திருபாய் மற்றும் வி.பி.சிங்

திருபாய் மற்றும் வி.பி.சிங்

bookmark

ராஜீவ் காந்திக்கு பிறகு இந்தியாவின் பிரதமரான விஸ்வநாத் பிரதாப் சிங் உடன் திருபாய்க்கு சுமூகமான உறவுகள் இருக்கவில்லை. 1985-ஆம் ஆண்டில், தூய்மைப்பட்ட டெரிப்தாலிக் அமிலத்தை இறக்குமதி செய்வதை திறந்த பொது உரிம வகையில் இருந்து வி.பி.சிங் திடீரென்று நிறுத்தி விட்டார். பாலியஸ்டர் இழை நூல் உற்பத்தியில் இது ஒரு வெகு முக்கிய மூலப்பொருளாகும். ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு செயல்பாடுகளைத் தொடர்வதை இது கடினமாக்கியது. அரசாங்க ஆணை விநியோகிக்கப்படும் நாளன்று ஒரு முழு ஆண்டிற்கு தேவையான தூய்மை படுத்தப்பட்ட டெரிப்தாலிக் அமிலத்தை இறக்குமதி செய்ய தேவையான கடன்தொகை உத்தரவாத கடிதத்தை பல்வேறு நிதி நிறுவனங்களிடம் இருந்தும் ரிலையன்ஸ் பெற்று விட்டது.

1990-ஆம் ஆண்டில், லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற ரிலையன்ஸ் குழுமம் செய்த முயற்சிகளுக்கு இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மற்றும் பொதுக் காப்பீட்டு நிறுவனம் ஆகிய அரசு நிறுவனங்கள் முட்டுக்கட்டை போட்டன. தோல்வியை உணர்ந்த அம்பானிகள், நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருந்து இராஜினாமா செய்தனர். 1989 ஏப்ரலில் எல்&டி தலைவர் ஆகியிருந்த திருபாய் தனது பதவியை ராஜினாமா செய்ய, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாயவின் முன்னாள் தலைவரான டி.என். கோஷ் தலைவரானார். திருபாயின் வரி ஏய்ப்பினை கண்டுபிடித்ததன் நேரடியான விளைவு தான் வி.பி.சிங் பாதுகாப்பு அமைச்சராக மாற்றப்பட்டது என்றும் கருதப்படுகிறது.