கடிமணப் படலம் - 1272

1272.
பண்டியில் நிறை வாசப் பனி மலர் கொணர்வாரும்.
தண்டலை இலையோடு. கனி பல தருவாரும்.
குண்டலம் வெயில் வீசக் குரவைகள் புரிவாரும்.
உண்டை கொள் மத வேழத்து ஓடைகள் அணிவாரும்.*
பண்டியில் நிறைவாசப் பனிமலர் கொணர்வாரும் - வண்டிகளிலே
நிறைந்த வாசமுடைய குளிர்ந்த மலர்களைக் கொண்டு வருபவர்களும்;
தண்டலை இலையோடு கனிபல தருவாரும் - சோலைகளிலேயுள்ள
(வாழை முதலிய) இலைகளையும் (பல்வகைக்) கனிகளையும் கொண்டு
வருபவர்களும்; குண்டலம் வெயில்வீசக் குரவைகள் புரிவாரும் -
தங்கள் குண்டலம் என்னும் காதணிகள் (அசைவதனால்) ஒளி வீசப்
(பலர் கை கோத்து ஆடும்) (குரவைக் கூத்து) ஆடுபவரும்;
உண்டைகொள் மதவேழத்து ஓடைகள் அணிவாரும் - கவளம்
கவளமாக உண்ணும் வழக்கமுடைய மதயானைகளின் நெற்றியில் முக
படாங்களை அணிகின்றவர்களும் (ஆயினர்).
வெயிற்கடுமை நீங்க. பொது இடங்களில் பரப்பவும் பந்தர் இடவும்
இலைகளையும். மலர்களையும். விருந்தோம்புதற்குக் கனிகளையும்
வண்டி வண்டியாகக் கொண்டுவந்தனர் என்பதாம். 28