கேள்வியில்லை

தங்க மலையிலேயே
தரகறுக்கப் போனாலும்
தங்கமலைக்காரன்
தனிச்சடிச்சாக் கேள்வியில்லை
பொன்னு மலையோரம்
புல்லறுக்கப் போனாலும்
பொன்னுமலை வேடர்கள்
புகுந்தடிச்சாக் கேள்வியில்லை
வெள்ளி மலையோரம்
விறகறுக்கப் போனாலும்
வெள்ளிமலை வேடுவர்கள்
விரட்டியடிச்சாக் கேள்வியில்லை
---------
விதவையை யாரும் மதிக்கமாட்டார்கள். துணைவனோடு வாழும்போது அவளுக்குத் துணிவு இருந்தது. ஆதரவு இருந்தது. இப்பொழுது பழைய வேலைகளுக்கு அவள் போனால் அவளை யாராவது கொடுமைப்படுத்தினால் அவளுக்கு ஆதரவு யார்? எல்லோரும் இழிவாக கருதுவதனால் வேலைக்கு போகாமல் இருக்க முடியுமா? வேலை செய்தால்தானே கஞ்சி காய்ச்ச முடியும்?