நகர் நீங்கு படலம் - 1789

1789.
மாதர் அருங் கலமும்
மங்கலமும் சிந்தி, தம்
கோதை புடைபெயர,
கூற்று அனைய கண் சிவப்ப,
பாத மலர் சிவப்ப,
தாம் பதைத்துப் பார் சேர்ந்தார் -
ஊதை எறிய
ஒசி பூங் கொடி ஒப்பார்.
மாதர்தாம் - மகளிர்; அருங்கலமும் மங்கலமும் சிந்தி - அரிய
அணிகலன்களும் மங்கலநாணும் கீழே விழ; தம் கோதை புடை பெயர -
தம்முடைய கூந்தல்பக்கத்தில் குலைந்து விழ; கூற்று அனைய கண்
சிவப்ப - யமனை ஒத்த கண்கள்சிவக்க; பாதமலர் சிவப்ப - அடிமலர்
சிவக்க; ஊதை எறிய - பெருங்காற்று வீசுவதனால்; ஒசி - ஒடிந்து
வீழ்கின்ற; பூங்கோடி ஒப்பார் - பூங்கொடியைஒத்தவர்களாய்; பதைத்துப்
பார் சேர்ந்தார் - துடித்துப் பூமியில் விழுந்தார்கள்.
‘பூங்கொடி’ இயல்பில் மெல்லிய மகளிர்க்கு உவமை. இங்கே ‘ஊதை
எறிய’ என்றபடியால், துயர நிலையில் துடித்துத் தரையில் வீழும்
பெண்களுக்கு உவமை ஆயிற்று. 94