கடிமணப் படலம் - 1279

1279.
தேர்மிசை வருவாரும். சிவிகையில் வருவாரும்.
ஊர்தியில் வருவாரும். ஒளி மணி நிரை ஓடைக்
கார்மிசை வருவாரும். கரிணியில் வருவாரும்.
பார்மிசை வருவாரும். பண்டியில் வருவாரும்.*
தேர்மிசை வருவாரும் - தேர்களின் மேல் வருபவர்களும்;
சிவிகையில் வருவாரும் - பல்லக்குகளில் வருபவர்களும்;
ஊர்தியில் வருவாரும் - பிறவாகனங்களிலும் வருபவர்களும்;
ஒளிமணிநிரை ஓடைக் கார்மிசை வருவாரும் -
ஒளிநிறையும் மணிகள் பதித்த முகபடாம் அணிந்த மேகம்போற்
கரிய (ஆண்) யானைகளின்மேல் வருவாரும்;
கரிணியில் வருவாரும் - பெண்யானைகளின்மேல்
வருவாரும்; பார் மிசை வருவாரும் - பூமியின்மேல் நடந்து
வருபவர்களும்; பண்டியில் வருவாரும் - வண்டிகளில் வருபவர்களும்
(ஆயினர்).
கார் - மேகம். நிற ஆகுபெயராய் யானையைக் குறித்தது. கரி
என்பதன் பெண்பாலாய். கரிணி என்பது பெண் யானையைக் குறித்து
நின்றது. வருவார் இத்தனை வகையினர் ஆயினர் என்க. கார் -
மேகம் எனக்கொண்டு உவமையாகு பெயராய் யானையைக் குறித்தது
எனினுமாம். அப்போது. கார்மேகம் யானைகளையும் அவையணிந்த
முகபடாமின் ஒளிகள் மின்னலினையும் குறித்தன என்க. 35.