நகர் நீங்கு படலம் - 1751

1751.
"கறுத்தாய் உருவம்; மனமும்
கண்ணும் கையும் செய்யாய்;
பொறுத்தாய் பொறையே; இறைவன்,
புரம் மூன்று எரித்த, போர் வில்
இறுத்தாய்; "தமியேன்" என்னாது,
என்னை இம் மூப்பிடையே
வெறுத்தாய்; இனி, நான் வாழ்நாள்
வேண்டேன்! வேண்டேன்! என்றான்.
‘உருவம் கறுத்தாய்! - திருமேனி கறுத்திருப்பவனே; மனமும்
கண்ணும் கையும்செய்யாய்! - உள்ளமும் கண்ணும் கையும் செம்மையாக
இருப்பவனே; பொறையேபொறுத்தாய்! - பொறுமையையே
தரித்திருப்பவனே; இறைவன் - சிவபிரான்; மூன்று புரம் எரித்த
போர்வில் இறுத்தாய்! - முப்புரங்களை எரித்த காலத்துப் பிடித்த
போர்க்குரிய வில்லை (சீதா கல்யாணத்துக்கு முன்) ஒடித்தவனே; ‘தமியேன்'
என்னாது -தனித்துத் துணையின்றி உள்ளேன் என்ற கருதாது; என்னை
இம் மூப்பிடையே வெறுத்தாய் - என்னை இம்முதுமைக் காலத்தில்
வெறுத்திட்டாய்; இனி நான் வாழ்நாள் வேண்டேன்வேண்டேன்' -
இனிமேல் நான் வாழும் நாளை விரும்பமாட்டேன்; என்றான் - .
இராமன் சிறப்புகளை எல்லாம் நினைந்து நைந்துருகுகிறான் தயரதன்.
‘வேண்டேன், வேண்டேன்'புலம்பலில் வந்த அடுக்கு. உள்ளத்துக்குச்
செம்மை கோட்ட மின்மையாம். மற்றவைநிறம். 57