உண்டாட்டுப் படலம் - 1085

bookmark

கொங்கை பொற்கலசம் போன்றதனெல்

1085.    

ஊட்டிய சாந்து வெந்து உலரும் வெம்மையால்.-
‘நாட்டினை அளித்தி நீ’ என்று நல்லவர்.
ஆட்டு நீர்க் கலசமே என்னல் ஆன - ஓர்
வாள் தொழில் மைந்தற்கு. ஓர் மங்கை கொங்கையே.
 
ஊட்டிய சாந்து  வெந்து உலரும் வெம்மையால் - ஊட்டப்பெற்ற
சந்தனக்  குழம்பு  வெந்து  உலர்வதற்குக்  காரணமான வெம்மையோடு
கூடிய;  ஓர் மங்கை கொங்கை - ஒரு மங்கையினுடைய தனங்கள்; ஓர்
வாள்  தொழில் மைந்தற்கு - வாளால் (போர்த்) தொழில் புரியும் ஒரு
வீரனுக்கு;  நீ நாட்டினை அளித்தி  என்று  நல்லவர்  -  நீ  இந்த
நாட்டினை   (உன்    போர்த்திறத்தால்)   காப்பாயாக   என்று   கூறி.
நல்லோர்கள்; ஆட்டுநீர்க்கலசம்  என்னல்  ஆன  - பட்டாபிடேகஞ்
செய்ய வைத்துள்ள (புனித) நீர்க்கலசங்களைப் போன்றிருந்தன.

இன்ப   நாட்டிற்குரிய   கலசங்களாதலின்    இவ்வாறு   கூறினார்;
தற்குறிப்பேற்ற அணி.

நாடுகாக்கும்     போருக்காகப்  பிரிந்து. வென்றி வாகை சூடி வரும்
தவைனை வரவேற்கப் பூரண கும்பமேந்தி  நிற்கின்றாள்  என்க.  அவன்
பெற்ற   துன்பம்   எல்லாம்   நீங்க    இன்பநாட்டிற்கு   அழைக்கும்
பொற்கலசத்தோடு.  ‘அந்த  நாட்டை  அளித்தாய்;  இந்த நாட்டினையும்
ஏற்பாயாக  என்று வரவேற்பது போன்றிருந்தன  பொங்கும்  கொங்கைப்
பொற்குடங்கள் என்பது கருத்து.                               39