இராம்சே
இராம்சே தலை சிறந்த விஞ்ஞானிகளுள் ஒருவர்.தனது அனுபவத்தைக் கொண்டு வேதியியல், இயற்பியல் போன்றவற்றிற்கு இடையே உண்டாகும் ஒற்றுமை, வேற்றுமைகளை ஆய்வுகளின் மூலம் அறிவித்தவர்.வாயு நிலையில் இருந்த காற்றை திரவ நிலைக்கு கொண்டு வந்து ஹீலியம், ஆர்கான், கிரிப்டான், நியான்,செனான் போன்ற வாயுக்களைக் கண்டறிந்தவர்.அறிவியல் ஆய்வுக் கழகம் இந்தியாவில் உள்ள பெங்களூருவில் உருவாவதற்கு இடத்தை அறிவித்து ஆலோசனையும் வழங்கியவர்.வருங்கால மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் முறைகள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டியவர்.அப்பேற்பட்ட தலை சிறந்த விஞ்ஞானி தான் இராம்சே.
அறிஞர் இராம்சே இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் வில்லியம், மேரி இராபர்ட்சன் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். காலம் கடந்து பிறந்ததால் அவரைப் பெற்றோர்கள் பாசத்துடன் தான் வளர்த்து வந்தனர். பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே தனி ஆசிரியர் ஒருவரை நியமித்து இராம்சே அவர்களுக்கு கல்வி கற்பித்தனர் . வசதி மிக்க குடும்பத்தில் பிறந்ததாலும், அதிக செல்லத்தை கொடுத்ததாலும் இராம்சே அதிக குறும்புத் தனத்துடன் காணப்பட்டார்.
இளைஞனான இராம்சே கல்லூரியில் சேர்ந்து 1870 ஆம் ஆண்டு தனது கல்லூரிப் படிப்பை முடித்தார்.அவருக்கு அயல் நாடு சென்று கல்வி கற்க வேண்டும் என்ற ஆசை வந்தது. பெற்றோரும் அதற்கு சம்மதித்தனர். ஜெர்மனியில் இராம்சே மேல் படிப்பை முடித்தார். டியூபின் ஜென் என்ற இடத்தில் உள்ள விஞ்ஞான ஆராய்சிக் கழகத்தில் சேர்ந்தார்.அதீத செல்வ செழிப்பை கொண்டு இருந்தாலும் வளர வளர அனுபவங்கள் நிறைய கிடைக்க இராம்சே தனது குறும்புத் தனத்தை முழுவதும் விட்டு இருந்தார். பெரியோர்களிடம் மரியாதையுடன் நடந்து கொண்டார்.
சுயநலம் இல்லாத இராம்சே ஜெர்மனியில் டாக்டர் பட்டத்தைப் பெற்றார்.பிறகு நாடு திரும்பிய அவர் கிளாஸ்கோ நகரில் உள்ள ஆண்டர்சன் கல்லூரியில் பேராசிரியராகச் சேர்ந்தார்.அப்படியே தனது விஞ்ஞான ஆராய்ச்சிகளையும் நேரம் கிடைக்கும் போது எல்லாம் செய்யத் தொடங்கினார்.தனது திறமையால் 29 வயதிலேயே பிரிஸ்டல் பல்கலைக் கழகத்தின் முதல்வரானார்.பிறகு, அவருக்கு திருமணமும் நல்ல படியாக நடந்தது.என்றாலும் இரசாயனத்திர்க்கும், பௌதீகத்திற்க்கும் இடையே உண்டாகும் ஒற்றுமைகளையும், வேற்றுமைகளையும் ஆய்வு செய்தார். அவ்வப் பொழுது ஆய்வின் முடிவுகளையும் வெளியிட்டுக் கொண்டும் இருந்தார்.அக்காலத்திலேயே அதுவும் பிரிட்டனிலேயே கல்வி வியாபாரமான நிலையில் தான் இருந்தது.பண முதலைகள் மாணவர்களிடம் அதிக பணத்தை வாங்கிக் கொண்டு குறைவான சம்பளத்தில் ஆசிரியர்களை நியமித்தனர். பல கல்லூரிகள் இதே நிலையில் இயங்கியதால் படித்துப் பட்டம் பெற்ற ஆசிரியர்களும் வேறு வழி இல்லாமல் வேண்டா வெறுப்பாக தங்களுக்குக் கிடைத்த சம்பளத்தில் வேலை பார்த்தனர்.அதனால், மாணவர்களுக்கு தங்களது முழு ஈடுபாட்டுடன் சொல்லித் தர அவர்கள் தயாராக இல்லை என்கிற நிலை. இதனை இராம்சே கண்டித்துக் குரல் எழுப்பினார்.அது மட்டும் இல்லை, இந்த நிலையை அவர் உலகிற்கு எடுத்து சொல்ல முற்பட்டார்.
அவர் அவ்வாறு போராடுவதற்கும், குரல் எழுப்புவதற்கும் இன்னொரு காரணமும் இருந்தது. பிரிட்டிஷ் அரசாங்கத்தில் லஞ்சம் வாங்குவது மிகவும் சாதாரண விஷயமாக இருந்தது. அவர்கள் காலனி ஆதிகத்தில் இருந்த நாட்டு மக்களுக்கும், லஞ்சத்தை கற்றுக் கொடுத்து இருந்தனர்.லஞ்சம் வாங்குவதில் பிரிட்டிஷ் அதிகாரிகள் உலகத்தின் பிதா மகர்களாக இருந்தனர். இதனால் தகுதியே இல்லாத கல்லூரிகளுக்கு எல்லாம் இங்கிலாந்து அரசு பணத்தை வாங்கிக் கொண்டு அனுமதி அளித்தது.இதுவும் கூட இராம்சே போராட ஒரு காரணமாக அமைந்தது. அவரது போராட்டம் சுருட்டல்களுக்கு எதிரான போராட்டமாக இருந்தது. இன்னும் சொல்லப் போனால் கல்வி வளர்ச்சிக்காக போராடினார், குரல் கொடுத்தார். அவரது போராட்டத்தில் இருந்த நியாயத்தை பிரிட்டன் புரிந்து கொண்டது. மேலும், அடிப்படை வளர்ச்சி இல்லாத கல்லூரிகளை மேம்படுத்த ஒப்புக் கொண்டது. இந்தப் போராட்டத்தால் செல்வாக்குப் பெற்ற இராம்சேவுக்கு, லண்டன் பல்கலைக் கழக பேராசிரியர் பதவி தேடி வந்தது.
பேராசிரியர் பதவி கிடைத்தாலும் இராம்சே தனது ஆராய்ச்சியை மட்டும் நிறுத்த வில்லை.அவர் அப்போது காற்றில் கலந்துள்ள வாயுக்கள் பற்றி ஆய்வு நடத்திக் கொண்டு இருந்தார்.அப்பொழுது இயற்பியல் அறிஞர் இராலிப் பிரபு, நைட்ரஜன் வாயு பற்றி கருத்து தெரிவித்து இருந்தார். அவரின் கருத்துக்களுக்கு பல்வேறு எதிர்ப்புகள் எழும்பியது.ஆனால், இராம்சேவுக்கு இராலியின் கருத்தில் உடன் பாடு இருந்தது. எனவே அறிஞர் இராலியை இராம்சே சந்தித்துப் பேசினார்.இருவருக்கும் ஒரு நட்பு மலர்ந்தது. இருவரும் ஒத்த கருத்து உடையவர்களாக இருந்தார்கள் என்பதால், இருவரும் சேர்ந்தே ஆராய்ச்சி செய்ய உடன் பட்டனர்.
காற்றில் இருந்து நைட்ரஜனைப் பிரித்தெடுக்கும் பணியில் இராலி ஈடுபட்டார். அதே நைட்ரஜனை இரசாயன முறையில் பிரித்தெடுக்க வேண்டும் என்று இராம்சே முயற்சி செய்து கொண்டு இருந்தார். கடைசியில் இருவரது பரிசோதனையும் வெற்றி பெற்றது. ஆனால், அவர்கள் பிரித்தெடுத்த நைட்ரஜன்களுக்கு இடையே எடையில் ஒன்றுக் ஒன்று வேறுபாடு இருப்பதை உணர்ந்தனர். காற்றில் இருந்து பிரித்து எடுக்கப் பட்ட நைட்ரஜன் எடை அதிகமாக இருந்தது. ஆனால் இரசாயன முறையில் பிரித்து தனியே எடுக்கப் பட்ட நைட்ரஜன் சற்று எடை குறைவாக இருந்தது. இராலி காற்றில் இருந்து பிரிக்கப்பட்ட நைட்ரஜன் எடை அதிகம் இருக்கக் காரணம், அதில் சிறிது பிராணவாயு, நீர்வாயு மற்றும் சில வாயுக்களின் கலவை உள்ளதே காரணம் என்றார். ஆனால் இராலி அவர்களால் அதனை நிரூபிக்க முடியவில்லை. அதனால் தனியே ஆய்வுகளை மேற்கொள்ளாமல் இராலி, இராம்சே அவர்களது ஆய்வுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்.
இராம்சேவுக்கு ஆய்வின் போது இடையிடையே ஏற்பட்ட சந்தேகங்களை இராலி அவரது அனுபவத்தைக் கொண்டு தீர்த்து வைத்தார். இறுதியில் இராம்சே மேற்கொண்ட ஆய்வுகளில் இருந்து காற்றில் பல வாயுக்கள் கலந்து இருப்பதை நிரூபித்தார். தான் கண்டு பிடித்ததை உலகம் வியக்க ஒவ்வொன்றாக எடுத்து உரைக்கத் தொடங்கினார். அவரது அந்த ஆராய்ச்சியின் பயனாக கூடவே "ஹீலியம் " என்ற மந்த வாயுவைக் கண்டு பிடித்தார். இது தவிர தனது தொடர்ச்சியான ஆராய்சிகளின் மூலம் நியான், செனான், கிரிப்டான் போன்ற மற்ற புதிய வாயுக்களை கண்டு பிடித்து ஆராய்ச்சிகள் மூலம் உலகிற்கு பறை சாற்றினார். இதனால் அவரது புகழ் உலகம் முழுவதும் ஓங்கியது.
இராம்சே தனது ஆய்வுக் கட்டுரையில் இவ்வாறு எழுதுகிறார் அதாவது " ஒரு கண அங்குலத்தில் 15,650 கன மில்லி மீட்டரில் ஒரே ஒரு கன மில்லி மீட்டர் அளவு தான் நியான் வாயுவின் எடை இருக்கும்."
அவரது ஆய்வைப் பாராட்டி 1904 ஆம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. உலகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களும் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் அளித்தது. ஆங்கிலேய அரசு அப்போது இந்தியாவை ஆண்டு கொண்டு இருந்தது, இந்தியாவில் அவர்கள் தொடங்கிய அறிவியல் ஆய்வுக் கழகத்திற்கு இராம்சேவை ஆலோசனை வழங்கும் படி நியமித்தார்கள் (என்பது குறிப்பிடத்தக்கது). அவரது ஆலோசனை படி ஆங்கிலேய அரசு பள்ளித் திட்டத்தில் மாற்றத்தை கொண்டு வந்தது. அப்பொழுது இருந்து பள்ளிகளில் மாணவர்களுக்கு ஏட்டுப் பயிற்சி மட்டும் அளிக்காமல், பள்ளிகளில் (இராம்சேவின் ஆலோசனைப் படி) ஆய்வுக் கூடங்களை அமைத்துக் கட்டாய ஆய்வுப் பயிற்ச்சிகளை மாணவர்களுக்கு அளித்தது அப்போதைய ஆங்கிலேய அரசு, அந்த கல்வித் திட்டம் இன்று வரையில் இந்தியாவில் தொடர்வது குறிப்பிடத்தக்கது. இன்று இராம்சே இல்லை, ஆனால் அவரது கண்டு பிடிப்புகள் அவரை இன்றும் நினைவு படுத்திக் கொண்டு தான் உள்ளது.
