ஏக்கம்

சித்திரக்காலி செவந்த-நான்
செவந்த மணவாரி
உப்பூத்தி நெல்லிலே-என்ன
ஊட கலந்தியளே
நந்தவனம் பூஞ்சோலை
நடுக்கிணறு சாவடியாம்
தங்கப் புண்ணியர்-இல்லாமே-அய்யா
புதுக்கிணறு பாழாச்சே
செப்போடு போட்டு
சிங்கம் போல் தூணிறுத்தி
எப்போதும் போல-மன்னா-உம்மை
உடனிருக்கத் தேடுதனே
பத்து வகைப் பச்சிலையாம்
பார்வதியாள் மாத்திரையாம்
பார்வதியாள் உரைக்குங்குள்ளே-உம்ம
பகவான் அழைச்சானோ?