நகர் நீங்கு படலம் - 1797

1797.
‘ஆளான் பரதன் அரசு’
என்பார்; ‘ஐயன், இனி
மீளான்; நமக்கு விதி
கொடிதேகாண்’ என்பார்;
‘கோள் ஆகி வந்தவா,
கொற்ற முடிதான்’ என்பார்;
‘மாளாத நம்மின் மனம்
வலியார் ஆர்?’ என்பார்.
‘பரதன்அரசு ஆளான் - பரதன் அரசாட்சியை ஏற்கமாட்டான்;’
என்பார் - ; ‘ ஐயன் இனி மீளான் - இராமன்இனிமேல் நாடு திரும்ப
மாட்டான்; நமக்கு விதி கொடிதே காண்’- நமக்கு ஊழ் வினை மிகவும்
கொடுமையானது;’ என்பார் - ; ‘ கொற்ற முடிதான்- வெற்றியுடைய
மகுடம்; கோள் ஆகி வந்தவா‘ - தீய இடையூறாகிவந்து சேர்ந்தபடி
என்னே;’ என்பார் - ; மாளாத நம்மின் மனம் வலியார்ஆர்?’ -
(இத்தனையும் கேட்டு வைத்தும் கண்டு வைத்தும் ) இறந்துபடாத நம்மைக்
காட்டிலும் உலகில் கொடுமனம் உடையவர்கள்யார் உளர்;’ என்பார் -.
முடிசூடுதல் என்ற பேச்சு வரவில்லையானால் வனம் செல்லும்
துயர்நிலை இராமனுக்கு வந்திராதேஎன்னும் ஆதங்கத்தால் முடியே
இடையூறாகித் தீங்கு செய்தது என்பாராயினர்.