நகர் நீங்கு படலம் - 1791

1791.
கிள்ளையொடு பூவை
அழுத; கிளர் மாடத்து -
உள் உறையும் பூசை
அழுத; உரு அறியாப்
பிள்ளை அழுத;
பெரியோரை என் சொல்ல? -
‘வள்ளல் வனம் புகுவான் ’
என்று, உரைத்த மாற்றத்தால்.
வள்ளல் - இராமன்; ‘வனம் புகுவான் - காடு செல்வான்;’ என்று
உரைத்த மாற்றத்தால் - என்று சொல்லிய சொல்லால்; கிள்ளையொடு
பூவை அழுத -கிளியும், நாகணவாய்ப் பறவையும் அழுதன; கிளர்
மாடத்து உள் உறையும் பூசை அழுத -விளங்குகின்ற மாளிகையின்
உள்ளே வசிக்கின்ற வீட்டுப் பூனைகள் அழுதன; உரு அறியாப்பிள்ளை
அழுத - வடிவத்தைப் பார்த்து அறிய மாட்டாத சிறு குழந்தைகள் அழுதன;
பெரியோரை என் சொல்ல? - பெரியோர்கள் அழுதமைமையப் பற்றி
என்னவென்று சொல்வது?
அஃறிணைப் பொருள்களும் இராமன் பிரிவால் துயர் உறுவனவாகச்
சொல்கிறார். ‘ உரு அறியாப் பிள்ளை’ கருவில் இருக்கும் வடிவு காணாத
குழந்தைகளும் அழுதன என்று துக்கத்தின் உச்சநிலையைக் காட்டிப்
பொருள் உரைப்பினும் அமையும். இவையே இவ்வாறாயினமையின்
பெரியோர்கள்அழுதமைபற்றிச் சொல்ல வேண்டுவதில்லை. 96