நகர் நீங்கு படலம் - 1781

1781.
‘சிந்தை தளர்வுற்று, அயர்தல்
சிறிதும் இலெனாய், “இன் சொல்
மைந்தன் உளன்ழு என்றதனால்,
மகிழ்வோடு இவண் வந்தனெனால்;
அந்த முனி சொற்றமையின்,
அண்ணல் வனம் ஏகுதலும்,
எம்தம் உயிர் வீகுதலும்,
இறையும் தவறா’ என்றான்.
‘சிந்தை தளர்வுற்று அயர்தல் சிறிதும் இலெனாய் - மனம்
தளர்ந்து சோர்வடைதல்சிறிதும் இல்லாமல்; இன் சொல் மைந்தன்
உளன்’ என்றதனால் - இனிய சொற்களைப்பேசும் மகன் பிறப்பான்’
என்பது அவன் சாபத்தால் ஏற்பட்டதனால்; இவண் -நகரத்துக்கு;
மகிழ்வோடு வந்தனென் - மகிழ்ச்சியோடு வந்து சேர்ந்தேன்; அந்த முனி
சொற்றமையின் - அந்த முனிவன் சொன்னபடியால்; அண்ணல் வனம்
போகுதலும் -இராமன் (என்னைப்) பிரிந்து காடு செல்லுதலும்; எம்தம்
உயிர் வீகுதலும் - என்னுடைய உயிர் போவதும்; இறையும் தவறா’ -
சிறிதளவும் மாறா; என்றான் -
மகன் இன்றி இருந்த தயரதனுக்கு முனிவன் சாபம் மகன் உண்டு
என்பதை உணர்த்திற்று என்பதால் அப்போதைக்கு அது
மகிழ்ச்சியானதாகவே ஆயிற்று என்றானாம் - மகன் பிறப்பது முனிவன்
சாபத்தால் உண்மையாகி நிறைவேறியமையின் மகன்பிரிவதும், தன்னுயிர்
போவதும்கூட அச்சாபப்படி நிறைவேறுவது உறுதி என்றான். ‘ஆல் ’
அசை.‘என்றா ன்’ என்றமையவேண்டியது எதுகை நோக்கி எந்தம் என
நின்றது. 87