பிணி வீட்டு படலத்தின் பாடல்கள்

சுந்தர காண்டம்
கம்பராமாயணத்துள் மிகவும் போற்றக்கூடிய பகுதியாக விளங்குவது சுந்தர காண்டமாகும். இங்கு சுந்தரன் என்று குறிக்கப் பெறுபவன் அனுமன் ஆவான். சொல்லின் செல்வன் என்று கம்பர் அனுமனது பெருமையை விளக்குகிறார். இராமனைப் பிரிந்த சீதைக்கும், சீதையைப் பிரிந்த இராமனுக்கும் இடையில் பிள்ளையைப் போலத் தூது சென்று அவர்தம் உள்ளக்கருத்தை உள்ளபடி உரைத்தபாங்கினாலேயே இதற்குச் சுந்தர காண்டம் எனப் பெயர் ஏற்பட்டது. சுந்தரம் என்றால் அழகு என்று பொருள். இன்றும் கணவன்-மனைவி ஆகிய தம்பதியரிடையே ஏற்படும் உளவேறுபாடுகளைத் தீர்ப்பதற்கு சுந்தர காண்டம் படிப்பது வழக்கமாக உள்ளது. சுந்தரகாண்டம் பதினான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
பிணி வீட்டு படலம்
உற்று உண்டாய விசும்பை உருவினாய்,
முற்றுண்டாய்; கலை யாவையும் முற்றுறக்
கற்றுண்டாய்; ஒரு கள்ள அரக்கனால்
பற்றுண்டாய்; இதுவோ அறப் பான்மையே?
கடல் கடந்து புகுந்தனை; கண்டகர்
உடல் கடந்தும் நின் ஊழி கடந்திலை;
அடல் கடந்த திரள் புயத்து ஐய! நீ
இடர்கள் தந்தனை, வந்து இடர் மேலுமே?
ஆழி காட்டி, என் ஆர் உயிர் காட்டினாய்க்கு,
"ஊழி காட்டுவேன்" என்று உரைத்தேன்; அது
வாழி காட்டும் என்று உண்டு; உன் வரைப் புயப்
பாழி காட்டி, அரும் பழி காட்டினாய்.
கண்டு போயினை, நீள் நெறி காட்டிட,
"மண்டு போரில் அரக்கனை மாய்த்து, எனைக்
கொண்டு மன்னவன் போம்" எனும் கொள்கையைத்
தண்டினாய்-எனக்கு ஆர் உயிர் தந்த நீ!
ஏய பன்னினள் இன்னன; தன் உயிர்
தேய, கன்று பிடியுறத் தீங்கு உறும்
தாயைப் போல, தளர்ந்து மயங்கினாள்-
தீயைச் சுட்டது ஓர் கற்பு எனும் தீயினாள்.
இந்திரசித்து அனுமனை இராவணனது அரண்மனையுள் கொண்டு சேர்த்தல்
பெருந் தகைப் பெரியோனைப் பிணித்த போர்
முருந்தன், மற்றை உலகு ஒரு மூன்றையும்
அருந் தவப் பயனால் அரசு ஆள்கின்றான்
இருந்த, அப் பெருங் கோயில் சென்று எய்தினான்;
இராவணன் அரசவையில் வீற்றிருக்கும் காட்சி
தலங்கள் மூன்றிற்கும் பிறிது ஒரு மதி தழைத்தென்ன,
அலங்கல் வெண்குடைத் தண் நிழல் அவிர் ஒளி பரப்ப,
வலம் கொள் தோளினான் மண்நின்றும் வான் உற எடுத்த,
பொலம் கொள் மா மணி, வெள்ளியங்குன்று எனப் பொலிய,
புள் உயர்த்தவன் திகிரியும், புரந்தரன் அயிலும்,
தள் இல் முக்கணான் கணிச்சியும், தாக்கிய தழும்பும்,
கள் உயிர்க்கும் மென் குழலியர் முகிழ் விரல் கதிர் வாள்
வள் உகிர்ப் பெருங் குறிகளும், புயங்களில் வயங்க,
துன்று செம் மயிர்ச் சுடர் நெடுங் கற்றைகள் சுற்ற,
நின்று திக்குற நிரல்படக் கதிர்க் குழாம் நிமிர,
ஒன்று சீற்றத்தின் உயிர்ப்பு எனும் பெரும் புகை உயிர்ப்ப,
தென் திசைக்கும் ஓர் வடவனல் திருத்தியது என்ன,
மரகதக் கொழுங் கதிரொடு மாணிக்க நெடு வாள்
நரக தேயத்துள் நடுக்குறா இருளையும் நக்க,
சிரம் அனைத்தையும் திசைதொறும் திசைதொறும் செலுத்தி,
உரகர்கோன் இனிது அரசு வீற்றிருந்தனன் ஒப்ப,
குவித்த பல் மணிக் குப்பைகள் கலையொடும் கொழிப்ப,
சவிச் சுடர்க் கலன் அணிந்த பொன் தோளொடு தயங்க,
புவித் தடம் படர் மேருவைப் பொன் முடி என்னக்
கவித்து, மால் இருங் கருங் கடல் இருந்தது கடுப்ப,
சிந்து ராகத்தின் செறி துகில் கச்சொடு செறிய,
பந்தி வெண் முத்தின் அணிகலன் முழு நிலாப் பரப்ப,
இந்து வெண்குடை நீழலில், தாரகை இனம் பூண்டு,
அந்தி வான் உடுத்து, அல்லு வீற்றிருந்ததாம் என்ன,
வண்மைக்கும், திரு மறைகட்கும், வானினும் பெரிய
திண்மைக்கும், தனி உறையுளாம் முழு முகம், திசையில்
கண் வைக்கும்தொறும், களிற்றொடு மாதிரம் காக்கும்
எண்மர்க்கும் மற்றை இருவர்க்கும் பெரும் பயம் இயற்ற
ஏகநாயகன் தேவியை எதிர்ந்ததன் பின்னன,
நாகர் வாழ் இடம் முதல் என, நான்முகன் வைகும்
மாக மால் விசும்பு ஈறு என, நடுவண வரைப்பில்
தோகை மாதர்கள், மைந்தரின் தோன்றினர், சுற்ற,
வானரங்களும், வானவர் இருவரும், மனிதர்
ஆன புன் தொழிலோர் என இகழ்கின்ற அவரும்,
ஏனை நின்றவர் இருடியர் சிலர், ஒழிந்து யாரும்,
தூ நவின்ற வேல் அரக்கர்தம் குழுவொடு சுற்ற,
கூடு பாணியின் இசையொடும், முழவொடும் கூட,
தோடு சீறு அடி விழி மனம் கையொடு தொடரும்
ஆடல் நோக்குறின், அருந் தவ முனிவர்க்கும் அமைந்த
வீடு மீட்குறும் மேனகைமேல், நகை விளங்க,
பொதும்பர் வைகு தேன் புக்கு அருந்துதற்கு அகம் புலரும்
மதம் பெய் வண்டு எனச் சனகிமேல் மனம் செல, மறுகி
வெதும்புவார், அகம் வெந்து அழிவார், நகில் விழி நீர்
ததும்புவார், விழித் தாரை வேல், தோள்தொறும் தாக்க,
மாறு அளாவிய, மகரந்த நறவு உண்டு மகளிர்
வீறு அளாவிய முகிழ் முலை மெழுகிய சாந்தின்
சேறு அளாவிய சிறு நறுஞ் சீகரத் தென்றல்,
ஊறு அளாவிய கடு என, உடலிடை நுழைய,
திங்கள் வாள் நுதல் மடந்தையர் சேயரி கிடந்த
அம் கயத் தடந் தாமரைக்கு அலரியோன் ஆகி,
வெங் கண் வானவர் தானவர் என்று இவர் விரியாப்
பொங்கு கைகள் ஆம் தாமரைக்கு இந்துவே போன்று,
இராவணனைக் கண்ணுற்ற மாருதியின் மன நிலை
இருந்த எண் திசைக் கிழவனை, மாருதி எதிர்ந்தான்;
கருந் திண் நாகத்தை நோக்கிய கலுழனின் கனன்றான்;
திருந்து தோளிடை வீக்கிய பாசத்தைச் சிந்தி,
உருந்து நஞ்சு போல்பவன்வயின் பாய்வென் என்று உடன்றான்.
உறங்குகின்றபோது உயிருண்டல் குற்றம் என்று ஒழிந்தேன்;
பிறங்கு பொன் மணி ஆசனத்து இருக்கவும் பெற்றேன்;
திறங்கள் என் பல சிந்திப்பது? இவன் தலை சிதறி,
அறம் கொள் கொம்பினை மீட்டு, உடன் அகல்வென் என்று அமைந்தான்.
தேவர், தானவர், முதலினர், சேவகன் தேவி
காவல் கண்டு இவண் இருந்தவர், கண்புலன் கதுவ,
பாவகாரி தன் முடித் தலை பறித்திலென்என்றால்,
ஏவது யான் இனிமேல் செயும் ஆள்வினை? என்றான்.
"மாடு இருந்த மற்று இவன் புணர் மங்கையர் மயங்கி
ஊடு இரிந்திட, முடித் தலை திசைதொறும் உருட்டி,
ஆடல்கொண்டு நின்று ஆர்க்கின்றது; அது கொடிது அம்மா!
தேடி வந்தது, ஓர் குரங்கு" எனும் வாசகம் சிறிதோ?
நீண்ட வாள் எயிற்று அரக்கனைக் கண்களின் நேரே
காண்டல் வேண்டி, இவ் உயிர் சுமந்து, எதிர் சில கழறி,
மீண்ட போது உண்டு வசைப்பொருள்; வென்றிலேன்எனினும்,
மாண்ட போதினும், புகழ் அன்றி மற்றும் ஒன்று உண்டோ ?
என்று, தோளிடை இறுக்கிய பாசம் இற்று ஏக,
குன்றின்மேல் எழு கோள் அரிஏறு என, குதியின்
சென்று கூடுவல் என்பது சிந்தனை செய்யா-
நின்று, காரியம் அன்று என, நீதியின் நினைந்தான்.
கொல்லலாம் வலத்தனும் அல்லன்; கொற்றமும்
வெல்லலாம் தரத்தனும் அல்லன்; மேலை நாள்
அல் எலாம் திரண்டன நிறத்தன் ஆற்றலை
வெல்லலாம் இராமனால்; பிறரும் வெல்வரோ?
என்னையும் வெலற்கு அரிது இவனுக்கு; ஈண்டு இவன்-
தன்னையும் வெலற்கு அரிது எனக்கு; தாக்கினால்,
அன்னவே காலங்கள் கழியும்; ஆதலான்,
துன்ன அருஞ் செருத் தொழில் தொடங்கல் தூயதோ?
"ஏழ் உயர் உலகங்கள் யாவும் இன்புற,
பாழி வன் புயங்களோடு அரக்கன் பல் தலை,
பூழியில் புரட்டல் என் பூணிப்பு ஆம்" என,
ஊழியான் விளம்பிய உரையும் ஒன்று உண்டால்.
"இங்கு ஒரு திங்களோ இருப்பல் யான்" என,
அம் கண் நாயகன்தனது ஆணை கூறிய
மங்கையும் இன் உயிர் துறத்தல் வாய்மையால்-
பொங்கு வெஞ் செருவிடைப் பொழுது போக்கினால்.
ஆதலான், அமர்த்தொழில் அழகிற்று அன்று; அருந்
தூதன் ஆம் தன்மையே தூய்து என்று, உன்னினான்;
வேத நாயகன் தனித் துணைவன், வென்றி சால்
ஏதில் வாள் அரக்கனது இருக்கை, எய்தினான்
இராவணனிடம் இந்திரசித்து அனுமனைப் பற்றிக் கூறுதல்
ஈட்டிய குழுவிடை இருந்த வேந்தற்குக்
காட்டினன், அனுமனை-கடலின் ஆர் அமுது
ஊட்டிய உம்பரை உலைய ஒட்டினான்.
தவனை உற்று, அரி உருவான ஆண்தகை,
சிவன் எனச் செங்கணான் எனச் செய் சேவகன்,
இவன் எனக் கூறி நின்று, இரு கை கூப்பினான்.
இராவணன் அனுமனைச் சினந்து நோக்கி, நீ யார்? என வினாவுதல்
தூக்கிய அனுமன் மெய்ம் மயிர் சுறுக்கொள்,
தாக்கிய உயிர்ப்பொடும் தவழ்ந்த வெம் புகை
வீக்கிய, அவனுடல் விசித்த பாம்பினே.
துன்னிய துன்னலர் துணுக்கம் சுற்றுற,
என் இவண் வரவு? நீ யாரை? என்று, அவன்
தன்மையை வினாயினான்-கூற்றின் தன்மையான்.
தாமரைக் கிழவனோ? தறுகண் பல் தலைப்
பூமி தாங்கு ஒருவனோ?-பொருது முற்றுவான்,
நாமமும் உருவமும் கரந்து நண்ணினாய்!
குன்று இசைத்து அயில் உற எறிந்த கொற்றனோ?
தென் திசைக் கிழவனோ? திசை நின்று ஆட்சியர்
என்று இசைக்கின்றவர் யாருள், யாவன் நீ?
வந்துற விடுத்தது ஓர் வய வெம் பூதமோ?
முந்து ஒரு மலருளோன், "இலங்கை முற்றுறச்
சிந்து" எனத் திருத்திய தெறு கண் தெய்வமோ?
ஆர் உனை விடுத்தவர்? அறிய, ஆணையால்
சோர்விலை சொல்லுதி என்னச் சொல்லினான்-
வேரொடும் அமரர்தம் புகழ் விழுங்கினான்.
அனுமனின் விடை
புல்லிய வலியினோர் ஏவல் பூண்டிலென்;
அல்லி அம் கமலமே அனைய செங் கண் ஓர்
வில்லிதன் தூதன் யான்; இலங்கை மேயினேன்.
முனைவரும், அமரரும், மூவர் தேவரும்,
எனையவர் எனையவர் யாவர், யாவையும்,
நினைவு அரும் இரு வினை முடிக்க, நின்றுளோன்;
கூட்டிய படையும், தேவர் கொடுத்த நல் வரமும், கொட்பும்,
தீட்டிய வாழ்வும், எய்தத் திருத்திய வாழ்வும் எல்லாம்,
நீட்டிய பகழி ஒன்றால், முதலொடு நீக்க நின்றான்;
காவலர் அல்லன்; ஈசன் கைலைஅம்கிரியும் அல்லன்;
மூவரும் அல்லன்; மற்றை முனிவரும் அல்லன்; எல்லைப்
பூவலயத்தை ஆண்ட புரவலன் புதல்வன் போலாம்;
மா தவம் சார்ந்த தீரா வரங்களும், மற்றும், முற்றும்,
யாது அவன் நினைந்தான், அன்ன பயத்தன; ஏது வேண்டின்,
வேதமும் அறனும் சொல்லும் மெய் அறமூர்த்தி, வில்லோன்;
ஆரணம் காட்டமாட்டா அறிவினுக்கு அறிவும், அன்னான்;
போர் அணங்கு இடங்கர் கவ்வ, பொது நின்று, "முதலே" என்ற
வாரணம் காக்க வந்தான் அமரரைக் காக்க வந்தான்;
காலமும், கணக்கும், நீத்த காரணன்-கை வில் ஏந்தி,
சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து, தொல்லை
ஆலமும் மலரும் வெள்ளிப் பொருப்பும்விட்டு,-அயோத்தி வந்தான்;
திறம் தெரிந்து, உலகம் பூணச் செந் நெறி செலுத்தி, தீயோர்
இறந்து உக நூறி, தக்கோர் இடர் துடைத்து, ஏக, ஈண்டுப்
பிறந்தனன் - தன் பொன்-பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான்.
நன்னுதல் தன்னைத் தேடி நாற் பெருந் திசையும் போந்த
மன்னரில், தென்பால் வந்த தானைக்கு மன்னன், வாலி-
தன் மகன், அவன்தன் தூதன் வந்தனென், தனியேன் என்றான்.
அனுமனிடம் இராவணன் வாலியின் நலனை உசாவுதல்
மின் திரிந்தென்ன நக்கு, வாலி சேய் விடுத்த தூத!
வன் திறல் ஆய வாலி வலியன்கொல்? அரசின் வாழ்க்கை
நன்றுகொல்? என்னலோடும், நாயகன் தூதன் நக்கான்.
வாலி மடிந்த செய்தியை அனுமன் தெரிவித்தல்
வெஞ் சின வாலி; மீளான்; வாலும் போய் விளிந்தது அன்றே;
அஞ்சன மேனியான்தன் அடு கணை ஒன்றால் மாழ்கித்
துஞ்சினன்; எங்கள் வேந்தன், சூரியன் தோன்றல் என்றான்.
நடந்த நிகழ்ச்சிகள் குறித்து இராவணன் கேட்டல்
இன் உயிர் உண்டது? இப்போது யாண்டையான் இராமன் என்பான்?
அன்னவன் தேவிதன்னை அங்கதன் நாடலுற்ற
தன்மையை உரைசெய்க என்ன, சமீரணன் தனயன் சொல்வான்:
நிகழ்ந்தனவற்றை அனுமன் விவரித்தல்
ஆவி ஒன்று ஆக நட்டான்; "அருந் துயர் துடைத்தி" என்ன,
ஓவியர்க்கு எழுத ஒண்ணா உருவத்தன், உருமையோடும்
கோ இயல் செல்வம் முன்னே கொடுத்து, வாலியையும் கொன்றான்;
மேய வெஞ் சேனை சூழ வீற்று இனிது இருந்த வீரன்,
"போயினிர் நாடும்" என்ன, போந்தனம், புகுந்தது ஈது என்று,
ஏயவன் தூதன் சொன்னான். இராவணன் இதனைச் சொல்வான்:
இராவணன் சுக்கிரீவன் முதலியோரது செய்கையை இகழ்தல்
வெங் கொலை அம்பின் கொன்றார்க்கு ஆள்-தொழில் மேற்கொண்டீரேல்,
எங்கு உலப்புறும் நும் சீர்த்தி? நும்மொடும் இயைந்தது என்றால்,
மங்குலின் பொலிந்த ஞாலம் மாதுமை உடைத்து மாதோ!
உம் இனத் தலைவன் ஏவ, யாது எமக்கு உரைக்கலுற்றது?
எம் முனைத் தூது வந்தாய்! இகல் புரி தன்மை என்னை?
நும்மினைக் கொல்லாம்; நெஞ்சம் அஞ்சலை; நுவல்தி என்றான்.
அனுமன் இராவணனை நோக்கி உரைத்தல்
புணர்த்து நோக்கி, பொது நின்ற நீதியை
உணர்த்தினால், அது உறும் என, உன்ன அருங்
குணத்தினானும், இனையன கூறினான்:
ஏது ஒன்றிய நீதி இயைந்தன;
சாது என்று உணர்கிற்றியேல், தக்கன,
கோது இறந்தன, நின் வயின் கூறுவாம்:
சிறிதும் நோக்கலை; தீமை திருத்தினாய்;
இறுதி உற்றுளது; ஆயினும், இன்னும் ஓர்
உறுதி கேட்டி; உயிர் நெடிது ஓம்புவாய்!
வாயில் தீர்வு அரிதாகிய மா தவம்-
காயின் தீர்வு அருங் கேடு அருங் கற்பினாள்,
தீயின் தூயவளைத் துயர் செய்ததால்.
நின்று வீந்தது; அலால், நிறை நிற்குமோ?
ஒன்று வீந்தது, நல் உணர் உம்பரை
வென்று வீங்கிய வீக்கம், மிகுத்ததால்.
வாய்மை நீக்கினை; மா தவத்தால் வந்த
தூய்மை, தூயவள்தன்வயின் தோன்றிய
நோய்மையால் துடைக்கின்றனை; நோக்கலாய்!
மறந்து, தம்தம் மதியின் மயங்கினார்,
இறந்து இறந்து, இழிந்து ஏறுவதே அலால்,
அறம் திறம்பினர், ஆர் உளர் ஆயினார்?
ஈமத்தால் மறைந்தார், இள மாதர்பால்
காமத்தால் இறந்தார், களி வண்டு உறை
தாமத் தாரினர், எண்ணினும் சால்வரோ?
இருள் உண்டாம் என எண்ணலர்; ஈதலும்,
அருளும், காதலின் தீர்தலும், அல்லது, ஓர்
தெருள் உண்டாம் என எண்ணலர் - சீரியோர்.
நச்சி, நாளும் நகை உற, நாண் இலன்,
பச்சை மேனி புலர்ந்து, பழி படூஉம்
கொச்சை ஆண்மையும், சீர்மையில் கூடுமோ?
போத நீதியர், ஆர் உளர் போயினார்?
வேத நீதி விதி வழி மேல்வரும்
காதல் நீ அறத்து எல்லை கடத்தியோ?
மறுப்பு உண்டாயபின், வாழ்கின்ற வாழ்வினின்,
உறுப்பு உண்டாய் நடு ஓங்கிய நாசியை
அறுப்புண்டால், அது அழகு எனல் ஆகுமே.
ஈர்-ஐஞ்ஞூறு தலை உள; என்னினும்,-
ஊரை ஞூறும் கடுங் கனல் உட்பொதி
சீரை ஞூறு, அவை-சேமம் செலுத்துமோ?
நரம்பு இழைத்த நின் பாடலின் நல்கிய
வரம் பிழைக்கும்; மறை பிழையாதவன்
சரம் பிழைக்கும் என்று எண்ணுதல் சாலுமோ?
நூறி, நொய்தினை ஆகி, நுழைதியோ?-
வேறும், இன்னும் நகை ஆம் வினைத் தொழில்
தேறினார் பலர் காமிக்கும் செவ்வியோய்!
சிறந்துளார், மற்றும் தேவர்க்கும் தேவர் ஆய்
இறந்துளார், பிறர் யாரும், இராமனை
மறந்துளார் உளர் ஆகிலர்; வாய்மையால். 1
ஓது பல் கிளையும், உயிரும் பெற,
சீதையைத் தருக" என்று எனச் செப்பினான்,
சோதியான் மகன், நிற்கு எனச் சொல்லினான்.
குன்றின் வாழும் குரங்குகொலாம்! இது
நன்று! நன்று! என மா நகை செய்தனன் -
வென்றி என்று ஒன்றுதான் அன்றி வேறு இலான்.
இருக்க; நிற்க; நீ, என்கொல், அடா! இரும்
புரத்தினுள் தரும் தூது புகுந்தபின்
அரக்கரைக் கொன்றது? அஃது உரையாய்! என்றான்.
வாட்டினேன்; என்னைக் கொல்ல வந்தார்களை
வீட்டினேன்; பின்னும் மென்மையினால் உந்தன் -
மாட்டு வந்தது, காணும் மதியினால்.
மின்னும் வாள் எயிற்றின், சினம் வீங்கினான்;
கொல்மின் என்றனன்; கொல்லியர் சேர்தலும்,
நில்மின் என்றனன், வீடணன் நீதியான்.
நீண்ட கையன் வணங்கினன்; நீதியாய்,
மூண்ட கோபம் முறையது அன்றாம் எனா,
வேண்டும் மெய் உரை பைய விளம்பினான்:
தந்தவன், அன்புக்கு ஆன்ற தவ நெறி உணர்ந்து, தக்கோய்!
இந்திரன் கருமம் ஆற்றும் இறைவன் நீ: "இயம்பு தூது
வந்தனென்" என்ற பின்னும், கோறியோ, மறைகள் வல்லோய்?
வேதம் உற்று இயங்கு வைப்பின், வேறு வேறு இடத்து வேந்தர்,
மாதரைக் கொலை செய்தார்கள் உளர் என வரினும், வந்த
தூதரைக் கொன்றுளார்கள் யாவரே, தொல்லை நல்லோர்?
மிகைப் புலன் அடக்கி, மெய்ம்மை விளம்புதல் விரதம் பூண்ட
தகைப் புலக் கருமத்தோரைக் கோறலின், தக்கார் யார்க்கும்
நகைப் புலன் பிறிது ஒன்று உண்டோ ? நம் குலம் நவை இன்றாமே!
அத் தலை நம்மை நோனா அமரர்க்கும், நகையிற்றாமால்;
எத் தலை உலகும் காக்கும் வேந்த! நீ, வேற்றோர் ஏவ,
இத் தலை எய்தினானைக் கொல்லுதல் இழுக்கம்; இன்னும்,
"விளைவு உரை" என்று விட்டார், வீரர் ஆய், மெய்ம்மை ஓர்வார்;
களைதியேல் ஆவி, நம்பால் இவன் வந்து கண்ணின் கண்ட
அளவு உரையாமல் செய்தி ஆதி என்று, அமையச் சொன்னான்.
கொல்லல் பழுதே - போய் அவரைக் கூறிக் கொணர்தி கடிது என்னா,
தொல்லை வாலை மூலம் அறச் சுட்டு, நகரைச் சூழ்போக்கி,
எல்லை கடக்க விடுமின்கள் என்றான்; நின்றார் இரைத்து எழுந்தார்.
தூய பாசம் எனைப் பலவும் கொணர்ந்து பிணிமின் தோள் என்னா,
மேய தெய்வப் படைக்கலத்தை மீட்டான், அமரர் போர் வென்றான்;
ஏ எனாமுன், இடைபுக்கு, தொடை வன் கயிற்றால் பிணித்து ஈர்த்தார்.
வீட்டின் ஊசல், நெடும் பாசம் அற்ற; தேரும், விசி துறந்த;
மாட்டும் புரவி ஆயம் எலாம், மருவி வாங்கும் தொடை அழிந்த;
பூட்டும் வல்லி மூட்டோ டும் புரசை இழந்த, போர் யானை!
எண்ணற்கு அரிய ஏனையரை இகலின் பறித்த-தமக்கு இயைந்த
பெண்ணிற்கு இசையும் மங்கலத்தின் பிணித்த கயிறே இடை பிழைத்த-
கண்ணில் கண்ட வன் பாசம் எல்லாம் இட்டு, கட்டினார்.
விடுவித்து அளித்தார், தெவ்வரே; வென்றேன் அன்றோ இவர் வென்றி;
சுடுவிக்கின்றது, "இவ் ஊரைச் சுடுக" என்று உரைத்த துணிவு என்று,
நடு உற்று அமைய உற நோக்கி, முற்றும் உவந்தான் - நவை அற்றான்.
வெய்ய அரக்கர் புறத்து அலைப்ப, வீடும் உணர்ந்தே, விரைவு இல்லா
ஐயன், விஞ்சைதனை அறிந்தும் அறியாதான் போல், அவிஞ்சை எனும்
பொய்யை மெய்போல் நடிக்கின்ற யோகி போன்றான்; போகின்றான்.
போந்து, புறம் நின்று இரைக்கின்ற பொறை தீர் மறவர் புறம் சுற்ற,
ஏந்து நெடு வால் கிழி சுற்றி, முற்றும் தோய்த்தார், இழுது எண்ணெய்;
காந்து கடுந் தீக் கொளுத்தினார்; ஆர்த்தார், அண்டம் கடி கலங்க.
பக்கம் பக்கம் இரு கூறு ஆய், நூறாயிரவர் பற்றினார்;
புக்க படைஞர் புடை காப்போர் புணரிக் கணக்கர்; புறம் செல்வோர்,
திக்கின் அளவால்; அயல் நின்று காண்போர்க்கு எல்லை தெரிவு அரிதால்.
சிந்த நூறி, சீதையொடும் பேசி, மனிதர் திறம் செப்ப
வந்த குரங்கிற்கு உற்றதனை, வம்மின், காண வம் என்று,
தம்தம் தெருவும், வாயில்தொறும், யாரும் அறியச் சாற்றினார்.
ஈர்த்தார்; முரசம் எற்றினார்; இடித்தார்; தெழித்தார், எம் மருங்கும்
பார்த்தார்; ஓடிச் சானகிக்கும் பகர்ந்தார்; அவளும் உயிர் பதைத்தாள்;
வேர்த்தாள்;உலந்தாள்;விம்மினாள்;விழுந்தாள்;அழுதாள்;வெய்து உயிர்த்தாள்.
நாயே அனைய வல் அரக்கர் நலியக் கண்டால், நல்காயோ?
நீயே உலகுக்கு ஒரு சான்று; நிற்கே தெரியும் கற்பு; அதனில்
தூயேன் என்னின், தொழுகின்றேன்,-எரியே!-அவனைச் சுடல்! என்றாள்.
ஒளித்த வெங் கனலவன் உள்ளம் உட்கினான்;
தளிர்த்தன மயிர்ப் புறம் சிலிர்ப்ப, தண்மையால்,
குளிர்ந்தது, அக் குரிசில் வால், என்பு கூரவே.
கற்றை வெங் கனலி, மற்றைக் காயத் தீ, முனிவர் காக்கும்
முற்றுறு மும்மைச் செந் தீ, முப்புரம் முருங்கச் சுட்ட
கொற்றவன் நெற்றிக் கண்ணின் வன்னியும், குளிர்ந்த அன்றே.
குண்டமும் குளிர்ந்த; மேகத்து உரும் எலாம் குளிர்ந்த; கொற்றச்
சண்ட வெங் கதிர ஆகித் தழங்கு இருள் விழுங்கும் தா இல்
மண்டலம் குளிர்ந்த; மீளா நரகமும் குளிர்ந்த மாதோ.
நிற்பினும் சுடாது நின்ற நீர்மையை நினைவில் நோக்கி,
அற்பின் நார் அறாத சிந்தை அனுமனும், சனகன் பாவை
கற்பினால் இயன்றது என்பான், பெரியது ஓர் களிப்பன் ஆனான்.
பெற்றிலன் எனினும், ஆண்டு, ஒன்று உள்ளது பிழை உறாமே,
மற்று உறு பொறி முன் செல்ல, மறைந்து செல் அறிவு மான,
சுற்றிலா அரக்கர் தாமே காட்டலின், தெரிய, கண்டான்.
வழு உறு காலம் ஈது என்று எண்ணினன், வலிதின் பற்றித்
தழ்வினன், இரண்டு நூறாயிரம் புயத் தடக் கை தாம்போடு
எழு என நால, விண்மேல் எழுந்தனன்; விழுந்த எல்லாம்.
முற்றினார் உலந்தார்; ஐயன், மொய்ம்பினோடு உடலை மூழ்கச்
சுற்றிய கயிற்றினோடும் தோன்றுவான், அரவின் சுற்றம்
பற்றிய கலுழன் என்ன, பொலிந்தனன் விசும்பின் ஓர்பால்.
பன்னின பொருளும், நாண, பாதகர் இருக்கை பற்ற,
மன்னனை வாழ்த்தி, பின்னை வயங்கு எரி மடுப்பென் என்னா,
பொன் நகர் மீதே, தன் போர் வாலினைப் போக விட்டான்.
எப் புறத்து அளவும் தீய, ஒரு கணத்து எரித்த கொட்பால்,
துப்பு உறழ் மேனி அண்ணல், மேரு வில் குழைய, தோளால்
முப்புரத்து எய்த கோலே ஒத்தது-அம் மூரிப் போர் வால்.
தெள்ளிய கடவுள்-தச்சன் கை முயன்று அரிதின் செய்த
தள்ள அரு மனைகள்தோறும், முறை முறை தாவிச் சென்றான்;
ஒள் எரியோடும், குன்றத்து ஊழி வீழ் உருமொடு ஒத்தான்.
பால் வரு பசியன், அன்பால் மாருதி வாலைப் பற்றி,
ஆலம் உண்டவன் நன்று ஊட்ட, உலகு எலாம் அழிவின் உண்ணும்
காலமே என்ன மன்னோ, கனலியும் கடிதின் உண்டான்.
தாருடைத் தனி மலர் உலகின் தாதையும்,
ஓர் உடல்கொண்டு, தம் உருவம் மாற்றினர்,
பாரிடைப் புகுந்தனர் பகைத்து என்பார் பலர்.
அனுமனை அமர்க் களம் நின்று, வஞ்சகர்
புனை திரு நகரிடைக் கொண்டு போதலை
நினையினர், நெடிதுற நெருக்கி நேர்ந்துளார்.
நிரம்பு சில்லரிப் பாணியும், குறடும், நின்று இசைப்ப,
அரம்பை மங்கையர் அமிழ்து உகுத்தாலன்ன பாடல்
வரம்பு இல் இன்னிசை, செவிதொறும் செவிதொறும் வழங்க,
கூடினார் முகக் களி நறை ஒரு முகம் குடிப்ப,
பாடினார் முகத்து ஆர் அமுது ஒரு முகம் பருக,
ஆடினார் முகத்து அணி அமுது ஒரு முகம் அருந்த,
மூவரொடு மா மந்திரம் ஒரு முகம் முயல,
பாவகாரிதன் பாவகம் ஒரு முகம் பயில,
பூவை சானகி உருவெளி ஒரு முகம் பொருந்த,
நீந்தி ஏறுவது எங்ஙன்? என்று ஒரு முகம் நினைய,
சாந்து அளாவிய கொங்கை நன் மகளிர் தற்சூழ்ந்தார்
ஏந்தும் ஆடியின் ஒரு முகம் எழிலினை நோக்க,
தன் ஒர் ஆற்றலின் மாருதி சாற்றுவான்:
என் ஒர் நாயகன் ஏவலின், வாரிதி-
தன்னைத் தாண்டி வந்தேன், உனைக் காணவே.
அன்னவர்க்கு இறுதி ஆக, அணி நகர் அழிப்பல் என்னா,
செந் நிறச் சிகைய வெம் போர் மழு, பின்னர்ச் சேறல் ஒக்கும்-
அல் நிறத்து அண்ணல் தூதன் அனல் கெழு கொற்ற நீள் வால்.
சிகைக் கொழுங் கனலை வீசும் செயல் முனம் பயில்வான் போல,
மிகைத்து எழு தீயர் ஆயோர் விரி நகர் வீய; போர் வால்-
தகைத்தல் இல் நோன்மை சாலும் தனி வீரன் - சேணில் உய்த்தான்.