களாக்காய்
பசியின்மை, பித்தம், குமட்டல் போன்றவற்றை குணமாக்கும் தன்மை களாக்காயிற்கு உண்டு. இது தாகம் மற்றும் நா வறட்சியை போக்குகிறது.
இது இரத்தசோகை ஏற்படாமல் இருக்க உதவுகிறது.
பற்கள் மற்றும் ஈறுகளில் இரத்த கசிவு ஏற்படுவதை களாக்காய் தடுக்க கூடியது.
மேலும் களாக்காய் ஈரலுக்கு வலிமை சேர்க்கும் மற்றும் மஞ்சள் காமாலை உண்டாகாமல் தடுக்கும் வல்லமை கொண்டது.
இரத்தக்கொதிப்பு மற்றும் சர்க்கரைநோயை குறைக்கவும், செரிமான பிரச்சனைகளை சரிசெய்யவும் இந்த காய்கள் பயன்படுத்தப்படுகிறது.
