நெருவூர்

bookmark

பாடல் 930
தனன தனதன தனதன தனதன 
தனன தனதன தனதன தனதன 
தனன தனதன தனதன தனதன ...... தனதான 


குருவு மடியவ ரடியவ ரடிமையு 
மருண மணியணி கணபண விதகர 
குடில செடிலினு நிகரென வழிபடு ...... குணசீலர் 

குழுவி லொழுகுதல் தொழுகுதல் விழுகுதல் 
அழுகு தலுமிலி நலமிலி பொறையிலி 
குசல கலையிலி தலையிலி நிலையிலி ...... விலைமாதர் 

மருவு முலையெனு மலையினி லிடறியும் 
அளக மெனவள ரடவியில் மறுகியு 
மகர மெறியிரு கடலினில் முழுகியு ...... முழலாமே 

வயலி நகரியி லருள்பெற மயில்மிசை 
யுதவு பரிமள மதுகர வெகுவித 
வனச மலரடி கனவிலு நனவிலு ...... மறவேனே 

உருவு பெருகயல் கரியதொர் முகிலெனு 
மருது நெறிபட முறைபட வரைதனில் 
உரலி னொடுதவழ் விரகுள இளமையு ...... மிகமாரி 

உமிழ நிரைகளி னிடர்கெட வடர்கிரி 
கவிகை யிடவல மதுகையு நிலைகெட 
வுலவில் நிலவறை யுருவிய வருமையு ...... மொருநூறு 

நிருப ரணமுக வரசர்கள் வலிதப 
விசயன் ரதமுதல் நடவிய வெளிமையு 
நிகில செகதல முரைசெயு மரிதிரு ...... மருகோனே 

நிலவு சொரிவளை வயல்களு நெடுகிய 
குடக தமனியு நளினமு மருவிய 
நெருவை நகருறை திருவுரு வழகிய ...... பெருமாளே.