கடிமணப் படலம் - 1273

1273.
கலவைகள் புனைவாரும். கலை நல தெரிவாரும்.
மலர் குழல் மலைவாரும். மதிமுகம் மணி ஆடித்
திலகம் முன் இடுவாரும். சிகழிகை அணிவாரும்.
இலவு இதழ் பொலி கோலம் எழில் பெற இடுவாரும்.*
கலவைகள் புனைவாரும் - கலவைச் சந்தனங்களைப் பூசிக்
கொள்வாரும்; கலைநல தெரிவாரும் - நல்ல ஆடைகளை ஆராய்ந்து
அணிந்து கொள்வாரும்; மலர் குழல் மலைவாரும்;- கூந்தலிலே
மலர்களைச்சூடி கொள்வாரும்; மதிமுக மணி ஆடித்திலதம் முன்
இடுவாரும் - அழகிய கண்ணாடிமுன் நின்று. தம் மதிப்போன்ற
முகங்களில் திலகத்தை இட்டுக் கொள்வாரும்; சிகழிகை அணிவாரும் -
சிகழிகை என்னும் தலைமாலைகளை அணிந்து கொள்வாரும்; இலவு
இதழ்பொலிகோலம் எழில்பெற இடுவாரும் - இலவம் பூப்போலச்
சிவந்த தங்கள் அழகிய உதடுகளிலே அழகுறக் கோலம் இட்டுக்
கொள்பவர்களும் (ஆயினர்).
இறுதியடிக்கு இலவின் இதழ் போன்ற செம்பஞ்சுக் குழம்பினை
(அடிகளில்) இட்டுக் கொள்வாரும் எனவுமாம். 29