விளையாட்டு : ஆடும்-ஓநாயும்

வரி*சையாக ஒருவன் இடுப்பை மற்றவன் பிடித்தபடி சிறுவர்கள் நிற்பார்கள். இவர்கள் ஆடுகள். ஒருவன் மட்டும் சுற்றிவந்து கூட்டத்திலிருந்து பிரிபவனைப் பிடிக்க முயலுவான். அவன் ஓநாய். ஆடுகளும், ஓநாயும் பாட்டுப் பாடிக் கொண்டே விளையாடும் இந்தப் பாடல் விளாத்திகுளம் பகுதியில் பாடப்படுவது.
ஓநாய்: என்னாட்டைக் காணோமே
ஆடு: தேடிப் பிடிச்சுக்கோ
ஓநாய்: அடுப்பு மேலே ஏறுவேன்
ஆடு: துடுப்பைக் கொண்டு சாத்துவேன்
ஓநாய்: நெல்லைக் கொறிப்பேன்
ஆடு: பல்லை உடைப்பேன்
ஓநாய்: வடிதண்ணியைக் கொட்டுவேன்
ஆடு: வழிச்சு வழிச்சு நக்கிக்கோ
ஓநாய்: கோட்டை மேலே ஏறுவேன்
ஆடு: கொள்ளி கொண்டு சாத்துவேன்
ஓநாய் என்னாட்டைக் காணோமே?
ஆடு: தேடிப் பிடிச்சுக்கோ.
சேகரித்தவர்: S. S. போத்தையா
இடம்: விளாத்திகுளம் வட்டம், திருநெல்வேலி மாவட்டம்.
--------------