நகர் நீங்கு படலம் - 1770

1770.
‘கையும் கடனும் நெகிழக்
கணையோடு உருள்வோற் காணா,
மெய்யும் தனுவும் மனனும்
வெறிது ஏகிட, மேல் வீழா,
‘ஐய! நீதான் யாவன்?
அந்தோ! அருள்க” என்று அயர,
பொய் ஒன்று அறியா மைந்தன்,
“கேள் நீ ” என்னப் புகல்வான்.
‘கையும்கடனும் நெகிழ - கையும் குடமும் நெகிழ்ந்து விலக;
கணையோடுஉருள்வோன் காணா - அம்போடு தரையில் உருளுகின்ற
முனிமகனைக் கண்டு; மெய்யும் தனுவும்மனனும் வெறிது ஏகிட- (என்)
உடலும் வில்லும் மனமும் வெறுமையாகிச் செல்ல; மேல்வீழா- மேலே
விழுந்து; ‘அந்தோ! - ஐயோ; ஐய!- ஐயனே; நீ தான்யாவன் -நீ
யார்; அருள்க’ - சொல்வாயாக;’ என்றுஅயர - என்றுகேட்டுச்
சோர்வடைய; பொய் ஒன்று அறியா மைந்தன் -சத்தியவாக்கினன்
ஆகிய அம் முனி மகன்; ‘நீ கேள்ழு எனப் புகல்வான்-நீஇதனைக்
கேள் என்று தன் வரலாற்றைச் சொல்வானாயினன்.’
தான் செய்த தவறால் உள்ளீடற்று மனமும் உடலும் வெறுமையானது
என்றானாம். வில் கீழேவிழுந்து விட்டதாகலின் வெறுமையானது. கடம் -
கடன் போலி; மனன் - மனம்; இதுவும் போலி. 76