திருவாடனை

பாடல் 981
ராகம் - ராகமாலிகை
தாளம் - கண்டசாபு (2 1/2)
தானான தத்ததன தானான தத்ததன
தானான தத்ததன ...... தனதான
ஊனாரு முட்பிணியு மானாக வித்தவுதட
லூதாரி பட்டொழிய ...... வுயிர்போனால்
ஊரார் குவித்துவர ஆவா வெனக்குறுகி
ஓயா முழக்கமெழ ...... அழுதோய
நானா விதச்சிவிகை மேலே கிடத்தியது
நாறா தெடுத்தடவி ...... யெரியூடே
நாணாமல் வைத்துவிட நீறாமெ னிப்பிறவி
நாடா தெனக்குனருள் ...... புரிவாயே
மானாக துத்திமுடி மீதே நிருத்தமிடு
மாயோனு மட்டொழுகு ...... மலர்மீதே
வாழ்வா யிருக்குமொரு வேதாவு மெட்டிசையும்
வானோரு மட்டகுல ...... கிரியாவும்
ஆனா வரக்கருடன் வானார் பிழைக்கவரு
மாலால முற்றவமு ...... தயில்வோன்முன்
ஆசார பத்தியுடன் ஞானாக மத்தையருள்
ஆடானை நித்தமுறை ...... பெருமாளே.