சித்தி ஞானம்வெ ளிப்பட வேசுடர் ...... மடமீதே 

சித்தெ லாமொரு மித்துன தாறினம் 
வைத்து நாயென ருட்பெற வேபொருள் 
செப்பி யாறும கப்பரி வோடுணர் ...... வருள்வாயே 

தத்த னானத னத்தன தானெனு 
டுக்கை பேரிமு ழக்கிட வேகடல் 
சத்த தீவுத யித்தியர் மாளிட ...... விடும்வேலா 

சத்தி லோகப ரப்பர மேசுர 
நிர்த்த மாடுக ழற்கரு ணாகர 
தற்ப ராபர நித்தனொர் பாலுறை ...... யுமைபாலா 

துத்தி மார்முலை முத்தணி மோகன 
பொற்ப்ர காசமு ளக்குற மான்மகள் 
துப்பு வாயிதழ் வைத்தணை சோதிபொன் ...... மணிமார்பா 

சுட்டி நீலஇ ரத்தின மாமயி 
லுற்று மேவிய ருட்புலி யூர்வளர் 
சுத்த னேசசி பெற்றபெ ணாயகி ...... பெருமாளே. 
பாடல் 515 
ராகம் - ஹிந்தோளம் ; தாளம் - ஆதி 

தனதனன தான தனதனன தான 
தனதனன தானத் ...... தனதானா 


பரமகுரு நாத கருணையுப தேச 
பதவிதரு ஞானப் ...... பெருமாள்காண் 

பகலிரவி லாத ஒளிவெளியில் மேன்மை 
பகருமதி காரப் ...... பெருமாள்காண் 

திருவளரு நீதி தினமனொக ராதி 
செகபதியை யாளப் ...... பெருமாள்காண் 

செகதலமும் வானு மருவையவை பூத 
தெரிசனைசி வாயப் ...... பெருமாள்காண் 

ஒருபொருள தாகி அருவிடையை யூரு 
முமைதன்மண வாளப் ...... பெருமாள்காண் 

உகமுடிவு கால மிறுதிகளி லாத 
உறுதியநு பூதிப் ...... பெருமாள்காண் 

கருவுதனி லூறு மருவினைகள் மாய 
கலவிபுகு தாமெய்ப் ...... பெருமாள்காண் 

கனகசபை மேவி அனவரத மாடு 
கடவுள்செக சோதிப் ...... பெருமாளே.