நகர் நீங்கு படலம் - 1782

1782.
இம் மா மொழி தந்து அரசன்
இடர் உற்றிடுபோழ்தினில், அச்
செம் மா மயில் கோசலையும்,
திகையா, உணர்வு ஓவினளால்;
மெய்ம்மாண் நெறியும், விதியின்
விளைவும், தளர்வின்றி உணரும்
அம்மா தவனும் விரைவோடு
அவலம் தரு நெஞ்சினனாய்.
ஓவினள் - ஒழிந்தாள்; மாதவன் - வசிட்டன் 87-1